கூத்தாநல்லூர் சங்கத்தின் குதூகலமான குடும்ப விழா

2 mins read
e3280bab-6565-47b7-b6af-13f3d0f5163f
சிங்கப்பூர் கூத்தாநல்லூர் சங்கத்தின் 2022-24ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள். படம்: கூத்தாநல்லூர் சங்கம் -

சிங்கப்பூர் கூத்­தா­நல்­லூர் சங்கம், சிங்­கப்­பூ­ரில் வாழும் கூத்­தா­நல்­லூர் சங்க குடும்ப உறுப்­பி­னர்களுக்கு குதூ­க­ல­மான வெள்ளி விழாவுக்கு ஏற்­பாடு செய்­தது.

கொவிட்-19 காரணமாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு வெள்ளிவிழா நேரடியாக இம்மாதம் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொளம் ஆயர் சமூக மன்றம் மற்றும் சாங்கி கடற்­கரை பகு­தி­யில் நடை­பெற்­றது.

குடும்ப தினம், ஹஜ்­ஜுப் பெரு­நாள் ஒன்­று­கூ­டல் மற்­றும் இஸ்­லா­மிய புத்­தாண்டு முஹர்­ரத்தை பல இன தொண்­டர்க­ளு­டன் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

ஜாலான் புசார் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டாக்­டர் வான் ரிசால் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இளையர்கள், குழந்தைகளுக் கான மணல் கலை சிற்பங்களின் செயல் விளக்கமும், திருவிழா விளையாட்டுகள் மற்றும் 'மேஜிக் ஷோ' நடைபெற்றது.

நிகழ்­வின் முக்­கிய அங்­க­மாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யின் சிறப்­புப் பயிற்சி நடை பெற்­றது. சிங்­கப்­பூர் குடி­மைத் தற் காப்பு படை­யின் அதி­கா­ரி­யான உத்­மான் மற்­றும் அவ­ரது குழு­ வினர் அனை­வ­ருக்­கும் இதய இயக்க மீட்பு (CPR) உள்­ளிட்ட முத­லு­தவி செயல்­கள் பற்றி விளக்­கம் அளித்த னர்.

சமை­ய­ல­றை­யில் ஏதே­னும் தீ விபத்து ஏற்­பட்­டால், எப்­படி அணைப் பது, அவற்­றுக்­கான சிறந்த வழி­கள், தீ அணைப்­பான்­களை வீட்­டில் இருப்பதன் முக்­கி­யத்­து­வம், 995 அவ­சர தொலை­பேசி எண் பயன்­ப­டுத்­தும் முறை ஆகி­யவை குறித்­தும் பயிற்சி அளிக்­கப்­பட்­டது.

அன்­றைய தினம் சுவை­யான கூத்­தா­நல்­லூர் பிரி­யாணி, கூத்தா நல்­லூர் பிர­பல 'டம்­ரூட் கேக்' (Damroot) எனும் சூடான காபி மற்­றும் இஞ்சி தேநீர், குளிர்ந்த 'பாண்­டுங்' பானங்­கள் பரி­மா­றப்பட்­டன. வெள்ளி விழா­வில் எட்டு வயது முதல் 80 வயது மூத்த குடி­மக்­கள் வரை 250 பேருக்கு மேல் கலந்து கொண்­ட­னர்.

சிங்­கப்­பூர் கூத்­தா­நல்­லூர் சங்­கத்­தின் தலை­வர் சடை­யன் அப்­துல் அலீம், துணைத் தலை­வ­ரும் நிகழ்ச்சி ஏற்­பாட்­டுக்­குழு தலை­வ­ரு­மான ஆடம் சாஹுல் ஹமீது உட்­பட சங்­கத்­தின் இளம் தலை­வர்­களும் நிர்­வாக மன்ற உறுப்­பி­னர்­களும் குடும்­பத்தை மைய­மா­கக் கொண்டு வெள்ளிவிழா­வுக்கு ஏற்­பாடு செய்­த­னர்.

1996ஆம் தொடங்­கப்­பட்­ட­தி­லி­ருந்து சிங்­கப்­பூர் கூத்­தா­நல்­லூர் சங்­கம் மக்­க­ளுக்கு பயன்­த­ரத்­தக்க பல்­வேறு சமூ­கப் பணி­களில் ஈடு­பட்டு வரு­கிறது.