எழுத்தாளர் கழகம்: வெளிநாட்டு ஊழியரின் இரு நூல்கள் வெளியீடு

1 mins read
e28146fc-c312-43df-9242-51159b739050
-

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழக ஏற்­பாட்­டில் கவி­ஞர் தங்க. வேல்­மு­ரு­க­னின் இரு கவிதை நூல்­கள் வெளி­யி­டப்­பட்­டன.

தேசிய நூலக வாரி­யக் கட்­ட­டத்­தின் 5வது தளத்­தி­லுள்ள இமேஜி­னே­ஷன் அண்ட் பாசி­பி­லிட்டி அறை­களில் இவ்­விழா நடை­பெற்­றது.

யாரோ­டும் பகை­யில்லை, உடை­யாத குமி­ழி­கள் எனும் தலைப்­பி­லான நூல்­களைச் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட ஜோஸ்கோ பயண நிறு­வன நிர்­வாக இயக்­கு­ந­ரான நாகை தங்­க­ராசு என்­னும் போப் ராஜ் வெளி­யிட்­டார்.

விழா­விற்­குத் தலை­மை­யேற்ற எழுத்­தா­ளர் கழ­கத் தலை­வர் நா. ஆண்­டி­யப்­பன், வெளி­நாட்டு ஊழி­யர் ஒரு­வ­ரின் நூல்­க­ளைக் கழ­கம் வெளி­யி­டு­வது இதுவே முதல் முறை என்று கூறி­னார். அர­சாங்­கம் வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் இலக்­கி­யங்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிப்­ப­தால் தாங்­களும் இவ்­வாறு முடிவு செய்­த­தாக அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­கலைக்­க­ழக மாணவி அருணா கந்­த­சாமி யாரோ­டும் பகை­யில்லை என்­னும் நூலை­யும் தக­வல் தொழில்­நுட்ப அதி­காரி கார்த்­திக் சிதம்­ப­ரம் உடை­யாத குமி­ழி­கள் என்­னும் நூலை­யும் அறி­மு­கம் செய்­த­னர்.

கவி­மாலை அமைப்­பின் நிறு­வனர் பிச்­சி­னிக்­காடு இளங்கோ, சென்னை தமிழ் அலை பதிப்­பக உரி­மை­யா­ளர் இசாக் ஆகி­யோர் வாழ்த்­துரை ஆற்­றி­னர். கவி­ஞர் பால­மு­ரு­கன் வாழ்த்­துக் கவிதை வாசித்­தார். இறு­தி­யாக ஏற்­பு­ரை­ ஆற்­றிய நூலா­சி­ரி­யர் அனை­வ­ருக்­கும் நன்றி தெரி­வித்­துக் கொண்­டார்.

தகவல், படம்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்