கேலாங் மேற்கு சமூக மன்றத்தின் அன்னையர் தினப் பட்டிமன்றம்

கேலாங் மேற்கு சமூக மன்றத்தின் அன்னையர் தினப் பட்டிமன்றம்

1 mins read
cad91eee-bb76-4e80-864d-675ce9f5c5cd
செய்தி, படம்: கேலாங் மேற்கு சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு -

கேலாங் மேற்கு சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு அன்­னை­யர் தினத்தை ஒட்டி, சென்ற சனிக்­கி­ழமை மாலை நேரடி நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தது.

சிறப்பு அம்­ச­மாக இன்­றைய வாழ்க்­கை­யில் நண்­பர்­கள் நம்மை ஏணி­யாக உயர்த்­து­கி­றார்­களா? சறுக்கு மர­மா­கத் தாழ்த்­து­கி­றார்­களா? என்ற தலைப்­பி­லான பட்­டி­மன்­றம் இடம்­பெற்­றது.

திரு அ. முஹம்­மது பிலால் நடு­வ­ராக இருந்த பட்­டி­மன்­றத்­தில் நபிலா நஸ்­ரின், சுரேஷ் கெள­ஷிக், முத்து சுவேதா ஆகி­யோர் நண்­பர்­கள் ஏணி­யாக உயர்த்­து­கி­றார்­கள் என்ற அணி­யில் தங்­கள் வாதங்­களை எடுத்­துக்­கூ­றி­னர்.

வெண்­ணிலா அசோ­கன், ஹரி­வர்த்­தினி மோகன், அர்­ஷத் ஆகி­யோர் நண்­பர்­கள் சறுக்கு மர­மாக நம்­மைத் தாழ்த்­து­கி­றார்­கள் என்ற அணி­யில் வாதிட்­ட­னர்.

நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ராக கேலாங் மேற்கு சமூக மன்ற மேலாண்­மைக்­கு­ழுத் தலை­வர் குவா சூன் யாவ் கலந்­து­கொண்­டார்.

தமிழ் மொழியை இளை­யர்­களும் மாண­வர்­களும் பேச ஊக்­க­ம­ளிக்­கும் கேலாங் மேற்கு சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வின் நட­வ­டிக்­கை­களை அவர் பாராட்­டி­னார்.

ஐம்­பது பேர் நேரி­லும் 'ஸூம்', 'ஃபேஸ்புக்' நேரலை ஆகி­ய­வற்­றின் வாயி­லா­கப் பல­ரும் இந்­நி­கழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

இரு அணி­யி­ன­ரும் முன்­வைத்த சுவை­யான வாதங்­க­ளுக்­குப் பின்­னர் நடு­வர் முஹம்­மது பிலால் தமது கருத்­து­க­ளைக் கூறி இன்­றைய வாழ்க்­கை­யில் நண்­பர்­கள் நம்மை ஏணி­யாக உயர்த்­து­கி­றார்­கள் எனத் தீர்ப்­ப­ளித்­தார்.