தோட்டக்கலை மூலம் முன்னாள் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு

தோட்டக்கலை மூலம் முன்னாள் குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு

2 mins read
90e8f189-6169-4434-a428-a079489d2d8b
தோட்டக்கலைத் திட்டத்தின் முதல்கட்டமாக 'ஆஷ்ரம்' இல்லவாசிகளும் ஊழியர்களும் இணைந்து செடி கொடிகளை வளர்ப்பதில் ஈடுபட்டனர். மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், நேற்றைய நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் திட்டத்தைப் பார்வையிட்டார். படம்: ஆஷ்ரம் போதையர் மறுவாழ்வு இல்லம் -

போதைப் புழக்­கத்­தால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளைச் சமூ­கத்­து­டன் ஒருங்­கி­ணைக்­கும் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் ஆஷ்­ரம் போதை­யர் மறு­வாழ்வு இல்­லம் அதன் தோட்­டக்­க­லைத் திட்­டத்­தின் இரண்­டாம் கட்­டத்தை நேற்று அறி­மு­கப்­ப­டுத்­தி­யது.

நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்ட மூத்த அமைச்­ச­ரும் சமு­தாயக் கொள்­கை­களுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு தர்­மன் சண்மு­க­ரத்­­னம், இரண்­டாம் கட்டத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்­தார்.

ஆஷ்­ர­மத்­தில் வசிக்­கும் இல்­ல­வா­சி­க­ளின் மன­ந­லத்தை மேம்­படுத்தும் நோக்­கத்­து­டன் 2017ல் தோட்­டக்­க­லைத் திட்­டம் தொடங்­கப்­பட்­டது.

"போதைப் புழக்­கத்­தால் பாதிக்­கப்­பட்­டோ­ரால் அவ்­வ­ளவு எளி­தாக போதைப்­பொ­ருள் உட்­கொள்­வ­தைத் தவிர்க்க முடி­வ­தில்லை. ஆஷ்­ர­மத்தைவிட்டு வெளி­யே­றிய பிறகும் அவர்­கள் போதை­ப்பொ­ருள் பக்­கம் திரும்­பா­மல் சட்­டத்­திற்கு உட்பட்டு நடக்க தோட்­டக்­கலை போன்ற பொழு­து­போக்கு நட­வ­டிக்­கை­கள் உத­வு­கின்­றன," என்­றார் ஆஷ்­ர­மத்­தின் ஏற்­பாட்­டுக்­குழு உறுப்­பி­னர் எஸ்.விஜய்­கு­மார்.

தோட்­டக்­க­லைத் திட்­டத்­தின் முதல்­கட்­ட­மாக ஆஷ்­ர­மத்­தின் இல்­ல­வா­சி­களும் ஊழி­யர்­களும் இணைந்து செடி கொடி­களை வளர்ப்­ப­தில் ஈடு­பட்­ட­னர்.

தோட்­டக்­க­லை­யில் ஈடு­பட்ட இல்­ல­வா­சி­க­ளின் தன்­னம்­பிக்­கை­யும் சுய­ம­திப்­பும் மேம்­பட்­டதை அடுத்து, அர­சாங்க அமைப்­பு­களும் தனி­யார் நிறு­வ­னங்­களும் அடித்­தள, சமூக அமைப்­பு­களும் தோட்­டக்­க­லைத் திட்­டத்தை ஆத­ரிக்க முன்­வந்­தன. இத­னால், இத்­திட்­டத்­தின் இரண்­டாம் கட்­டம் தொடங்­கப்­பட்­டது.

தோட்­டக்­க­லைத் திட்­டத்­தின் நிலைத்­தன்­மை­யை­யும் தொடர்­புத்­தன்­மை­யை­யும் உறு­திப்­ப­டுத்த 'எடி­பல் கார்­டன் சிட்டி' (இஜிசி) தனி­யார் நிறு­வ­னம் ஆஷ்­ர­மத்­து­டன் இணைந்து நகர்ப்­புற விவ­சாய மாதி­ரியை உரு­வாக்­கி­யது.

இம்மாதிரி­யின் கீழ், மூலி­கை­களை­யும் காய்­க­றி­க­ளை­யும் வளர்க்க ஆறு புதிய பசுமை வீடு­கள் தோட்­டத்­தில் அறி­மு­கம் கண்­டன.

அதே நேரத்­தில், விவ­சா­யம், தோட்­டக்­கலை, தோட்ட அமைப்பு ஆகிய துறை­களில் பணி­பு­ரிய 11 முன்­னாள், இந்நாள் இல்­ல­வாசி­களை பயிற்­று­வித்­தது 'இஜிசி' நிறு­வ­னம்.

தோட்­டக்­கலை, தோட்ட அமைப்பு பயிற்­சி­யைச் சிறப்­பாக செய்து முடித்த இல்­ல­வா­சி­கள் ஒன்பது பேருக்கு திரு தர்­மன் சான்­றி­தழ்­களை வழங்­கி­னார்.

"தோட்­டக்­க­லை­யின் வழி­யாக பெறும் திறன்­களை இல்­ல­வா­சி­கள் வெளியே வேலை தேடு­வ­தற்கு பயன்­ப­டுத்­தவில்லை என்றாலும், மன­ந­லனை மேம்­ப­டுத்­தும் ஒரு பொழு­து­போக்கைக் கடைப்­பி­டிக்க அவை உத­வும். முன்­னாள் குற்­ற­வா­ளி­களுக்கு மறு­வாழ்வு அளிக்க இது­போன்ற ஆக்­க­பூர்­வ­மான வழி­களைத் தொடர்ந்து செயல்­ப­டுத்த வேண்­டும்," என்­றார் அமைச்சர் தர்­மன்.

சான்­றி­தழ்­க­ளைப் பெற்ற இல்­ல­வாசி ஒரு­வர், கடந்த ஆண்­டி­ல் இ­ருந்து தோட்­டக்­க­லைத் திட்­டத்­தின் இரண்­டாம் கட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கி­றார்.

"எனக்கு 1970களில் இருந்தே தோட்­டக்­க­லை­யில் ஆர்­வம் இருந்­தது. ஆனால், சென்ற ஆண்டு ஆஷ்­ர­மத்­தில் சேர்ந்த பிறகே என்­னால் அதில் கவ­னம் செலுத்த முடி­கிறது. இப்­போது, இத்­திட்­டத்­தின் வழி­யாக எனக்­குப் பிடித்­ததை செய்­வ­தோடு மன­ந­ல­னை­யும் பேணி வரு­கி­றேன்," என்­றார் அந்த இல்லவாசி.

செய்தி: ஹர்­ஷிதா பாலாஜி