சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சைக்கிள் பயணம்

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சைக்கிள் பயணம்

3 mins read
0102be08-35be-4153-9520-57d0662f4d2e
தனது கனவுப் பயணத்துக்குத் தொழில்நுட்பம் கைகொடுத்தது என்கிறார் விகாஸ் எத்திராஜ். படம்: விகாஸ் எத்திராஜ் -

எஸ். விக்னேஸ்வரி

கர­டு­மு­ர­டான பாதை­கள், வசதி ஏதும் இல்­லாத கூடா­ரத்­தில் இர­வு­க­ளைக் கழிக்க வேண்­டிய நிலை, இவை எது­வும் 24 வய­தான விகாஸ் எத்­தி­ரா­ஜின் பய­ணக் கன­வைக் கலைக்­க­வில்லை.

உல­கைச் சுற்­றி­வ­ரு­வது இவ­ரது நெடு­நாள் ஆசை. ஆனால் மற்­ற­வர்­க­ளி­ட­மி­ருந்து மாறு­பட்ட முறை­யில் இந்­தப் பய­ணத்தை மேற்­கொள்ள விரும்­பி­னார். எனவே சைக்­கி­ளில் உல­கத்தை வலம்­வர முடி­வெ­டுத்­தார் இவர்.

கனவு காண்­ப­தோடு நின்­று­விடா­மல் தனது ஆசையை நிறை­வேற்­றும் முதல்­ப­டி­யாக பொறி­யா­ளர் வேலை­யி­லி­ருந்து வில­கி­னார்.

காடு, மேடு, பள்­ளம், மலை, மணல், வயல், சேறு எனப் பல்­வேறு நிலப் பரப்­பு­களில் பய­ணம் செய்­ய­வேண்டி வரும் என்­ப­தால் 'மவுண்­டன்' சைக்­கிளை வாங்­கிக் கொண்டார். சென்ற ஆண்டு நவம்­பர் 24ஆம் தேதி சென்­னை­யில் இருந்து சைக்­கி­ளில் புறப்­பட்­டார்.

இந்­தி­யா­வின் பல மாநி­லங்­க­ளைக் கடந்து நேப்­பா­ளத்­தைச் சென்­ற­டைந்­தார். அங்­கி­ருந்து மியன்­மார், கம்­போ­டியா, வியட்­னாம், தாய்­லாந்து, மலே­சியா, இந்­தோ­னீ­சியா என 8,000 கிலோ­மீட்­டர் தொலைவை சைக்­கி­ளில் கடந்து, சென்ற ஜூன் 19ஆம் தேதி சிங்­கப்­பூர் வந்­த­டைந்­தார்.

இது இவ­ரது கனவுப் பய­ணத்­தில் ஓர் அத்­தி­யாத்­தின் நிறைவு மட்­டுமே. உண்­மை­யில் சிங்­கப்­பூ­ரில் இருந்து விமா­னத்­தில் ஆஸ்­தி­ரே­லியா சென்று பின்­னர் அங்கு மீண்­டும் சைக்­கிள் பய­ணத்­தைத் தொடர்­வது இவ­ரது திட்­டம். ஆனால் இது சாத்­தி­யப்­ப­ட­வில்லை.

"முறை­யாகத் திட்­ட­மி­டா­மல் இந்த பய­ணத்­தைத் தொடங்கிவிட்­டேன். சிங்­கப்­பூ­ரில் இருந்து ஆஸ்­தி­ரே­லி­யா செல்வதற்கான அனு­ம­தி­யைப் பெற போதிய கால அவகாசம் இல்லை. இப்போதைக்கு இங்கே பய­ணத்தை முடித்­துக்­கொண்டு இந்­தியா திரும்­பு­கி­றேன்," என்­றார் விகாஸ்.

திறன்­பேசி, புகைப்­ப­டக் கரு­வி­, ஒலி வாங்­கி­ போன்ற வெவ்­வேறு கரு­வி­களே தனது பய­ணத்­தின் உற்ற நண்­பர்­கள் எனக் கருதும் விகாஸ், இவை இல்­லா­விட்­டால் இவ்­வ­ளவு தொலைவு பய­ணம் செய்­தி­ருக்க முடி­யாது என்றார்.

