தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துப்புரவாளர்களின் கைவண்ணத்தில் தீபாவளி அலங்காரம்

3 mins read
5bdf050a-a0eb-4dfb-92f9-8774a50522a3
'இன்ஸ்' தனியார் கூட்டுரிமை வளாகத்தின் துப்புரவாளர் குழு வண்ணமிகு மயிலை தீபாவளி அலங்காரமாக செய்திருந்தனர். படம்: சீட்டோ லெக் கியோங் -

எஸ். விக்­னேஸ்­வரி

தீபா­வளி என்­பது சிங்­கப்­பூ­ரில் ஒரு சிறு­பான்­மை­யி­னர் கொண்­டா­டும் விழா. எனி­னும், பல இனம், மதம், கலா­சா­ரம் உள்ள சிங்­கப்­பூ­ரில் மற்ற இனத்­த­வ­ரும் தீபா­வ­ளிக் கொண்­டாட்­டங்­களில் கலந்­து­கொண்டு விழா­விற்கு மேலும் குதூ­க­லம் சேர்க்­கின்­ற­னர்.

லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தை­விட்டு வெளியே வந்து தீவின் மற்ற இடங்­க­ளைப் பார்த்­தால், அங்­கும் தீபா­வளி விழாக்­கால உணர்வு களை­கட்­டி­யுள்­ளது.

கடைத்­தொ­கு­தி­கள், குடி­யி­ருப்பு வட்­டா­ரங்­கள், அடுக்­கு­மாடி புளோக்­கு­கள் ஆகி­ய­வற்­றில் தீபா­வளி அலங்­கா­ரங்­கள் அசத்­து­கின்­றன.

அந்த வரி­சை­யில் சுவா சூ காங் அவென்யூ 5ல் அமைந்­துள்­ளது 'இன்ஸ்' (iNz) தனி­யார் கூட்­டு­ரிமை வீடு­க­ளி­லும் தீபா­வளி அலங்­கா­ரம் அனை­வ­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்­தது.

வர­வேற்புப் பகு­தி­யில் வண்­ண­மிகு அலங்­கா­ரங்­கள் வர­வேற்­றன. தீபா­வளி வாழ்த்­து­களும் வண்ண தாட்­க­ளால் செய்­யப்­பட்ட அகல் விளக்­கு­களும் சேர்ந்த அலங்­கா­ரங்­கள் களை­கட்­டி­யி­ருந்­தன.

வளா­கத்­தில் உள்ள பொது இடங்­க­ளி­லும் வண்­ண­வண்ண விளக்­கு­களும் அலங்­கா­ரங்­களும் போடப்­பட்­டி­ருந்­தன.

குறிப்­பிட்ட ஓர் அலங்­கா­ரம் கண்­ணைப் பறித்­தது.

பெரிய மயில் வடி­வம். அதைச் சுற்றி மிளி­ரும் விளக்­கு­கள். பார்ப்­ ப­தற்கே பளிச்­சென்று இருந்­தது. மயில் இற­கு­கள் ஒவ்­வொன்­றும் வித்­தி­யா­ச­மாக அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

மயில் வடி­வத்­துக்­குக்கீழ் இருந்த ஒலிப்­பெ­ருக்­கி­யி­லி­ருந்து பாரம்­ப­ரிய இந்­திய இசை ஒலித்­து­கொண்­டி­ருந்­தது. இது தீபா­வளி உணர்வை இன்­னும் இரண்டு மடங்கு கூட்­டி­யது.

இதை வடி­வ­மைத்­த­வர்­கள் குடி­யி­ருப்­பா­ளர்­களோ கட்­டட நிர்­வா­கக் குழுவோ அல்ல. இங்கு வேலை­பார்க்­கும் துப்­பு­ரவுப் பணி­யா­ளர்­கள்­தான் மயில் வடிவ தீபா­வளி அலங்­கா­ரத்தை செய்­தி­ருந்­த­னர்.

மலாய்க்­கா­ரர்­கள் அடங்­கிய குழு­வி­னர் கைவண்­ணத்­தில் வண்­ண­மிகு மயி­லாக ஜொலித்­தது.

