ஆர்வம் தூண்டும் முடிவைக்கொண்டிருத்தலே ஒரு கதையின் வெற்றி: பட்டுக்கோட்டை பிரபாகர்

ஆர்வம் தூண்டும் முடிவைக்கொண்டிருத்தலே ஒரு கதையின் வெற்றி: பட்டுக்கோட்டை பிரபாகர்

2 mins read
f1741281-9af3-4b72-90d9-59517aebbafb
பயிலரங்கில் பங்கேற்றோரில் சிலர். (வலது) திரு பட்டுக்கோட்டை பிரபாகர். படங்கள்: அனுஷா செல்வமணி -
multi-img1 of 2

கதை­க­ளின் முடிச்­சு­களை சுவா­ர­சி­ய­மாக அவிழ்ப்­பது எப்­படி, மர்­ம­மும் புதி­ரும் கலந்த கதை­களை எழு­து­வது எப்­படி போன்ற உத்­தி­

க­ளை­யும் நுட்­பங்­க­ளை­யும் நேற்று இங்கு நடை­பெற்ற பயி­ல­ரங்­கு­வழி விளக்­கி­னார் புகழ்­பெற்ற தமிழ் எழுத்­தா­ளர் பட்­டுக்­கோட்டை பிர­பா­கர். சிங்­கப்­பூர் எழுத்­தா­ளர் விழாவை ஒட்டி ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கத்­தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த குற்­றப்­பு­னைவு பயி­ல­ரங்கை சுவா­ர­சி­ய­மான முறை­யில் அவர் வழி­ந­டத்­தினார்.

'ஜன்­னல் கைதி­கள்', 'நீ?' போன்ற பல துப்­ப­றி­யும் நாவல்­களை எழு­திய இவர், திரைப்­ப­டங்­க­ளுக்­கும் தொலைக்­காட்­சித் தொடர்­

க­ளுக்­கும் வச­னம் எழு­தி­யுள்­ளார்.

வாழ்க்­கை­யில் நடக்­கும் உண்­மைச் சம்­ப­வங்­களில் ஒன்­றைத் தேர்ந்­தெ­டுத்து, அதை ஆராய்ந்து, அதில் இடம்­பெற்ற கதா­பாத்­தி­ரங்­களை வரு­ணித்து, காட்­சி­களை உரு­வாக்கி, சிறு­கதை எழு­து­வது எப்­படி என்­ப­தை­யும் அவர் விளக்­கி­னார்.

"ஒரு கதை என்­பது, அலங்­க­ரிக்­கப்­பட்ட பொய் அல்­லது உண்மை. கதை­கள் எழுத வயது வரம்­பில்லை. குற்­றப் பின்­னணிக் கதை­க­ளுக்­குக் கற்­பனை மிக அவ­சி­யம். ஒரு கதையை எழு­தும்­போது, அதன் முடி­வைச் தெளி­வாக உறு­தி­செய்து, அந்த முடிவை அடை­யும் நோக்­கில் கதையை நகர்த்­திச் செல்ல வேண்­டும்," என்­றார் திரு பிர­பா­கர்.

"குற்­றப் பின்­னணிக் கதை­களை எழு­தும்­போது, குறை­வான கதா­பாத்­தி­ரங்­க­ளு­டன், குறிப்­பிட்ட ஒரு கால­கட்­டத்­தைத் தேர்ந்­தெ­டுத்து, கதையை நகர்த்­தி­னால் புரி­யும்­ப­டி­யாக இருக்­கும்.

"எழுத்­தா­ளர்­கள், வாச­கர்­க­ளு­டன் ஓர் உறவை வளர்த்­துக்­கொள்­வ­து­தான் ஓர் எழுத்­தா­ள­ரின் அடிப்­படை குணம். அவர்­க­ளுக்கு எளி­மை­யான நடை­யில் கதை­யைப் புரிய வைப்­பது, எழுத்­தா­ள­ரின் திறமை என்­றார் அவர். குற்­ற­வியல் கதை­களில் அடிப்­ப­டை­யாக, 'யார் பேசு­கி­றார்', 'என்ன நடக்­கிறது', 'எப்­ப­டிப்­பட்ட உணர்ச்­சி­கள் வெளிப்­ ப­டு­கின்­றன' ஆகிய வினாக்­

க­ளுக்கு விடைகாண வேண்­டும்.

"வச­னமோ, வாக்­கி­யமோ சிந்­த­னை­க­ளைத் தூண்­டும் வகை­யில் இருக்க வேண்­டும். குற்­ற­வி­யல் கதை­களில் அடை­மொ­ழிச் சொற்­களைச் சேர்த்­துக்­கொண்­டால் அது கதைக்கு மெரு­கூட்­டும்.

"குற்­ற­வி­யல் கதை­களில், குறிப்­பாக கதை­யின் இறு­தியை வியப்பு, கேள்­வி­யோடு முடிக்­க­வேண்­டும். அப்­போ­து­தான் என்ன நடந்­தி­ருக்­கும் என வாச­கர்­கள் தட­யங்­க­ளைத் தேடத் தொடங்­கு­வர்," என்று விளக்­கி­னார் திரு பிர­பா­கர்.

பயி­ல­ரங்­கில் கிட்­டத்­தட்ட 30 பேர் கலந்­து­கொண்டு பல­ன­டைந்­த­னர். கதையை மாறு­பட்ட கோணத்­தி­லி­ருந்து எழுத இனி முயற்சி செய்­யப்போவ­தா­கக் கூறி­னார் பயி­ல­ரங்­கில் பங்­கேற்ற பீட்டி உயர்­நி­லைப்­பள்ளி மாணவி இலக்­கியா.

தொழில்­நுட்­பத் துறை­யில் பணி­பு­ரி­யும் அருள்­கு­ம­ரன், 48, "குற்­ற­வி­யல் கதை­க­ளுக்­கெ­னப் புதி­தாக யோசித்து, சுவா­ர­சி­ய­மான கதை­களை உரு­வாக்­கும் திறமை அனை ­வ­ருக்­கும் உண்டு. இன்று கற்­றுக்­கொண்ட உத்­தி­க­ளைப் பயன்­

ப­டுத்தி எழுத்­துப் பய­ணத்தை தொட­ரப்போகி­றேன்," என்­றார்.