ஸ்ரீ நாராயண குருவின் 168வது பிறந்தநாளை முன்னிட்டு, இம்மாதம் 11ஆம் தேதி பிற்பகல் நேவல் பேஸ் உயர்நிலைப் பள்ளியில் "குரு ஜெயந்தி" கொண்டாட்டம் நடைபெற்றது. கொள்ளைநோய்ப் பரவலால் மெய்நிகரில் நடந்த இந்தக் கொண்டாட்டம் ஈராண்டுகளுக்குப் பிறகு நேரடி நிகழ்ச்சியாக நடைபெற்றது.
சமூகப் பங்காளிகள், ஸ்ரீ நாராயண மிஷன் உறுப்பினர்கள், தொண்டூழியர்கள், பொதுமக்கள் என 300 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் மனிதவள, வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டாக்டர் டான் சீ லெங்.
"ஸ்ரீ நாராயண மிஷன் போன்ற சமூக நிறுவனங்கள் சமூக பங்காளித்துவத்துடன் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும்," என்று டாக்டர் டான் கூறினார்.
வருகை புரிந்தோருக்கு ஸ்ரீ நாராயண மிஷன் உறுப்பினர்களால் சமைக்கப்பட்ட இலவச மதிய உணவு வழங்கப்பட்டது.
19 வகை யான பாரம்பரிய சைவ உணவு வகைகள் இந்திய பாரம்பரியப்படி வாழை இலையில் பரிமாறப்பட்டன .
அனுஷா செல்வமணி

