மதியிறுக்கப் பாதிப்பு, 'ஏடிஎச்டி' குறைபாடு ஆகியவற்றால் சிறுவயதிலிருந்து அவதியுற்றாலும் முஹம்மது அர்ஷத் பாவாஸ், 25, இளையர் சமுதாயத்திற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.
கொவிட்-19 நோய்த்தொற்று காலத்தில் அனைத்துலக அளவில் ஒளிபரப்பப்பட்ட 'ஒன் வோர்ல்டு: டுகெதர் அட் ஹோம்' எனும் நிதித் திரட்டு நிகழ்ச்சியை அர்ஷத் தம் தாயாருடன் பார்த்து வந்தார். தாம் பார்த்த நிகழ்ச்சியின் மூலம், அர்ஷத்துக்கு புதிய உத்வேகம் பிறந்தது. தாமும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை இணையத்தில் நடத்தவேண்டுமென்ற முனைப்பில், தம்மைப் போன்ற சிறப்புத் தேவையுடையவர்களுக்கு இணையத்தில் ஒரு தளத்தை உருவாக்கினார்.
சிறப்புத் தேவையுடைவர்கள் தங்களின் குறைபாடுகளால் மற்றவர்களைப் போல தங்கள் திறன்களை வெளிப்படுத்த முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை முறியடிக்க இதுபோன்ற தளம் வழிவகுக்கும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது.
ஈராண்டுகளுக்கு முன் இவர் துவங்கிய 'இன்குளுசிவிட்டி 4 ஆல்' (Inclusivity 4 All) இணைய நிகழ்ச்சியில், சிறப்புத் தேவையுடை யோர் தங்களுடைய ஆற்றலை வெளிப்படுத்தத் தொடங்கினர். சிறப்புத் தேவையுடையோர் தங்களின் குறைபாடுகளால் துவண்டுபோகாமல் தங்களிடம் உள்ள நிறை களில் கவனம் செலுத்த வேண்டும்.
இதற்கான சூழலை உருவாக்கி அவர்களுக்கு அரணாக நிற்கிறது நம் சமூகம் என்பது இங்கு குறிப் பிடத்தக்கது.

