ஹர்ஷிதா பாலாஜி
சிங்கப்பூரின் பிரபல மூத்த நாடகக் கலைஞர்களிடமிருந்து பல்வேறு திறன்களைக் கற்றுக்கொள்ள உதவும் நாடகப் பயிலரங்கை நடத்தவுள்ளது அவான்ட் நாடகக்குழு.
பயிலரங்கு ஜூன் 18,19 ஆகிய தேதிகளில் ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையத்தில் காலை 11 மணியில் இருந்து மாலை நான்கு மணிவரை நடைபெறும். 13 வயதுக்கு மேற்பட்டோர் இதில் கலந்துகொள்ளலாம்.
சிங்கப்பூர் மேடை நாடக நடிகர்களை ஒன்றிணைக்கும் முழு நீள நகைச்சுவை நாடகம் '4ஜி'.
முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வசிக்கும் ஐந்து முதியவர்களை இது மையப்படுத்துகிறது. இந்த ஐவரும் கொவிட்-19 கிருமித்தொற்றை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்று இது சித்திரிக்கவுள்ளது.
புதிய கொவிட்-19 பாதுகாப்பு முறைகள், அவை தொடர்பான விதிமுறைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் இந்த முதியோரின் நகைச்சுவைச் செயல்பாடுகளை உள்ளூர்க் கலைஞர்கள் நம் கண்முன் நிறுத்துவர் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
நாடகப் பயிலரங்கு பற்றியும் '4ஜி' நாடகத்தைப் பற்றியும் மேலும் தெரிந்துகொள்ள விரும்புவோர் https://avanttheatre.com/workshops எனும் இணைய முகவரியை நாடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

