நிறுவனர்கள் நினைவிடத்துக்கு நினைவுச்சின்னங்களை பகிரக் கோரிக்கை

நிறுவனர்கள் நினைவிடத்துக்கு நினைவுச்சின்னங்களை பகிரக் கோரிக்கை

2 mins read
cd8985d8-f2a1-42da-9592-48981968c299
சிங்கப்பூரில் 1970களில் தயாரிக்கப்பட்ட 'ரோலெய்' 35 எல்இடி கேமராவின் மாதிரிப் பெருவடிவம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. படம்: தேசிய மரபுடைமைக் கழகம் -

கி. ஜனார்த்­த­னன்

சிங்­கப்­பூ­ரின் விழு­மி­யங்­க­ளைப் பிர­தி­ப­லிக்­கும் சின்­னங்­க­ளை­யும் அவை­கு­றித்த தக­வல்­க­ளை­யும் கொண்­டி­ருப்­ப­வர்­கள் முன்­வந்து அவற்­றைப் பகி­ரும்­படி தேசிய மர­பு­டைமைக் கழகம் கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

பெருந்­த­லை­வர்­கள் மட்­டு­மின்றி, புகழ் வெளிச்­சத்­திற்கு வரா­மலே சமூ­கத்­திற்­குப் பங்­காற்­றி­ய­வர்­க­ளு­டன் தொடர்­பு­டைய சின்­னங்­க­ளை­யும் இந்­திய சமூ­கத்­தி­ன­ரி­டம் இருந்து வர­வேற்­ப­தாகக் கழகம் குறிப்­பிட்­டது.

பொது­மக்­க­ளால் பொது­மக்­க­ளுக்­காக நிறு­வப்­படும் ஒன்­றாக சிங்­கப்­பூர் நிறு­வ­னர்­கள் நினை­வி­டம் விளங்­கும் எனக் குறிப்­பிட்ட மர­பு­டைமைக் கழகம், இந்­திய சமூ­கத்­தைச் சேர்ந்த நினை­வுச்­சின்­னங்­கள் தேவைப்­ப­டு­வ­தாக வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

நினை­வுச்­சின்­னங்­கள் 1950கள் முதல் 1970கள் வரை­யி­லான கால­கட்­டத்­தைச் சேர்ந்திருக்­க­வேண்­டும். சிங்­கப்­பூ­ரின் சுதந்­தி­ரத்­து­டன் தொடர்­பு­டைய தேசி­யக் கொள்கை, வர­லாற்று மைல்­கல் அல்­லது இந்­நாட்டை வடி­வ­மைத்த தலை­வர்­க­ளு­டன் தொடர்­பு­டைய கலா­சார பன்­மு­கத்­தன்மை, துணிச்­சல், வெளிப்­ப­டைத்­தன்மை, மீள்­தி­றன், நேர்மை, தன்­னை­வி­டப் பிறரை முன்­னி­லைப்­ப­டுத்­து­தல் ஆகிய பண்­பு­க­ளை­யும் அந்­தச் சின்­னங்­கள் பிர­தி­ப­லிக்க வேண்­டும்.

கரை­யோ­ரப் பூந்­தோட்­டத்­தில் தற்­போது உள்ள இந்­தச் சின்­னங்­கள் தொடர்­பான நக­ரும் கண்­காட்சி, சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு பகு­தி­களில் உள்ள கடைத்­தொ­கு­தி­கள், சமூக நிலை­யங்­கள், நூல­கங்­கள், பள்­ளி­கள் ஆகி­ய­வற்­றுக்கு 2023 பிப்­ர­வரி வரை தொடர்ந்து இடம் மாறும்.

இந்த நகரும் கண்­காட்­சி­யின் இணைய வடி­வத்தை மர­பு­டை­மைக் கழ­கத்­தின் இணை­யத்­த­ளத்­தில் காண­லாம்.

2015ஆம் ஆண்டு பொது­மக்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட கலந்­து­ரை­யா­டல்­கள்­வழி இந்த நினை­வ­கம் எங்கே நிறு­வப்­ப­ட­வேண்­டும், இதன் கட்­ட­மைப்பு, வடி­வம், பார்­வை­யா­ளர் அனு­ப­வம் போன்­றவை குறித்த கருத்­து­கள் திரட்­டப்­பட்­ட­தாக மர­பு­டைமைக் கழகம் தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சிக்­குப் பெரும் பங்­காற்­றிய தலை­வர்­க­ளு­டன் நீங்­கள் உரை­யா­டி­யி­ருந்­தால் அது­பற்­றிய கதை­கள், புகைப்­ப­டங்­கள் அல்­லது பொருள்­க­ளைப் பகி­ர­லாம் என்று நிறு­வ­னர்கள் நினை­விடத்­தின் செயற்­குழு உறுப்­பி­னர் துர்கா ராஜேந்­தி­ரன் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

"நாளைய தலை­மு­றை­யி­ன­ருக்­குப் பொக்­கி­ஷங்­க­ளாக இருக்­கக்­கூ­டிய சின்­னங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வது நாட்­டுக்­கான அருஞ்­சே­வை­யா­கும். இந்­தச் சின்­னங்­கள் புகழ்­பெற்ற தலை­வர்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வை­யாக இருக்­க­வேண்­டும் என்­றில்லை. பர­வ­லாக இன்­னும் அறி­யப்­ப­டாத சமூ­க சேவை­யா­ளர்­கள் அல்­லது உங்­க­ளுக்கே சொந்­த­மான சின்­னங்­களை புகைப்­ப­டம் எடுத்து அனுப்­ப­லாம்" என்று அவர் கூறி­னார்.