தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடல்சீற்றத்தை எதிர்த்து கைதூக்கி மீட்டோம்

3 mins read
b5a50e85-f95f-42e2-a708-b4c115cfd0d0
மீட்புப் பணியில் ஈடுபட்ட 'ஹெலியோஸ் லீடர்' கப்பலின் ஊழியர்கள். (வலது) நடுக்கடலில் தத்தளித்த 303 இலங்கையரை மீட்கும் முயற்சி. படங்கள்: ஏஎஃப்பி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

வியட்­னா­மி­யக் கட­லோ­ரம் கடந்த திங்­கட்­கி­ழமை மூழ்­கும் நிலை­யில் தத்­த­ளித்த படகு ஒன்­றி­லி­ருந்து 303 இலங்­கை­வா­சி­கள் மீட்­கப்­பட்­ட­னர். மீட்­புப் பணிக்­குப் பின்­னர் கேப்­டன் அனில் சௌத்ரி, 51, ஜப்­பா­னிய கொடி தாங்­கிய தமது 'ஹெலி­யோஸ் லீடர்' கப்­பலை நேற்று முன்­தி­னம் சிங்­கப்­பூ­ரில் நிலை­நி­றுத்­தி­னார்.

'லேடி 3' என்­னும் மியன்­மார் படகு நடுக்­க­ட­லில் தத்­த­ளிப்­ப­தாக சிங்­கப்­பூர் கடல்­துறை மீட்பு ஒருங்­கி­ணைப்பு மையத்­தி­டம் இருந்து திங்­கட்­கி­ழமை பிற்­ப­கல் 2.50 மணி­வாக்­கில் 'ஹெலி­யோஸ் லீடர்' கப்­பல் தக­வல் பெற்­றது.

60,212 டன் எடை­தாங்­கும் அந்­தக் கப்­பல், அப்­போது ஜப்­பா­னி­லி­ருந்து ஜப்­பா­னிய, தென்­கொ­ரிய கார்­களை ஏற்­றிக்­கொண்டு சிங்­கப்­பூர் நோக்கி வந்து­ கொண்டு இருந்­தது. தக­வல் பெற்ற உடன் தென்­மேற்கே ஒன்­றரை மணி­நே­ரம் அந்­தக் கப்­பல் விரைந்து சென்று 'லேடி 3' பட­கைத் தேடி­யது. வியட்­னா­மின் தென்­க­ட­லோ­ரம் 210 கடல்­மைல் தூரத்­தில் இருந்த அப்­ப­டகை கப்­பல் அடைந்­தது.

மிக­வும் சவா­லான வானி­லைக்கு இடையே தமது 26 ஊழி­யர்­க­ளு­டன் நடுக்­க­ட­லில் மீட்­புப் பணியை நிறை­வேற்­றி­யது குறித்து, இந்­திய நாட்­ட­

வ­ரான கேப்­டன் அனில் சௌத்ரி 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளி­த­ழுக்கு சிறப்பு பேட்டி அளித்­துள்­ளார்.

"தத்­த­ளித்­தோரை மீட்க மூன்று மணி நேர­த்திற்கும் மேலானது. கட­ல­லை­கள் சீற்றமடைந்து மிரட்­டின. பட­கி­னுள் ஏற்­கெ­னவே நீர் புகுந்துவிட்டதால் எந்நேரத்திலும் மூழ்­கக்­கூ­டிய அபா­யத்­தில் அது இருந்­தது. அதில் இருந்த நூற்­றுக்­க­ணக்­கா­னோர் தங்­க­ளைக் காப்­பாற்­றும்­படி கத­றி­னர். கப்­ப­லைச் சுற்­றி­யும் பட­கைச் சுற்­றி­யும் 3 மீட்­டர் ஆழத்­தி­லி­ருந்து கடல் பொங்­கி­ய­தால் இரண்­டுமே ஆட்­டம் கண்­டன," என்று விவ­ரித்­தார் கேப்­டன் சௌத்ரி.

