பாதி நூற்றாண்டுக்கும் மேலாக ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வேப்பிலைக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள ஓய்வுப்பெற்ற, 73 வயதான திரு பன்னிர்செல்வம் ஆத்மநாதன், இந்து அறக்கட்டளை வாரியம் ஏற்பாடு செய்த விருது நிகழ்ச்சியில் உன்னத விருது பெற்ற 71 தொண்டூழியர்களில் ஒருவர்.
உன்னத விருது பெற்ற தொண்டூழியர்களில் மற்றொருவர் திருவாட்டி நாகலிங்கம் சரஸ்வதி, 70. சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் மூத்த தாதியாகப் பணிபுரியும் திருவாட்டி சரஸ்வதி, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்து அறக்கட்டளை வாரியத்தின் தொண்டூழியராக இருக்கிறார்.
இவர்களைப் போல் 2,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களைக் கொண்ட இந்து அறக்கட்டளை வாரியம் அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்க 24 ஆண்டுகளாக விருது நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஆர்க்கிட் கண்ட்ரி கிளப்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார்.
செய்தி: அனுஷா செல்வமணி

