தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துன்பம் பொறுக்காது தூண்டில் மீனாகத் துடிக்கும் அவலம்

2 mins read

ஹர்­ஷிதா பாலாஜி

இன்றைய சிங்­கப்­பூ­ரில் பெண்­

க­ளுக்கு கிடைக்­கக்­கூ­டிய உரி­மை­களைப் பற்­றி­யும் உத­வி­களைப் பற்­றி­யும் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த கலந்­து­ரை­யா­டல் ஒன்று நடத்­தப்­பட்­டது.

'கோபியோ' (Gopio) எனப்­படும் இந்­திய வம்­சா­வளியினருக்­கான உல­க­ளா­விய அமைப்­பின் சிங்­கப்­பூர் பெண்­கள் பிரிவு தனது முதல் நிகழ்ச்­சி­யான அந்­தக் கலந்­துரை­யா­டலை மெய்­நி­க­ராக நடத்­தி­யது.

ஜூன் 5ஆம் தேதி (ஞாயிற்­றுக்­கி­ழமை) நடை­பெற்ற இந்­நி­கழ்ச்­சி­யில் இரு பேச்­சா­ளர்­கள் உரை­யாற்­றி­னர்.

மூத்த வழக்­க­றி­ஞர் தேவி ஹரி­தாஸ் 1961ஆம் ஆண்­டில் அறி­

மு­கப்­ப­டுத்­தப்­பட்ட மாதர் சாச­னம் பற்றிப் பேசி­னார்.

அன்­றி­லி­ருந்து இன்று வரை பெண்­க­ளின் உரி­மை­க­ளைக் காப்­பது, சமு­தா­யத்­தில் பெண்­களை ஆணுக்­குச் சம­மான நிலைக்கு உயர்த்­து­வது என்­ப­ன­வற்­றில் அந்த சாச­னம் ஏற்­ப­டுத்­திய பயன்­களை பெண்­கள் தெரிந்­து­கொள்­ள­வேண்­டி­ய­தன் அவ­சி­யம் பற்றி அவர் குறிப்­பிட்­டார்.

"ஒரு பெண் தனது குடும்­பத்­தி­ன­ரு­டன் கொண்­டுள்ள உற­வு­கள் எப்­படி இருக்­க­வேண்­டும் என்ற முடிவை எடுக்­கும் உரிமை ஒரு காலத்­தில் சட்­டத்­தின் கையில் இருந்­தது. ஆனால், மாதர் சாச­னம் இதனை மாற்­றி­யது.

"அதன் மூலம் பிறந்த சுதந்­தி­ரத்தை பெண்­கள் அனு­ப­விக்­க­வேண்­டும் என்­றால் அதைப் பற்­றிய விழிப்­பு­ணர்­வை­க் கொண்­டி­ருப்­பது அவ­சி­யம்," என்­றார் திரு­வாட்டி தேவி.

இத­னை­ய­டுத்து, இன்­றைய சமு­தா­யத்­தில் பெண்­க­ள் சந்திக்கும் வன்­மு­றைகளுக்கு எதிராகக் குரல்­கொ­டுக்­கக்கூடிய அறி­வி­ய­லா­ளர் டாக்­டர் வாணி காரே உரை­யாற்­றி­னார்.

குறிப்­பாக, ஒரு பெண்­ணின் துணை­ ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய வன்­முறை எப்­ப­டிப்­பட்ட விதங்­களில் ஒரு­வரை தாக்­கக்­கூ­டும்; அதி­லி­ருந்து ஏன் தப்­பிக்க முடி­யா­மல் பெண்­கள் தவிக்­கின்­றார்­கள் என்பதைப் பற்­றிய விழிப்­பு­ணர்வை தனது உரை­யின்வழி ஏற்­ப­டுத்­தி­னார் டாக்­டர் வாணி.

"இச்­சூ­ழ­லில் வன்­முறை என்­றால் பெண்ணை அடிப்­பது அல்­லது உதைப்­பது மட்­டு­மல்ல. வார்த்தை களாலும் செயல்களாலும் மன­த்த­ள­வில் புண்­ப­டுத்­து­தல், பாலி­ய ல்

கொடுமை புரிதல், ஒரு­வ­ரின் ஒவ்­வோர் அசை­வை­யும் கண்­கா­ணித்­தல், பய­மு­றுத்துதல் ஆகி­ய­வை­யும் கூட வன்­மு­றை­யாகக் கரு­தப்­ப­ட­லாம்," என்­றார் டாக்­டர் வாணி.

அதே சம­யத்­தில், துணை­வர் என்­ப­தால் சமு­தா­யம் என்ன நினைக்­கும், குடும்­பத்­தி­னர் என்ன நினைப்­பார்­கள் என்பன போன்­ற­வற்­றால் தொடர்ந்து வன்­மு­றையை சகித்­துக்­கொள்­ள­வேண்­டிய அவ­ல­நிலை பெண்­களுக்கு ஏற்­ப­டு­கின்­றது என்­றும் அவர் கூறி­னார்.

இனிமேல் பெண்­கள் தங்­களை வன்­முறை மிகுந்த உற­வு­க­ளி­லி­ருந்து காப்­பாற்­றிக்­கொள்ள என்ன செய்­ய­லாம் என்ற கலந்­து­ரை­யா­ட­லுக்குப் பிறகு, பெண்­கள் தங்­க­ளுக்கு உத­வக்­கூ­டிய அமைப்­பு­கள் பற்றி தெரிந்­து­கொள்­ள­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார் டாக்­டர் வாணி.