"நாங்­கள் அனைத்து விழாக்­ க­ளுக்­கும் வளா­கத்தை அலங்­க­ரிப்­போம். சென்­றாண்டு தீபா­வ­ளிக்கு சிறிய அள­வில் அலங்­கா­ரங்­கள் செய்­தோம். இந்த ஆண்டு வித்­தி­யா­ச­மாக செய்­ய­லாம் என்று முடி­வெ­டுத்­தோம்.

"மயில் என்­பது இந்­திய கலா­சா­ரத்­தில் அழகு, அன்பு, தன்­னம்­பிக்கை, வலிமை போன்­ற­வற்றை பிர­தி­ப­லிக்­கிறது. இத­னால் மயிலை கருப்­பொ­ரு­ளா­கத் தேர்ந்­தெ­டுத்­தோம்," என்று விளக்­கி­னார் துப்­பு­ரவு மேற்­பார்­வை­யா­ளர் ஹாஃபிடா.

அலங்­கா­ரம் செய்த குழு­விற்கு தலை­மை­யேற்­றி­ருந்த இவர், தீபா­வளி அலங்­கா­ரங்­கள் பற்றி ஆராய்ச்­சியே செய்­தி­ருந்­தார்.

13 பேர் அடங்­கிய குழு கடந்த இரண்டு மாதங்­க­ளாக இதற்­காக கடு­மை­யாக உழைத்­தது. இவர்­க­ளது படைப்பு குடி­யி­ருப்­பா­ளர்­களை மலைக்க வைத்­துள்­ளது.

"இங்­கு குறை­வான இந்­தி­யர்­கள் வசிக்­கின்­ற­னர். இருப்­பி­னும், தீபா­வ­ளி­யைக் கொண்­டா­டு­ப­வர்­ க­ளைக் கருதி அலங்­கா­ரங்­கள் செய்­யப்­பட்­டி­ருப்­பது மகிழ்ச்­சி­யாக உள்­ளது," என்­றார் குடி­யி­ருப்­பா­ளர் உமா கோபால்.

அலங்­கா­ரம் அழ­கா­க­வும் இருக்­க­வேண்­டும். அதே சம­யம், அலங்­கா­ரத்­துக்­கான பொருட் களுக்கு சிக்­க­ன­மாக செல­விட வேண்­டும். இத­னால் மறு­ப­ய­னீடு செய்­யும் யோசனை குழு­விற்கு தோன்­றி­யது.

"அட்டை, தாள், பழைய பொருட் ­க­ளைச் சேக­ரித்து அவற்­றுக்கு வண்­ணம் பூசி­னோம். சில­வற்­றின் மேல் வண்­ணத் தாட்­களை ஒட்­டி­னோம். எங்­கள் கற்­ப­னைக்கு வந்­ததை எங்­கள் கைவண்­ணத்­தில் படைத்­தோம்," என்று ஹாஃபிடா குறிப்­பிட்­டார்.

தீபா­வ­ளிக்­காக அலங்­கா­ரம் செய்ய விரும்­பிய துப்­பு­ர­வுக் குழு முத­லில் நிர்­வா­கக் குழுவை அணு­கி­யது.

"தீபாவளி அலங்­கார கருப்­ பொ­ருள் பற்றி எங்­க­ளி­டம் தெரி­வித்­த­போது எங்­க­ளுக்கு ஆச்­ச­ரி­ய­மாக இருந்­தது.

"இவ்­வ­ளவு அரு­மை­யாக இருக்­கும் என்று நாங்­கள் நினைத்துப் ­பார்க்­க­வில்லை," என்­றார் குழு­விற்கு ஆத­ரவு அளித்த வளா­கத்­தின் மேலா­ளர் ரோசே­லியா போ.

குடி­யி­ருப்­பா­ளர்­கள் வாழும் இடத்தை அழ­காக வைத்­தி­ருக்­க­வும் விழாக்­கால உணர்வை மற்­ற­வர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­ள­வும் துப்­பு­ர­வா­ளர் குழு, தங்­கள் கட­மை­யை­யும் தாண்டி பணி­யாற்­றி­யி­ருக்­கிறது.