பூட்டிய மனது திறக்கும்; பூப்பூக்கும்

பூட்டிய மனது திறக்கும்; பூப்பூக்கும்

2 mins read

குயின் சிறப்பு மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யம் 2012ஆம் ஆண்டு செயல்­

ப­டத் தொடங்­கி­யது. இதன் தலை­வ­ராக இருக்­கும் ரேச்­சல் ரினா, பள்ளிப் படிப்­புக்கு முன் அல்­லது பின் தம் நிலை­யத்­திற்கு வரும் சிறப்­புத் தேவை­யு­டைய மாண­வர்­க­ளுக்கு வேறு­பட்ட கற்­றல்­மு­றை­யைப் பயன்­ப­டுத்­து­கி­றார்.

இந்­நி­லை­யத்­தில் செயல்­மு­றைக் கல்வி, சமூ­கத் திறன்­கள், இயக்­கத்­தி­றன்­கள், கலை­கள் ஆகி­ய­வற்­றிற்கு முக்­கி­யத்­து­வம் தரப்­ப­டு­கிறது. விளை­யாட்­டு­களும் நீச்­சல் பயிற்­சி­களும் நிலை­யத்­தில் வழங்­கப்­ப­டு­கின்­றன. சிறப்­புத் தேவை­யு­டை­யோ­ருக்­குப் புது­வி­த­மான சிகிச்­சை­மு­றை­கள் நிச்­ச­யம் கைகொ­டுக்­கும் என்­றார் ரேவன் ஆலோ­சனை நிறு­ வ­னத்­தின் மூத்த ஆலோ­ச­க­ரும் உள­வி­ய­லா­ள­ரு­மான திரு பிர­வீன் நாயர்.

சிறப்­புத் தேவை­யு­டைய யார் வேண்­டு­மா­னா­லும் புது சிகிச்­சை­க­ளின்­வழி தங்­க­ளின் வாழ்க்­கைத் திறன்­களை மேம்­ப­டுத்­த­லாம் என அவர் கருது­ கி­றார்.

சிறப்­புத் தேவை­யு­டை­ய­வர்­கள் சில சம­யங்­களில் தங்­க­ளின் உணர்­வு­களை வெளிப்­ப­டுத்த சிர­மப்­ப­ட­லாம். அத்­த­கைய நேரங்­களில் ஒரு குறிப்­பிட்ட கலை வழி­யாக அவர்­கள் தங்­க­ளின் உள்­ளத்­தில் இருப்­பதை வெளிப்­ப­டுத்த முடி­யும்.

வார்த்­தை­க­ளால் அவர்­கள் வர்­ணிக்க முடி­யாத ஒன்­றுக்கு, மாற்று சிகிச்­சை­மு­றை­கள் நன்மை பயக்­கும். இதன் மூலம் அவர்­கள் மற்­ற­வர்­க­ளு­டன் நன்­றாக உரை­யா­ட­வும் தங்­க­ளின் வாழ்க்­கையை வழி­

ந­டத்­த­வும் கற்­றுக்­கொள்­வார்­கள் என்­கி­றார் ஆலோ­சனை உள­வி­ய­லா­ள­ரும் உள­வி­யல் நிபு­ண­ரு­மான பத்மா ஜெய்­ராம் (படம்).

சிறப்­புக் கல்­வித் துறை­யில் ஒன்­பது ஆண்­டு­க­ளாக ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் அருள்­கு­ம­ரன் தங்­க­ராசு, 34, "புதிய பாணி­யில் நடத்­தப்­படும் சிகிச்­சை­கள், சிறப்­புத் தேவை­யு­டை­ய­வர்­க­ளின் மனதை நிதா­னப்­ப­டுத்த உத­வு­கின்­றன. மேலும், சிகிச்சை அளிக்­கும் நேரத்­தில் பாடங்­க­ளைக் கற்­பிக்­கும்­போது அந்­தப் பிள்­ளை­கள் கூடு­தல் கவ­னம் செலுத்­து­வார்­கள்," என நம்­பு­கி­றார்.