இச்சிறு பறவைகளும் இனி சிறகடிக்கலாம்

இச்சிறு பறவைகளும் இனி சிறகடிக்கலாம்

2 mins read

சிறப்புத் தேவையுடையவர் என அடையாளம் காணப்படும் ஒருவர் சிகிச்சை அமர்வுகளில் அல்லது சிறப்புத் தேவை பள்ளிகளில் சேர்க்கப் படுவதுண்டு. இருப்பினும், சிறப்புத் தேவையுடை யோருக்கு மாற்று சிகிச்சை முறைகளும் உண்டு. இத்தகைய சிகிச்சைவழி அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது என்பதையும் அவர்களும் ஒரு நிறைவான வாழ்க்கையை வாழலாம் என்பதையும் அறிந்து வந்தது தமிழ் முரசு

'ஆட்­டி­சம்' எனப்­படும் மதி­யி­றுக்­கம், அறி­வு­சார் குறை­பா­டு­கள், உடல்­ரீ­தி­யான குறை­பா­டு­கள், பேச்சு அல்­லது மொழி ஆற்­ற­லில் குறை­பாடு, கண்­பார்­வையை அல்­லது செவித்­தி­றனை இழத்­தல் - இவை­யெல்­லாம் 'சிறப்­புத் தேவை­யு­டை­ய­வர்' என ஒரு­வ­ரைக் குறிப்­பி­டச் செய்­பவை. மித­மான சிறப்­புக் கல்­வித் தேவை­க­ளு­டைய 27,000 மாண­வர்­கள் கல்வி அமைச்­சின் பள்­ளி­களில் படிக்­கின்­ற­னர் என்­றும் சிறப்­புக் கல்­விக்­கான பள்­ளி­களில் படிப்­போ­ரின் எண்­ணிக்கை 7,000 என்­றும் கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் கடந்த பிப்­ர­வரி மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் குறிப்­பிட்­டார்.

பாலர் பள்ளி மாண­வர்­கள் இடையே வளர்ச்சி தடை­ப­டு­வது குறித்து 2020ஆம் ஆண்டு நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்­றில் கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னை­யும் தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­

ம­னை­யும் கிட்­டத்­தட்ட 5,000 பாலர்­

க­ளை அடை­யா­ளம் கண்­டன. இது ஒவ்­வோர் ஆண்­டும் அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இதற்­கி­டையே, நேர நிர்­வா­கம், பொறுப்­பு­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்­தல் போன்ற அம்­சங்­களில் சிறப்­புத் தேவை­யு­டைய மாண­வர்­கள் சிக்­கல்­களை எதிர்­நோக்­கு­வ­தா­க­வும் இத­னால் உயர்­கல்­விச் சூழல் அவர்­க­ளுக்­குச் சவா­லாக அமை­கிறது என்­றும் நிபு­ணர்­கள் சிலர் கூறு­கின்­ற­னர்.

சிறப்­புத் தேவை­யு­டை­யோர் சாதா­ர­ண­மா­ன­வர்­க­ளைப்­போல வாழ இய­லாது என்­பது அவர்

­க­ளது பல­ரின் எண்­ண­ம். அதே­நேரம் சிறப்­புத் தேவை­யு­டை­யோர் சமு­தா­யத்­தில் ஒன்­று­க­லந்து, பிற­ரைப்­போல வாழ முடி­யும் என்­போ­ரும் உண்டு. மருத்­து­வ­ரீ­தி­யான உதவி நாடு­வ­தற்­கும் மேலாக மாற்று சிகிச்­சை­மு­றை­கள் அவர்களுக்குக் கை கொடுக்கும் என்­கின்­ற­னர் சிலர்.