நூல் வெளியீட்டில் மூத்த கவிஞருக்கு மரியாதை

நூல் வெளியீட்டில் மூத்த கவிஞருக்கு மரியாதை

1 mins read
5fbf56ee-41d2-48ca-b402-ffb14ba0b142
வை. சுதர்மனுக்கும் அவரது மனைவிக்கும் தனது நூல் வெளியீட்டு விழாவில் மரியாதை செய்த நூலாசிரியர் மா. அன்பழகன் (வலது). படம்: ஏற்பாட்டுக்குழு -

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை ஆறு மணி­ய­ள­வில், உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலை­யத்­தில் எழுத்­தா­ளர் மா. அன்­ப­ழ­க­னின் நான்கு நூல்­கள் வெளி­யீடு கண்­டன.

கவி­மாலை அமைப்­பின் ஏற்­பாட்­டில், 'மேகம் மேயும் வீதி­கள்' எனும் கவி­தைத் தொகுப்பு, 'டுரி­யா­னுள் பலாச்­சுளை' எனும் சிறு­க­தைத் தொகுப்பு, 'கூவி அழைக்­குது காகம்-பாகம் 4' எனும் மாண­வர் கடித இலக்­கி­யம், 'ஐம்­ப­தி­லும் வாழ்க்கை வரும்' எனும் தன்­முனைப்­புக் கட்­டு­ரை­க­ளின் தொகுப்பு ஆகி­யவை அந்நூல்கள்.

'புரோப்­நெக்ஸ்' சொத்து முக­வர் நிறு­வ­னத் தலைமை நிர்­வாக அதி­காரி முக­மது இஸ்­மா­யில் கஃபூர் நூல்­களை வெளி­யிட்­டார். தமி­ழ­கத் திரைப்­ப­டத் தயா­ரிப்­பா­ள­ரும், இலக்­கி­யச் சொற்­பொ­ழி­வா­ள­ரு­மான பழ. கருப்­பையா, "நூல்­களை ஏன் படைக்­க­வேண்­டும்? ஏன் படிக்­க­வேண்­டும்?" எனும் தலைப்­பில் சிறப்­புரை ஆற்­றி­னார்.

இந்­திய சுதந்­தி­ரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்­திர போஸின் இந்­திய தேசிய ராணு­வப்­ப­டை­யில் பணி­யாற்­றிய பெரு­மைக்­கு­ரிய கவி­ஞர் வை. சுதர்­ம­னின் 95வது பிறந்­த­நாளை ஒட்டி நூலா­சி­ரி­யர் மா. அன்­ப­ழ­கன் தனது நூல் வெளி­யீட்டு நிகழ்ச்­சி­யில் சுதர்­மன் தம்­ப­தியை மேடைக்கு அழைத்து மரி­யாதை செய்­தார்.