தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உள்ளூர் திரைப்படக் கலைஞருடன் உரையாட ஒரு வாய்ப்பு

1 mins read

புத்­தாக்க இந்­தி­யக் கலை­ய­கம், நாட்­டின் 57வது தேசிய தினத்தை ஒட்டி இன்று பிற்­ப­கல் மூன்று மணிக்கு, சிங்­கப்­பூர் முதல் கோலி­வுட் வரை எனும் சிறப்பு மெய்­நி­கர் நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த திரைப்­படக் கலை­ஞர் ஜேம்ஸ் துரை­ராஜ், இணைய நேர்­கா­ண­லில் தனது திரைத்­துறை அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ள­வி­ருக்­கி­றார்.

பல முன்­ன­ணிக் கலை­ஞர்­களோடு பணி­யாற்றி வரும் ஜேம்ஸ் துரை­ராஜ், இது­வரை கடந்து வந்த கலைப்­பாதை குறித்து சுவை­பட எடுத்­து­ரைப்­பார்.

தமிழ்த் திரைப்­ப­டங்­களில் தனது ஈடு­பாடு, இன்­றைய இளைய சமூ­கம் பயன்­பெ­றும் சமூக ஊட­கப் படைப்­பு­கள், சிங்­கப்­பூ­ரில் ஊடக வளர்ச்­சி­யின் முன்­னேற்­றம் எனப் பல்­வேறு அம்­சங்­கள் தொடர்­பில் அவர் தனது கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொள்­வார்.

உள்­ளூர்க் கலை­ஞர் சி. குண­சே­க­ரன் மெய்­நி­கர் வழி நடத்­தும் இந்நி­கழ்ச்­சி­யில், கலந்­து­ரை­யா­டல், இணைய கேள்வி பதில் அங்­கம், போட்­டி­கள், பரி­சு­கள் எனப் பல அம்­சங்­கள் காத்­தி­ருக்­கின்­றன.

தேசி­யக் கலை மன்­றத்­தின் கலை வளர்ப்­புத் திட்­டத்­தின்­கீழ், ஸ்டம்­ஃபர்ட் கலை நிலை­யத்­தில் இருந்து நேர­டி­யாக 'யூடி­யூபில்' ஒளி­ப­ரப்­பப்­படும் நிகழ்ச்சியை https://youtu.be/llkXsBwhhN8 என்ற முக­வ­ரியில் காணலாம்.