மனநிம்மதிக்காக ஈமச்சடங்கு துறையில் ஈடுபடும் இளையர்

மனநிம்மதிக்காக ஈமச்சடங்கு துறையில் ஈடுபடும் இளையர்

3 mins read
aa4a5a7e-4d05-4f0c-9e74-c794940c4738
தற்போது சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு 'டைக்னாஸ்டிக் ரேடியோகிராஃபி' பயிலும் தனிஷா, கடந்த ஒன்றரை ஆண்டாக பகுதிநேர 'எம்பால்மராகவும்' பணிபுரிந்து வருகிறார். படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 4

ஹர்­ஷிதா பாலாஜி

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பட்­ட­யப் படிப்பை முடித்த தனிஷா மதி­ய­ழ­கன், 25, அடுத்தகட்டமாக வேலைக்­குச் செல்­ல­லாம் என்று எண்ணி பல நிறு­வ­னங்­களில் வேலைக்கு விண்­ணப்­பம் செய்­து இ­ருந்­தார். அப்­போ­து­தான் தட­ய­வியல் தொழில்­நுட்­ப அதி­கா­ரிக்­கான வேலை­வாய்ப்பு இவ­ருக்கு வழங்­கப்­பட்­டது.

பிண­வ­றை­யில் பணி­பு­ரிந்து மரண விசா­ரணை அதி­கா­ரி­யு­டன் இணைந்து உடற்கூராய்வுகளைச் செய்த தனி­ஷா­வுக்கு கொஞ்­சம் கொஞ்­ச­மாக மர­ணம் சார்ந்த தொழி­லின்­மீது ஈடு­பாடு ஏற்­பட்­டது.

மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அவ்­வே­லை­யை­விட்டு மீண்­டும் படிக்­கத் தொடங்­கி­ய­போ­தும் மர­ணம் சார்ந்த துறை­யில் தொடர்ந்து பணி­பு­ரிய விழைந்த இவ­ருக்கு சட­லங்­க­ளைப் பதப்­ப­டுத்தி வைப்பது (எம்­பா­மிங்) பற்­றிக் கற்­றுக்­கொ­டுக்க வழி­காட்டி ஒரு­வர் முன்­வந்­தார்.

தற்­போது சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் க­ழ­கத்­தில் இரண்­டாம் ஆண்டு 'டைக்­னாஸ்­டிக் ரேடி­யோ­கி­ராஃபி' பயிலும் தனிஷா, கடந்த ஒன்­றரை ஆண்­டாக பகுதி­நேர 'எம்­பால்­ம­ரா­க­வும்' பணி­புரிந்து வரு­கி­றார்.

இறந்­த­வர்­க­ளின் உடல்­க­ளைச் சுத்­தம் செய்து, பதப்­ப­டுத்தி, அவற்­றைச் இறு­திச் சடங்­கிற்கு தயார்ப்­படுத்­து­வதே ஒரு 'எம்­பால்­ம­ராக' தனிஷா செய்ய வேண்­டிய பணி­கள்.

"எனது பெற்­றோர் ஆரம்­ப­காலத்தில் நான் 'எம்­பாமிங்' செய்­வதை விரும்­ப­வில்லை. ஆனால், என் ஆர்­வத்­தைத் தடுக்க முடி­யாது என்­றும் அவர்­க­ளின் சொல்­லுக்கு அடங்கி 'எம்­பாமிங்கை' கைவிட மாட்­டேன் என்­றும் உணர்ந்த என் பெற்­றோர், நான் செய்­வ­தைத் தடுக்­க­வில்லை," என்று தனிஷா கூறி­னார்.

இது­வரை ஏறக்­கு­றைய 300 உடல்­க­ளைப் பதப்­ப­டுத்தி வைத்­து உள்ள இவர், ஓர் 'எம்­பால்­ம­ராக' உடல்­க­ளைப் பதப்­ப­டுத்த அவற்றை நகர்த்­த­வும் தூக்­க­வும் அதிக சக்தி தேவைப்­படும் என்­ப­தைத் தாம் எதிர் பார்க்­க­வில்லை என்­றார். ஆனால், குத்­துச்­சண்டை வீராங்­க­னை­யான தனி­ஷா­வுக்கு இது எளிதில் பழகி­விட்­டது.