"பல நாடு­க­ளைச் சுற்­றி­வ­ரு­வ­தற்கு தொலை­பே­சி­யும் 'ஜிபி­எஸ்' தொழில்­நுட்­ப­மும் இரண்டு கண்கள்.

"அந்­தக் காலத்­தில் வரை­படத்தை மட்­டும் வைத்­துக்­கொண்டு பலர் சைக்­கி­ளில் உல­கத்தை வலம்­வந்­த­னர். அது­தான் பெரிய சவால். இப்­போ­தெல்­லாம் இது மிக எளிது. தொழில்­நுட்ப உதவி இருப்­ப­தால் தொலைந்துபோக வாய்ப்பில்லை," என்­றார் இவர்.

பெற்றோர் முதலில் விகாஸின் ஆசையைப் புரிந்துகொள்ளவில்லை; இவரது பாதுகாப்பு குறித்த கவலையில் இந்தக் கனவுப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர். விகாஸ் சளைக்காமல் முயற்சி செய்யவே விட்டுக்கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

பய­ணத்­துக்­காக ஓர­ளவு பணம் சேமித்து வைத்­தி­ருந்­தா­லும் அது போது­மா­ன­தாக இருக்­குமா என்ற கவ­லையை மறுப்­ப­தற்­கில்லை என்­றார் விகாஸ்.

"என் பய­ணத்­தில் வெவ்­வேறு நாடு­களில் எடுத்த புகைப்­ப­டங்­களை இன்ஸ்­ட­கி­ரா­மில் பகிர்ந்­தேன். 100,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் என்னைப் பின்­தொ­டர்­கின்­ற­னர். கிட்டத்தட்ட 105,000 பேர் 'யூடியூபில்' என் காணொ­ளி­க­ளைப் பார்க்­கின்­ற­னர்.

"இத­னால் எனக்கு மாதம் 8,000லிருந்து பத்­தா­யி­ரம் ரூபாய் வரை ($170) வரு­மா­னம் கிடைக்­கிறது. சிக்­க­ன­மா­கச் செலவு செய்­வ­தால் என் அன்­றா­டச் செல­வு­க­ளுக்கு இது போது­மா­ன­தாக இருந்தது," என்­றார் விகாஸ்.

"நான் கடந்த எட்டு மாதங்­க­ளாக இது­வரை செல்­லாத பல நாடு­க­ளுக்­குச் சென்­றேன். மொழி தெரி­யாது, நண்­பர்­கள் கிடை­யாது,

"இருப்பினும் சென்ற இடத்தில் எல்லாம் எனக்கு, கேட்காமலே உதவி கிடைத்தது. அந்நியர்கள் வீட்டுக்கு அழைத்து சாப்பிட வைத்தார்கள்; தங்களால் முடிந்த மளிகைப் பொருள்களை வாங்கிக் கொடுத்தார்கள். பெயர் தெரி­யாத சிலர் பணம் கொடுத்­தும் உத­வி­னார்­கள். உல­கத்­தில் இன்­னும் நல்­ல­வர்­கள் இருப்­பதை இந்­தப் பய­ணம் எனக்கு உணர்த்­தி­யது", என்று பெரு­மி­தத்­து­டன் கூறி­னார் விகாஸ்.

"நான் பார்த்­ததை, அனு­ப­வித்­த­தைப் பணம் கொடுத்­துப் பெற­மு­டி­யாது. என் வாழ்­நாள் வரை இந்த நினை­வு­கள் என்­னு­டன் இருக்­கும்," என்று கூறுகிறார் விகாஸ்.

சென்­னை­யில் சற்று ஓய்­வெ­டுத்த பின்­னர் இவ்வாண்டுக்­குள் மீண்டும் சைக்­கி­ள் பயணத்தைத் தொடங்குவது இவரது திட்டம். இதில் ஆஸ்­தி­ரே­லி­யாவை வலம்­வருவது இவரது விருப்பம்.