நாட்டின் புகழை உயர்த்த வீட்டின் ஆதரவுக்கரம்

நாட்டின் புகழை உயர்த்த வீட்டின் ஆதரவுக்கரம்

2 mins read

மாதங்கி இளங்­கோ­வன்

சிங்­கப்­பூர் குடியரசு ஆகா­யப்­ப­டை­யில் 25 ஆண்­டு­க­ளா­கப் பணி­பு­ரிந்து நீண்டநாள் சேவை பதக்­கத்­தைப் பெற்­றுள்­ளார் ஆகா­யப்­படை செயல்­மு­றை­கள், அமைப்­பு­களின் நிபு­ணர் மூன்­றாம் ராணுவ நிபு­ணர் (எம்இ3) உமா­தேவி கிருஷ்­ணன், 50. (படம்).

தேசத்­துக்­கான கட­மைக்­கா­க­வும் சேவைக்­கான அர்ப்­ப­ணிப்­புக்­கா­க­வும் மொத்­தம் 758 பேருக்கு தற்­காப்பு அமைச்­சும் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யும் இணைந்து மே 31ஆம் தேதி­யன்று நடை­பெற்ற தற்­காப்பு அமைச்­சின் தேசிய தின விருது நிகழ்ச்­சி­யில் விரு­து­களை வழங்­கின.

இளம் வய­தில் என்ன வேலைக்குச் செல்­வது என்று தெரி­யா­மல் பாலர்­பள்ளி ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றிய உமா­தேவி, ஐந்­தாண்­டு­க­ளுக்குப் பிறகு வேறு வாழ்க்­கைத்­தொ­ழி­லுக்கு மாற­லாம் என்ற முடிவை எடுத்­தார்.

பொருத்­த­மான வாழ்க்­கைத்­

தொ­ழில் பற்றி தெரிந்­து­கொள்ள பல பயி­ல­ரங்­கு­க­ளுக்­குச் சென்ற இவ­ரின் ஆர்­வத்­தைத் தூண்­டி­யது சிங்­கப்­பூர் குடியரசு ஆகா­யப்­ப­டை­ பயி­ல­ரங்கு.

உயர்­நி­லைப்­பள்­ளி­யில் தேசிய மாண­வர் காவல்­துறை படை­யி­லும் பல­வித நடன நிகழ்ச்­சி­க­ளி­லும் பங்­கேற்ற உமா­தேவி, ஆரோக்­கிய வாழ்க்­கை­

மு­றை­யைக் கடைப்­பி­டிக்க விரும்­பி­னார். ஆகா­யப்

­ப­டை­யில் புதிய திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்­வ­தோடு உட­லை­யும் ஆரோக்­கி­ய­மாக வைத்­துக்­கொள்­ள­லாம் என்­ப­தால் அவர் அதில் சேர்ந்­தார்.

தமது 25 ஆண்டு காலப் பய­ணத்­தில் பல புதிய சேவை அனு­ப­வங்­க­ளைப் பெற்ற உமா­தே­வி­யி­டத்­தில் 'பீஸ் வான்­கார்ட்' எனப்­படும் பணி­யில் ஈடு­பட்­டது பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

"அமெ­ரிக்­கா­வின் அரி­சோனா மாநி­லத்­தில் அமெ­ரிக்க ஆகா­யப்­ப­டை­யி­ன­ரு­டன் இணைந்து பணி­பு­ரிந்­த­தன் வழி பல புதிய திறன்­களை நான் கற்­றுக்­கொண்­டேன்.

"அவர்­க­ளு­டன் திட்­டங்­களில் ஈடு­பட்­டி­ருந்த அதே சம­யத்­தில் எனது கண­வ­ரும் பிள்­ளை­களும் என்­னோடு அமெ­ரிக்­கா­வுக்கு வந்­தி­ருந்­த­தால் அவர்­க­ளு­ட­னும் என்­னால் நேரம் செல­விட முடிந்­தது" என்­கிறார் அவர்.

ஆகா­யப்­ப­டைக்­காக அதிக நேரத்தை ஒதுக்­கிய உமா­தேவி, அதே நேரத்­தில் ஒரு குடும்­பத்­த­லை­வி­யா­க­வும் தாயா­க­வும் தனது கட­மை­க­ளைச் செய்­வ­தற்கு சிர­மப்­பட்­ட­தை­யும் கூறி­னார்.

"ஆகாயப்படையில் வீராங்கனை யாகப் பணிபுரியும் அதேநேரத்தில் எனது இரு மகன்களைக் கவனித்துக் கொள்ளும் கடமையும் எனக்கு உண்டு. சில சமயங்கள் இரண்டையும் சமாளிக்க கடினமாக இருந்தாலும் எனது கணவரும் எனது குடும்பத்தினரும் தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவு உதவி, ஆதரவை அளிக்கின்றனர். அதனால்தான் என்னால் இந்தச் சேவையை ஆற்றமுடிகிறது." என்றார் உமாதேவி.