தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியர் சங்கத்தின் விளையாட்டு விழா

2 mins read
9deddebc-83fe-45bc-b8bf-d883c60e4331
சிங்கப்பூரின் தேசிய அளவிலான கிரிக்கெட் அணியினர், பாலஸ்டியர் ரோட்டில் அமைந்துள்ள இந்தியர் சங்க விளையாட்டுத் திடலில் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.கோப்புப் படம் -

சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கம் அதன் 99ஆம் ஆண்டுநிறைவை ஒட்டியும் தேசிய தினத்தை முன்­னிட்­டும் அடுத்த மாதம் ஐந்து நாள் விளை­யாட்டு விழா­விற்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

'ஐஏ ரெட் டாட்' விளை­யாட்டு விழா, எண் 69, பாலஸ்டி­யர் ரோட்­டில் அமைந்­துள்ள இந்­தி­யர் சங்­கத்­தின் விளை­யாட்­டுத் திட­லில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்­கும்.

காற்­பந்து, கிரிக்­கெட், ஹாக்கி ஆகி­ய­வற்­று­டன் ஃபுட்சால், கபடி, திடல்­த­டப் போட்­டி­களும் நடை­பெறும். யோகா­ச­னம், சிலம்­பாட்­டம் போன்ற பாரம்­ப­ரிய இந்­தி­யக் கலை­க­ளின் நுணுக்­கங்­களை வல்­லு­நர்­கள் நேர­டி­யா­கச் செய்­து­காட்டுவர்.

இந்த விழா­வின் நோக்­கங்­கள் இரண்டு என்­றார் சங்­கத் தலை­வர் தமிழ் மாறன்.

முத­லா­வது, இந்­தி­யச் சமூ­கத்­தி­ன­ரி­டையே உட­லு­றுதி, ஆரோக்­கி­ய­மான வாழ்க்­கை­முறை ஆகி­ய­வற்றை ஊக்­கு­விப்­பது. அடுத்­தது, உள்­ளூர்­வா­சி­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­கள், குடி­யி­ருப்­பா­ளர்­கள் என அனைத்­துத் தரப்­பி­ன­ருக்­கு இ­டை­யி­லான ஒருங்­கி­ணைப்பை கிரிக்­கெட், ஹாக்கி போன்ற விளை­யாட்­டு­கள் மூலம் மேம்­ப­டுத்­து­வது.

பாலஸ்டி­யர் ரோட்­டில் உள்ள சங்­கத்­தின் கட்­ட­ட­மும் அதன் விளை­யாட்­டுத் திட­லும் தங்­கள் மர­பு­டை­மை­யின் சின்­னங்­கள் என்­றார் திரு தமிழ் மாறன்.

இந்­தி­யர் சங்­கம் 1923ஆம் ஆண்­டில், உறுப்­பி­னர்­க­ளின் சமூக, மதி­நுட்ப, கலா­சார நலன்­கள் உள்­ளிட்­ட­வற்றை செம்­மைப்­ப­டுத்­தும் நோக்­கில் தொடங்­கப்­பட்­டது. தொடக்க காலத்­தில் இந்­திய இளை­யர்­கள் ஒன்­று­கூ­ட­வும், கிரிக்­கெட், டென்­னிஸ், பில்­லி­யர்ட்ஸ் உள்­ளிட்ட விளை­யாட்­டு­களில் ஈடு­ப­ட­வும் வாய்ப்­ப­ளித்த புகழ்­பெற்ற இட­மாக விளங்­கி­யது.

1950, 1960களில் வட்­டார, அனைத்­து­ல­கப் போட்­டி­களில் சங்கத்தின் கிரிக்கெட், டென்னிஸ் குழு­வினர் சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நிதித்தனர்.

ஹாக்கி குழு 1956ஆம் ஆண்டு மெல்­பர்ன் ஒலிம்­பிக் போட்­டி­களில் சிங்­கப்­பூர் சார்­பில் கள­மி­றங்­கி­யது. இன்­றைய கால­கட்­டத்­தி­லும் இந்­தி­யர் சங்­கத்­தின் கிரிக்­கெட் அணி, சிங்­கப்­பூர் கிரிக்­கெட் சங்­கத்­தின் லீக் போட்­டி­களில் வெற்றி­பெற்­று­வரு­கிறது.

கடந்த ஈராண்­டாக கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வல் கார­ண­மாக இந்­தி­யர் சங்­கத்­தின் நட­வ­டிக்­கை­கள் குறைந்­த­போ­தும், மீண்­டும் காற்­பந்து, ஹாக்கி, கபடி, திடல்­த­டப் போட்­டி­கள் போன்­ற­வற்­றில் இளை­யர்­களை ஈடு­ப­டுத்­தும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­படுவதாகத் தலைவர் தமிழ் மாறன் குறிப்­பிட்­டார்.

இந்த விளை­யாட்டு விழா­வில் 700க்கும் அதி­க­மா­னோர் கலந்து­கொள்­வர் என்று எதிர்­பார்க்கப்­படுகிறது.

இந்­தி­யர் சங்­கம் அடுத்த ஆண்டு நூற்­றாண்டு விழா­வைக் கொண்­டா­ட­வி­ருக்­கும் வேளை­யில், அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய இந்த விளை­யாட்டு விழா­வுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

ஆகஸ்ட் 7ஆம் தேதி, கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங், இந்த விழா­ நிகழ்ச்சியில் கலந்­து­கொள்­வார்.