'இன நல்லிணக்கம் பேணும் நடவடிக்கைகள் ஒற்றுமைக்குச் செலுத்தப்படும் காணிக்கைகள்'

'இன நல்லிணக்கம் பேணும் நடவடிக்கைகள் ஒற்றுமைக்குச் செலுத்தப்படும் காணிக்கைகள்'

2 mins read

பொன்­மணி உத­ய­கு­மார்

சிங்­கப்­பூ­ரின் முக்­கிய நான்கு இனங்­க­ளான சீனர்­கள், மலா­யக்காரர்­கள், இந்­தி­யர்­கள், மற்ற சமூ­கத்­தி­னர் என்ற பிரி­வு­க­ளுக்­குள் உள்ள வெவ்­வேறு சமூ­கங்­கள் குறித்த அறி­த­லை­யும் புரிந்­து­ணர்­வை­யும் ஏற்­ப­டுத்த 'சொஜோ­னர்ஸ்' எனும் விழா அண்­மை­யில் இடம்­பெற்­றது. சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்வு நிலை­யத்­தின் ஏற்­பாட்­டில் இம்­மா­தம் 12, 13, 14 ஆகிய தேதி­களில் நடை­பெற்ற விழா­வில் இசை­நி­கழ்ச்­சி­கள், கருத்­த­ரங்­கம் முத­லி­யன இடம்­பெற்­றன.

சிங்­கப்­பூர் வர­லாற்­றி­லும் மர­பு­டை­மை­யி­லும் பங்­கு­பெ­றும் பல்­வேறு சிறு­பான்­மைச் சமூ­கங்­கள் குறித்­தும் அவர்­க­ளது பங்­க­ளிப்­பை­யும் முதல் நாள் நடை­பெற்ற விரி­வு­ரைக் கருத்­த­ரங்­கம் எடுத்­து­ரைத்­தது.

சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத் தலை­வ­ரின் ஆலோ­ச­க­ரும் முஸ்­லிம் விவ­கா­ரங்­க­ளுக்­குப் பொறுப்­பு­வ­கித்த முன்­னாள் அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரி­யர் யாகூப் இப்­ரா­ஹிம் இந்­நி­கழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டார்.

"பல்­லின ஒற்­று­மைக்­காக ஒவ்­வோர் இன­மும் சகிப்­புத்­தன்­மை­யோடு வாழு­கிறது என்ற எண்­ணம் பிழை­யா­னது. இன நல்­லி­ணக்­கத்­தைப் பேண நாம் ஈடு­படும் செயல்­கள் நாம் செலுத்­தும் காணிக்கை," என்­றார் அவர்.

சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழ­கப் பேரா­சி­ரி­யர் சையத் ஃபரீட் அல் அத்தாஸ், ஆர்­மீ­னிய தேவா­ல­யத்­தின் அமி உமேத்­யான், கவிதா கரும்­பா­யி­ரம் ஆகி­யோர் கருத்­த­ரங்­கில் முறையே அரே­பி­யச் சமூ­கம், ஆர்­மீ­னிய சமூ­கம், தமிழ்ச் சமூ­கம் ஆகி­யவை குறித்­துப் பேசினர்.

கருத்­த­ரங்­கில், சிங்­கப்­பூ­ருக்கு அக்­கா­லத்­தில் வர்த்­த­கர்­க­ளாக வந்த அரே­பி­யர்­கள் விற்­ப­னைக்­கி­ருந்த நிலங்­களில் 75 விழுக்­காட்டு நிலங்­க­ளுக்கு உரி­மை­யா­ளர்­க­ளாக இருந்­த­தைப் பேரா­சி­ரி­யர் ஃபரீட் பகிர்ந்­து­கொண்­டார். சிங்­கப்­பூர்ப் பொரு­ளி­ய­லுக்கு அவர்­க­ளின் பங்­க­ளிப்பை அவர் விவ­ரித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் மிகச் சிறிய சமு­தா­ய­மான ஆர்­மீ­னிய சமூ­கத்­தைப் பற்­றிப் பேசிய அமி சிங்­கப்­பூ­ரின் ஆரம்ப கால வர­லாற்­றில் ஆர்­மீ­னி­யர்­க­ளின் பங்கை விளக்­கிக் கூறி­னார். எடுத்­துக்­காட்­டாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழின் நிறு­வ­னர்­களில் ஆர்­மீ­னி­யர் ஒரு­வ­ரும் இடம்­பெற்­றி­ருந்­ததை அவர் சுட்­டி­னார்.

தமிழ்ச் சமூ­கம் குறித்­துப் பேசிய கவிதா கரும், இந்­தி­யர்­கள் என ஒட்­டு­மொத்­த­மாக அழைக்­கப்­பட்­டா­லும் இந்­திய சமு­தா­யத்­தில், மொழி, மதம் என்ற பிரி­வு­க­ளின்­கீழ் பல்­வேறு சமூ­கங்­கள் இருப்­பதை எடுத்­து­ரைத்­தார். தமிழ்ச் சமு­தா­யத்­தில் இந்­துக்­கள், இஸ்­லா­மி­யர்­கள், கிறிஸ்­த­வர்­கள் என்று பல சம­யத்­த­வ­ரும், இந்­தியா, இலங்கை போன்ற வெவ்­வேறு நாட்டு மக்­களும் உள்­ள­டங்­கு­வதை அவர் சுட்­டி­னார். பல பிரி­வு­கள் இருந்­தா­லும் மொழி­யால் அனை­வ­ரும் தமி­ழர் எனும் ஒற்றை அடை­யா­ளத்­தில் ஒன்­றி­ணைந்­தி­ருப்­பதை அவர் விளக்­கி­னார். அடுத்த இரு நாள்களில் பல்வேறு சமய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.