இருப்­பி­னும் கப்­பல் ஊழி­யர்­கள் பெரு­மு­யற்சி எடுத்து பட­கின் அரு­கில் கப்­பலைக் கொண்டு சென்­ற­னர். கப்­ப­லின் ஏணிப்­ப­கு­தியை பட­கின் மட்­டத்­திற்­குக் கீழி­றக்­கு­மாறு கேப்­டன் சௌத்ரி உத்­த­ர­விட்­டார். அந்த ஏணி­யைப் பயன்

­ப­டுத்தி அவர்­கள் பட­கின் மேல்­த­ளத்­திற்கு பத்­தி­ர­மாக ஏறி வந்­த­னர்.

பட­கில் இருந்­தோர் கப்­ப­லுக்கு மாற ஏணியை அவர்­க­ளால் பிடிக்க இய­ல­வில்லை. கட­ல­லை­க­ளின் சீற்­றத்­தால் கப்­ப­லும் பட­கும் முன்­னும் பின்­னும் சென்­ற­தாக ஹெலி­யோல் லீடர் கப்­ப­லின் தலை­மைப் பொறி­யா­ளர் தினேஷ் கன்னா, 39, கூறி­னார்.

இந்த நிலை­யில் ஏணி­யைக் கைவிட்டு, ஒவ்­வொ­ரு­வ­ரின் கையையும் பிடித்து தூக்கிக் காப்பாற்ற ஊழி­யர்­கள் முடி­வெ­டுத்து அதன்­படி செய்­த­னர்.

"அது சவா­லான பணி. கட­ல­லை­

க­ளால் கப்­ப­லும் பட­கும் தள்­ளப்­பட்­ட­போது இரண்­டும் ஒன்றுசேரும் ஒவ்­வொரு விநா­டி­யையும் பயன்­ப­டுத்தி ஒவ்­வொ­ரு­வரையும் கைபிடித்து கப்­ப­லுக்­குள் தூக்கிக் காப்­பாற்­றி­னோம்," என்­றார் திரு கன்னா. இவ­ரும் இந்­திய நாட்­ட­வரே.

"ஆனால், அப்போது பட­கில் இருந்­தோர் பீதி­யில் அவ­ச­ரப்­பட்­ட­னர். மேலே வர எல்­லா­ரும் மொத்­த­மாக முண்­டி­ய­டித்­த­போது அவ்­வாறு செய்­ய­வேண்­டாம் என்று அவர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­னோம். கார­ணம் கப்­ப­லி­லும் இல்­லா­மல் பட­கி­லும் இல்­லா­மல் கட­லுக்­குள் அவர்­கள் விழும் வாய்ப்பு அதி­கம்," என திரு கன்னா விவ­ரித்­தார்.

மீட்­கப்­பட்ட 303 பேரில் 19 பேர் பெண்­கள், 20 குழந்­தை­கள். அவர்­கள் அனை­ வ­ரும் கப்­ப­லின் சரக்­குப் பகு­திக்­குப் பத்­தி­ர­மாக அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர். இத்­தனை அதி­கம் பேருக்கு அந்­தப் பகு­தி­யில்­தான் அடைக்­க­லம் தர­மு­டி­யும் என்­ப­தால் அங்கு அவர்­களை ருஸ்­யாய்டி இர்­ஃபான், 19, என்­னும் சிங்­கப்­பூ­ரர் அழைத்­துச் சென்­றார். ஹெலி­யோஸ் லீடர் கப்­பலை நிர்­வ­கிக்­கும் என்­ஒய்கே ஷிப் மேனேஜ்­மென்ட் நிறு­வ­னத்­தைச் சேர்ந்­த­வர் இவர்.

303 பேரையும் முழுமையாக மீட்க இரவு 7.30 மணி ஆனது. காப்பாற்றப் பட்டவர்கள் கப்பல் கேப்டனுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். ஒருசிலர் ஊழியர்களின் காலில் விழுந்து உணர்ச்சிபொங்க நன்றி கூறினர்.

மீட்­கப்­பட்­டோ­ரின் பசி­யைத் தீர்க்க ரொட்­டி­யும் 'சூப்'பும் தயார் செய்­யப்­பட்­டிருந்தன.

நடுக்கடலில் 303 இலங்கையரை மீட்டது சிரமமான பணி: கேப்டன் சௌத்ரி