கவிதையோடு கைகுலுக்கும் கலைஞரின் கைவண்ணம்

2 mins read
d98e02ff-3104-4b36-ac16-6f5553290b43
கவிதைக்கு ஊற்றாக அமைந்த கலைஞர் எம் ஜி குமாரின் கைவண்ணத்தில் சிங்கப்பூர் ஆறு. படம்: ஏஸ்தெலெட்டிக் ஃபைன் ஆர்ட் கேலரி -

மோன­லிசா

சிங்­கப்­பூ­ரின் வளர்ச்­சி­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் பங்கை நினை­வு­கூ­ரும் வித­மாக ஓவி­யக் கண்­காட்சி ஒன்று நடை­பெற்று வரு­கிறது.

சிங்­கப்­பூர் ஆற்­றைக் கருப்­பொ­ரு­ளா­கக் கொண்டு நடத்­தப்­படும் இக்­கண்­காட்­சிக்கு ஏஸ்­தெ­லெட்­டிக் ஆர்ட் கேலரி எனும் கலைக்­கூ­டம் ஏற்­பாடு செய்­துள்­ளது.

இதில் ஓவி­யர் எம் ஜி குமார், அவ­ரது மகளும் ஓவி­ய­ரு­மான கீஷா எலி­ச­பெத் இரு­வ­ரின் 19 ஓவி­யங்­கள் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

சிங்­கப்­பூ­ரின் வர­லாற்று நினை­வு­க­ளைத் தூண்­டும் கிளார்க் கீ, கேவெனா பாலம் ஆகிய நதிக்­க­ரை­யோ­ரப் பகு­தி­க­ள் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

"நம்­மு­டைய பாரம்­ப­ரி­யத்தை நினை­வு­கூ­றும் சான்­றாக சிங்­கப்­பூர் ஆற்றை 1960களில் இருந்தவாறு சித்­திரிக்க விரும்­பி­னேன்.

"பல்­வேறு இனங்களைச் சார்ந்த முன்­னோடி மக்­கள் ஒன்­றி­ணைந்து வாழ்க்­கை­யைத் தொடங்­கி­ய­தன் அடை­யா­ள­மாக இருக்­கும் இந்­த ந­தி­யின் சிறப்பை எடுத்­துச்­சொல்­லும் வாய்ப்­பாக இதைக் கரு­து­கி­றேன்," என்று கூறி­னார் 66 வயது ஓவி­ய­ர் குமார்.

புதிய முயற்­சி­யாக இக்­கண்­காட்­சி­யில் ஒவ்­வோர் ஓவி­யத்­திற்­கும் உள்­ளூர், வெளி­நாட்டுக் கவி­ஞர்­கள் கவி­தை­ எழு­தி­யுள்­ள­னர்.

மொத்­தம் 14 கவி­ஞர்­கள் தங்­க­ளது தாய்­மொ­ழி­க­ளி­லும் ஆங்­கில மொழி­யி­லும் எழு­திய கவி­தை­களும் பொது­மக்­க­ளின் பார்­வைக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

ஓவி­யம் ஒன்­றுக்­குத் தமி­ழில் கவிதை எழு­தி­யுள்­ளார் திரு­மதி பாரதி மூர்த்­தி­யப்­பன்.

"சங்­க­மம் என்ற ஓவி­யம் நிற்­கா­மல் ஓடிக்­கொண்­டு இ­ருக்­கும் எதார்த்த வாழ்­வைப் பிர­தி­ப­லிப்­பதாக என் உள்­ம­னம் கூறவே இந்த ஓவி­யத்தை ஒட்டி கவிதை வடித்­தேன்," என்று கூறி­னார்.

தனி­யார் நிறு­வன இயக்­கு­ந­ரான இவர், இரு வேறு கலை­களை இணைத்த இந்த ­மு­யற்சி மறக்க முடி­யாத அனு­ப­வ­மாக அமைந்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

சென்ற மாதம் 30ஆம் தேதி முதல் இம்­மா­தம் 30ஆம் தேதி வரை தேசிய நூலக வாரி­யக் கட்­ட­டத்­தில் நடை­பெ­றும் இக்­கண்­காட்சி, காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்­பெ­று­கிறது.

கண்­காட்­சி­யின் தொடக்க விழா­வில் தொடர்பு, தக­வல் அமைச்­சரும் இரண்­டாம் உள்­துறை அமைச்­சரு­மான திரு­மதி ஜோஸ­ஃபின் டியோ சிறப்பு விருந்­தி­ன­ராகக் கலந்­து­கொண்­டார்.

இம்­மா­தம் 13ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஓவி­யங்­க­ளுக்­குக் கவிதை வடித்த கவி­ஞர்­கள் தங்­கள் அனு­ப­வங்­களைப் பகிர்ந்­து­கொள்­ளும் சிறப்பு நிகழ்ச்சி நடை­பெ­றும்.

இம்­மா­தம் 27ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை கலை­கள் மூலம் சிங்­கப்­பூ­ரின் வர­லாற்றை நினை­வு­கூ­ரு­வ­தன் அவ­சி­யத்­தைப் பகி­ரும் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்டு உள்­ளது.

சிங்­கப்­பூர் கவி­தைத் திரு­வி­ழா­வோடு, சிங்­கப்­பூ­ரி­லுள்ள வெளி­நாட்டு எழுத்­தா­ளர்­களும் இந்தக் ­கண்­காட்­சிக்கு ஆத­ரவு அளிக்­கின்­ற­னர்.

மேல்­வி­வ­ரம் பெற விரும்புவோர் ArtPoetryExhibition.peatix.com எனும் இணை­யத்­த­ளத்தை நாட­லாம்.

இக்கண்­காட்­சிக்கு அனு­மதி இல­வ­சம்.