மூத்த தலைமுறையின் சிரமம் விளக்கிய '4ஜி'

2 mins read
9ee40257-f2ac-435d-8b2a-313a5686787c
கலகலப்பை அள்ளி வழங்கிய காட்சிகளுள் ஒன்று. படம்: அவாண்ட் நாடகக் குழு -

கொவிட்-19 கிரு­மித்­தொற்று காலகட்­டத்­தில் அதி­கம் பாதிக்­கப்­பட்ட மூத்த தலை­மு­றை­யி­ன­ரின் நிலையை கண்­முன் காண்­பிக்க முயன்றது அவாண்ட் நாட­கக்­கு­ழு­வின் '4ஜி' நாட­கம். நான்கு தலை­மு­றை­க­ளைச் சேர்ந்த நடி­கர்­கள் நடித்­துள்ள இந்­நா­ட­கத்­தின் கதை முதி­யோர் பரா­ம­ரிப்பு இல்­லத்­தில் வசிக்­கும் ஐந்து முதி­ய­வர்­க­ளைச் சுற்றி நகர்­கிறது.

இவர்­கள் கொவிட்-19 தொடர்­பான சுகா­தார விதி­மு­றை­க­ளுக்­கும் கட்­டுப்­பா­டு­க­ளுக்­கும் எப்­படி தங்­களை பழக்­கப்­ப­டுத்­தி­க்கொள்­கின்­ற­னர், நோய் பர­வ­லால் அங்கு ஏற்­படும் மாற்­றங்­களை அவர்­க­ளது குடும்­பத்­தி­னர் எப்­படி சமா­ளிக்­கின்­ ற­னர் ஆகி­யன நாட­கத்­தின் முக்­கிய அங்­கங்­கள். இக்­காட்­சி­களை தத்­ரூ­ப­மாக மேடை­யேற்­றி­யதே நாட­கத்­தின் வெற்­றி­. நாட­கத்­தின் மைய­மாக ஐந்து கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்ள மூத்த நாட­கக் கலை­ஞர்­க­ளான திரு­மதி சித்ரா தேவி செல்­வ­லிங்­கம், திரு­மதி சண்­மு­கம் முத்­து­லட்­சுமி, திரு லிங்­கம், திரு லோகன் பொன்­னு­சாமி, திரு அக­மது அலி கான் ஆகி­யோ­ரின் பல்லாண்டு கால நாடக அனு­ப­வத்­தை­யும் திற­மை­யை­யும் இந்­நா­ட­கம் வெளிக்­கொ­ணர்ந்­தது. துணை நடி­கர்­கள் பலர் வந்து வந்து போனா­லும், இந்த ஐவரே பார்­வை­யா­ளர்­க­ளின் கவ­னத்தை பெரி­தும் ஈர்த்­த­னர்.

எழு­ப­து­க­ளி­லும் எண்­ப­து­க­ளி­லும் வெளி­வந்த தமிழ்ப் படங்­களில் இடம்­பெற்ற அதே வித­மான நகைச்­சுவையை இளை­யோ­ரைக் காட்­டி­லும் பெரி­ய­வர்­கள் அதி­க­மாக ரசித்­ த­னர். ஆயி­னும், நாட­கத்­தின் இறு­தி­யில் எல்­லா­ரை­யும் சிரிக்க வைத்­தார் ச. வடி­வ­ழ­கன்.

"கொவிட்-19 நோய்ப் பர­வல் பற்றி ஒரு நாட­கத்தை மேடை­யேற்ற வேண்­டும் என்ற ஆவல் தமக்கு எழுந்­த­தா­கக் கூறி­னார் நாட­கத்­தின் எழுத்­தா­ளர் முனை­வர் உமை­யாள் திருச்­செல்­வம்.

'giving.sg' இணை­யத்­த­ளத்­தின்­வழி திரட்­டப்­பட்­டி­ருந்த நன்­கொ­டை­யின் ஆத­ர­வு­டன் அரங்கேறிய நாட­கத்­தைக் காண ஸ்ரீ நாரா­யண மிஷன், சன்­லவ் ஹோம், மோண்ட் ஃபர்ட் கேர், @27 குடும்ப சேவை மையம் ஆகிய இல்­லங்­க­ளி­லி­ருந்து முதி­யோர் வந்திருந்தனர்.

"சிங்­கப்­பூ­ரில் நாங்­கள் மேடை நாட­கம் நடத்த கார­ணம் இங்­குள்ள அற்­பு­த­மான நடி­கர்­கள், குறிப்­பாக முன்­னோ­டி­கள். அவர்­க­ளின் உத்­வே­கம், ஊக்­கம், அன்பு ஆகி­ய­வை­தான் இந்த முயற்­சி­யின் உந்து சக்­தி­யா­கும்," என்­றார் '4ஜி' நாட­கத்­தின் இயக்­கு­நர் திரு க செல்வா.

"என்னைப் போன்ற மூத்த கலை­ ஞர்­கள் புது­மு­கங்­க­ளு­டன் சேர்ந்து நடித்­த­தில் பெருமை கொள்­கிறேன்," என்­றார் பிர­தான கதா­பாத்­தி­ரத்தில் தோன்றிய முத்­து­லட்­சுமி, 74.

அவரது மகனாக நடித்த தனராம் கூறுகையில், "சிறு வய­தி­லி­ருந்து நாட­கங்­களில் பார்த்து ரசித்த மூத்த க­லை­ஞர்­க­ளு­டன் சேர்ந்து நடிக்­கும் வாய்ப்பு கட­வு­ள் அரு­ளால் எனக்குக் கிடைத்­தது," என்றார்.