மனரீதியில் ஆழமாகப் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்க்கையில் நேர்ந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாதவர்கள் போன்றோருக்கு கலை ஒரு சிறந்த சிகிச்சை என வலியுறுத்துகிறார் 36 வயது புவனேஸ்வரி பிரகாசம் (படம்).
ஓவியம், களிமண் கொண்டு சிற்பங்கள் செய்வது, துணி நெய்வது, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்கள் அல்லது இயற்கைப் பொருள்
களால் ஆன செடிகள், உலர்ந்த பூக்கள், கற்கள், கிளைகள் மூலம் படைப்புகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஒருவரை ஈடுபடுத்துவதன் மூலம் அவர் அனுபவித்த துயரத்தை அவருக்கு நினைவூட்டாமல் தீர்த்து வைப்பதே கலை சிகிச்சையாகும்.

