ஈராண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பிரபல பாடகர் சித்ஸ்ரீராமின் 'ஆல் லவ் நோ ஹேட்' இசை நிகழ்ச்சி, சிங்கப்பூர் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவுசெய்துள்ளது. புகழ்பெற்ற பாடல்களான 'கண்ணான கண்ணே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'புது வெள்ளை மழை', 'மறுவார்த்தை' முதலிய பாடல்களை சிங்கப்பூர் மேடையில் பாடி, நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரின் மனதைக் கவர்ந்தார் சித்ஸ்ரீராம்.
'மேஸ்ட்ரோ புரொடக்ஷன்ஸ்', 'இஷ்தாரா ஜுவெல்லரி' இணைந்து நடத்திய இசை நிகழ்ச்சிக்கு 5,000 நுழைவுச்சீட்டுகள் விற்கப்பட்ட நிலையில் 'தி விஸ்தா தியேட்டர்' அரங்கம் நிரம்பி வழிந்தது.
சித்ஸ்ரீராமுடன் இசைக் கலைஞர்களான கெபா ஜெரமையா, ராம்குமார், தபாஸ் நரேஷ், சஞ்சீவ் டி., லியோன் ஜேம்ஸ் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
ஸ்ரீராமின் தனித்துவ பாணியைப் பெரிதும் ரசித்ததாக பகிர்ந்து கொண்டார் நிகழ்ச்சிக்கு வந்து நிறைவடைந்த ஆத்மிகா லட்சுமி.
மற்றொருவரான மூலா வெங்கடேஷ் அஷ்வினி , மனதுக்கு நெருங்கிய சிறுவயதுப் பாடல்களை மீண்டும் கேட்டது மகிழ்ச்சி அளித் ததாகக் கூறினார். நண்பர்களுடன் சேர்ந்து சித் ஸ்ரீராமின் பாடல்களை நேரடியாகக் கேட்டது மெய்சிலிர்க்க வைத்த தாகக் கூறினார் இளையர் வைசாலி செந்தில் குமார்.
கடந்த ஈராண்டுகளில் உலகளவில் இசை நிகழ்வுகளின் தரம் கூடியுள்ளது. அதற்கேற்ப, ஒலி அமைப்புகளில் கூடுதலாக முதலீடு செய்து, நிகழ்வை பிரம்மாண்டமானதாக படைத்துள்ளோம்," என்றார் இஷ்தாரா ஜுவெல்லரி, மேஸ்ட்ரோ புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியான திரு பார்த்திபன், 50.

