சே. வெ. சண்முகத்தின் கையெழுத்துப் பிரதிகள் மக்களின் பார்வைக்கு

சே. வெ. சண்முகத்தின் கையெழுத்துப் பிரதிகள் மக்களின் பார்வைக்கு

2 mins read
344d455a-c3ae-4ae0-be7a-02b33825a4ac
திரு சே. வெ. சண்முகத்தின் படைப்புடன் அவரின் மகள் திருவாட்டி வள்ளியம்மை (வலது). படம்: திவ்யாதாக்‌ஷாய்னி -

சிங்­கப்­பூ­ரின் மூத்த தமிழ் எழுத்­தாளா­ரும் நாடக ஆசி­ரி­ய­ரு­மான மறைந்த திரு சே. வெ. சண்­மு­கத்­தின் சிறு­கதை, வானொலி நாட­கப் பிர­தி­களை மக்­க­ளின் பார்­வைக்­குக் கொண்டு வரு­கிறது தேசிய நூலக வாரி­யம். 'மீன் வாங்­க­லையோ' என்ற திரு சே. வெ. சண்­மு­கத்­தின் நகைச்­சுவை சிறு­க­தைத் தொகுப்பு முத­லிய படைப்­பு­க­ளின் கையெ­ழுத்து, அச்­சுப் பிர­தி­க­ளைத் தேசிய நூலக வாரி­யத்­துக்கு கொடை­ய­ளித்­துள்­ளார் அவ­ரின் கடைசி மக­ளான திரு­வாட்டி வள்­ளி­யம்மை சண்­மு­கம்.

தனது தாயா­ரி­ட­மி­ருந்து தந்­தை­யின் படைப்­பு­க­ளைப் பெற்­றுக்­கொண்­ட­தா­க­வும், அவற்­றைப் பாது­காக்­கும் பொறுப்பு தன்­னி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தா­க­வும் திரு­வாட்டி வள்­ளி­யம்மை தெரி­வித்­தார். சிங்­கப்­பூர் சுதந்­தி­ர­ம­டைந்­த­தற்கு முன்­பி­ருந்த கால­கட்­டத்­தைச் சித்­தி­ரிக்­கும் இது­போன்ற படைப்­பு­களை சொகு­சான சூழ­லில் வள­ரும் இளைய தலை­மு­றை­யி­னர் படித்து சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சியை அறி­வது அவ­சி­ய­மென கரு­து­வ­தா­க­வும் அவர் தமிழ் முர­சி­டம் கூறி­னார்.

"அப்பா இருந்­தி­ருந்­தால் மிக­வும் மகிழ்ச்­சி­ய­டைந்­தி­ருப்­பார். தனது படைப்­பு­கள் மிக பத்­தி­ர­மாக இருக்­க­வேண்­டும் என்று அவர் எப்­பொ­ழு­தும் ஆசைப்­பட்­டார். அதை நிறை­வேற்­றி­ய­தில் எனக்கு மிகுந்த மன­நி­றைவு," என்று நெகிழ்ந்­தார் 51 வயது திரு­வாட்டி வள்­ளி­யம்மை.

சிங்­கப்­பூர் தமிழ் இலக்­கிய முன்­னோ­டி­க­ளின் படைப்­பு­களை ஆவ­ணப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் இறங்­கிய தேசிய நூலக வாரி­யத்­தின் நூலக அதி­கா­ரி­கள், முன்­னோ­டிப் படைப்­பா­ளர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ரைத் தொடர்­பு­கொண்­ட­தில், திரு­வாட்டி வள்­ளி­யம்மை பல சஞ்­சி­கை­கள், திரு சே. வெ. சண்­மு­கத்­தின் வெளி­யி­டப்­ப­டாத படைப்­பு­கள் முத­லி­ய­வற்­றைக் கொடை­ய­ளித்­த­தாக கூறி­னார் நூலக அதி­காரி திரு­வாட்டி சுந்­தரி பால­சுப்­ர­ம­ணி­யம்.

இப்­பி­ர­தி­க­ளு­டன், கடந்த ஓராண்டு காலத்­தில் 68 நன்­கொ­டை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து 3,000க்கும் மேற்­பட்ட சிங்­கப்­பூர் மர­பு­டைமை பொருள்­க­ளைத் தேசிய நூலக வாரி­யம் பெற்­றுள்­ளது.

சிங்­கப்­பூர் மர­பு­டை­மை­யைத் தொடர்ந்து பாது­காக்­கும் நோக்­கி­லான தேசிய நூலக வாரி­யத்­தின் திட்­டங்­கள் கடந்த புதன்­கிழமை­யன்று நடந்­தே­றிய நன்­கொடை­யா­ளர் பாராட்டு விழா­வில் அறி­விக்­கப்­பட்­டன.

தேசிய நூல­கத்­தில் நடை­பெற்ற விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ராக பேசிய தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, சிங்­கப்­பூரின் மர­பு­டை­மை­யைப் பாது­காக்க பொது­மக்­களும் நன்­கொ­டை­யா­ளர்­களும் தேசிய நூலக வாரி­யத்­து­டன் இணைந்து செயல்­ப­டுவதைப் பாராட்­டி­னார்.

வருங்­கா­லத் தலை­மு­றை­யி­னரை 'சிங்­கப்­பூர் கதை­சொல்­லி­க­ளாக' வளர்த்­தெ­டுப்­ப­தற்கு இப்­பணி கைகொ­டுப்­ப­தா­க­வும் அமைச்சர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் தேசிய ஆவண காப்­ப­கத்­தின் 'சிட்­டி­சன் ஆர்க்­கை­விஸ்ட்' திட்­டத்­தின் விரி­வாக்­கமான 'டோக்­யு­மெண்­டிங் சிங்­கப்­பூர் டுகெ­தர்' எனப்­படும் இணையத்­தளம் அடுத்த ஆண்டு தொடக்­கம் காண­வி­ருப்­ப­தா­க­வும் அமைச்­சர் நிகழ்­வில் அறி­வித்­தார்.

தேசிய நூலக வாரி­யத்­தின், சிங்­கப்­பூர் தேசிய ஆவண காப்­பகத்­தின் தொகுப்­பு­களை 'ஆர்க்­கைவ்ஸ் ஆன்­லைன்', 'புக்­எஸ்ஜி', 'பிக்­சர்­எஸ்ஜி' ஆகிய தளங்­களில் மக்­கள் காண­லாம்.

ஆ. விஷ்ணு வர்தினி