உயிரோவியங்களைப் பயன்படுத்தி கதை சொல்ல ஊக்குவிக்கும் கதை நேரம் 2.0

உயிரோவியங்களைப் பயன்படுத்தி கதை சொல்ல ஊக்குவிக்கும் கதை நேரம் 2.0

2 mins read
25166bb6-44f9-45e8-b708-f217dfb9b854
கேலிச்சித்திரக் கதை எழுதும் போட்டியில் முதல் மூன்று பரிசுகளைத் தட்டிச் சென்ற மாணவர்கள் கண்ணன் ஹரிஷ்ஜனன் (இடது), டி. கிஷன் (வலது), சிந்தியா ஆரோக்கிய ரொவீனா (நடுவில்). படம்: நவீன் ராஜ் -

'கிரி­யே­டிவ் ஹேண்ட்ஸ்' நிறு­வ­னம், சென்ற மாத இறு­தி­யில் சிறு­வர்­க­ளுக்­காக ஒலி­வ­டி­வி­லான கதைப்­புத்­த­கங்­க­ளை­யும் உயி­ரோ­வி­யக் கதை­க­ளை­யும் 'கதை நேரம் 2.0' என்­னும் நிகழ்ச்­சி­யின் மூலம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

கேலிச்­சித்­தி­ரக் கதை எழு­தும் போட்­டி­யின் வெற்­றி­யா­ளர்­களை அங்­கீ­க­ரிக்­கும் வித­மா­க­வும் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்­நிகழ்ச்சி தேசிய நூல­கத்­தின் 'பொட்' அரங்­கில் நடை­பெற்­றது.

"ஆத்­தி­ரம் கொள்­ளும் ஆ", "சேர்ந்தே இருப்­பது வலிமை", "எதை வாங்­க­லாம்?","தீனா" என வெவ்­வேறு எழுத்­தா­ளர்­க­ளால் எழு­தப்­பட்ட நான்கு கதை­க­ளுக்கு உயி­ரோ­விய வடி­வம் கொடுத்­தார் 'கிரி­யே­டிவ் ஹேண்ட்­ஸின்' நிறு­வ­னர் ஜெகன்­னாத் ராமா­னு­ஜம்.

உள்­ளூர் பாணி­யைத் தழு­வி உருவாக்கப்பட்ட இந்த உயி­ரோ­வி­யக் கதை­கள் கண்­க­ளுக்கு விருந்­த­ளிப்­ப­தோடு சிறு­வர்­க­ளின் சொல்­வ­ளத்தை மேம்­ப­டுத்­தவும் வாய்ப்பளிக்கின்றன.

தமி­ழில் அமைந்­துள்ள இந்த உயி­ரோ­வி­யக் கதை­களில், கதை­யின் முடி­வைத் தேர்ந்­தெ­டுக்க சிறு­வர்­க­ளுக்கு வாய்ப்பு வழங்­கப்­ப­டு­கின்­றது. சுயமாக சிந்தித்து முடி­வெ­டுக்­கும் திறனை அவர்­க­ளி­டம் வளர்ப்­ப­தோடு சில நன்­னெ­றிப் பண்­பு­க­ளை சிறுவர்கள் கற்­றுக்­கொள்­ள­வும் இது வகை­செய்­கிறது.

பொது­மக்­க­ளுக்­காக எழுத்­தா­ளர் செல்­வ­ரா­ணி­யின் 'மர்ம மணம்', 'ஜவ் கொய்த்­தி­யாவ்' ஆகிய கதை­க­ளு­டன், எழுத்தாளர் ஹரி­ஹ­ர­னின் 'அம்மு', 'பய­ணம்' ஆகிய கதை­களும் ஒலி வடி­வ­மாக்­கப்­பட்­டுள்­ளன. www.kathaineram.com என்­ற இணை­யப்­பக்­கத்­தில் இவற்­றைக் கேட்­க­லாம்.

சென்ற மாதம் உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளுக்­கான கேலிச்­சித்­தி­ரக் கதை எழு­தும் போட்­டியை நடத்­தி­யது 'கிரி­யே­டிவ் ஹேண்ட்ஸ்'.

ஏற்­கெனவே வரை­யப்­பட்ட படங்­க­ளுக்கு வச­னங்­கள் எழு­து­வ­தற்கு 'ஸ்பீச் பப்­பல்ஸ்' கொடுக்­கப்­பட்­டன.

இளை­யர்­கள் தங்­கள் சொந்த கதைக் களத்தை உரு­வாக்கி வச­னங்­க­ளை­யும் எழு­தி­னார்­கள். அவர்­க­ளின் படைப்­புத் திறன், மொழி வளம், புத்­தாக்கச் சிந்­தனை ஆகி­யவை போட்­டி­யில் சோதிக்­கப்­பட்­டன.

கூடிய விரை­வில், சிண்­டா­, கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து தமிழில் கேலிச்­சித்­தி­ரம் வரை­யும் பயி­ல­ரங்­கு­களை நடத்­த­த் திட்டமிட்டுள்ளது 'கிரி­யே­டிவ் ஹேண்ட்ஸ்'.

2019ஆம் ஆண்டு நவம்­ப­ரில் இந்த நிறு­வ­னத்­தைத் தொடங்­கிய ஜெகன்­னாத், உள்­ளூர் தொடர்­புத்­துறை நிறு­வ­னங்­க­ளுக்­கும் பதிப்­ப­கங்­க­ளுக்­கும் உயி­ரோ­விய முறை­யில் பல்­வேறு படைப்­பு­க­ளை உருவாக்கித் தந்துள்ளார்.

செய்தி:

மாதங்கி இளங்­கோ­வன்