அதே நேரத்­தில், வேலை பற்றி எழும் பல கேள்­வி­களை தனிஷா சமா­ளிக்க வேண்­டி­யுள்­ளது.

"நான் 'எம்­பால்­ம­ராக' பணி­பு­ரி­கி­றேன் என்று கூறி­னால், அப்­ப­டி­யென்­றால் என்ன என்­பதே பல­ரின் கேள்­வி­யாக உள்­ளது. ஆனால், இந்த வேலை­யைப் பற்றி மேலும் தெரிந்­து­கொள்ள பல­ரும், குறிப்­பாக இளை­யர்­கள் ஆர்­வம் காட்டு­கின்­ற­னர். மூத்த தலை­மு­றை­யைச் சேர்ந்த ஒரு சிலர் மட்­டுமே, நான் ஏன் இந்த வேலை­யைச் செய்­கிறேன்? வேறு வேலையே இல்லையா?" என்று கேட்­ப­தாக தனிஷா சொன்­னார்.

"ஒரு­வர் எப்­போது இறந்­து­போவார் என்று சொல்ல முடி­யாது. எனவே, எப்­போது உடல் கிடைக்­கி­றதோ அப்­போது என் முத­லாளி உட­லைப் பதப்­ப­டுத்தி வைக்க என்னை வேலைக்கு அழைப்­பார். அப்­போது நள்­ளி­ர­வாக இருந்­தா­லும் அதி­கா­லை­யாக இருந்­தா­லும் நான் வேலைக்­குச் செல்ல வேண்டும்," என்­றார் தனிஷா.

குறிப்­பாக, கொடிய நோய்­க­ளால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­க­ளின் உடல்­க­ளைப் பதப்­ப­டுத்தி வைப்­பது, இறு­திச் சடங்­கின்­போது இறந்­த­வர்­க­ளுக்கு நெருக்­க­மா­ன­வர்­கள் அஞ்­சலி செலுத்­து­வ­தற்கு உத­வும் என்­றும் இவர் கூறி­னார்.

"மர­ணம் அடைந்­த­வர்­க­ளைக் கையா­ளும் வேலை துக்­கம் நிறைந்­த­வை­யாக இருக்­கும் என்று பல­ரும் கரு­து­கின்­ற­னர். ஆனால், இந்­தத் துறை­யில் பணி­பு­ரி­வ­தால், குறிப்­பாக ஒரு 'எம்­பால்­ம­ராக' பணி­பு­ரி­வ­தில் எனக்கு அதிக மன­நிம்மதி கிடைக்­கிறது. ஏனென்­றால், இறந்­த­வர்­கள் பேச­மாட்­டார்­கள், குறை­கூ­ற­மாட்­டார்­கள்," என்று புன்­ன­கைத்­த­வாறு கூறி­னார் தனிஷா.

இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்துபவர்கள் என்ன செய்வார்கள்?

1) இறந்தவரின் உடல் வந்தவுடன், சடலத்தின் கழுத்திற்கு அருகிலுள்ள ரத்தக் குழாய் வழியாக 'பார்மலின்' என்ற வேதிப் பொருளை உடலில் செலுத்த, கழுத்துப் பகுதியை தனிஷா அறுப்பார்.

2) அதன் பிறகு, உடலிலுள்ள ரத்தத்தை வடிக்க சடலத்தின் வயிற்றுப் பகுதியை அறுத்து, 'ட்ரோகார்' என்ற நீளமான ஊசியின் உதவியோடு ரத்தத்தை வடிப்பார் தனிஷா.

3) ரத்தத்தை வடித்து வேதிப்பொருளை உடலில் செலுத்தியபின் அறுக்கப்பட்ட பகுதிகளில் தனிஷா தையல் போடுவார். அதன் பிறகு, சடலம் மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்யப்படும்.

4) இறுதியாக, இறந்தவருக்காக கொடுக்கப்படும் ஆடை, அணிகலன்களை அணிவித்து சடலத்துக்குத் தேவையான அளவு ஒப்பனை செய்வார் தனிஷா.