சமூகத்துடன் கிறிஸ்துமஸ் குதூகலம், கொண்டாட்டம்

சமூகத்துடன் கிறிஸ்துமஸ் குதூகலம், கொண்டாட்டம்

3 mins read
e90ab794-6b7f-4f93-a5f0-bf5513daabe2
-
multi-img1 of 2

இந்த கிறிஸ்­து­மஸ் பண்­டி­கையை முன்­னிட்டு சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து, மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக அங் மோ கியோ தமிழ் மெத­டிஸ்ட் திருச்­சபை கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டங்­களை சென்ற வாரம் ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

அங் மோ கியோவாசி­க­ளுக்­குக் கிறிஸ்­து­மஸ் உணர்­வைக் கொண்டு சேர்க்­கும் வகை­யில், கடந்த 17ஆம் தேதி மதி­யம், அங் மோ கியோ சென்ட்­ரல் ஸ்டேஜ் அரு­கி­லும் அங் மோ கியோ ஹப் கடைத்­தொ­கு­திக்கு வெளி­யி­லும் தமிழ் மெத­டிஸ்ட் திருச்­ச­பைக் குழு­வி­னர் கிறிஸ்­து­மஸ் கீதங்­க­ளைப் பாடி, கிறிஸ்­து­மஸ் பரி­சுப்­பொ­ருள் களை விநி­யோ­கித்­த­னர்.

அங் மோ கியோ தமிழ், சீனம், ஆங்­கி­லம் ஆகிய மூன்று மெத­டிஸ்ட் திருச்­ச­பை­களும் ஒன்­றி­ணைந்து ஏற்­பாடு செய்த இந்­தக் கொண்­டாட்­டத்­தில், மூன்று மொழி­க­ளி­லும் நிகழ்ச்­சி­கள் நடந்­தே­றின.

தமிழ்த் திருச்­சபை அன்­பளிப்­புப் பைக­ளை­யும் பொட்­ட­லங்­களை­யும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யது.

கிறிஸ்­து­மஸ் பற்றி ஆழ­மாக அறிந்­து­கொள்­ளும் வித­மாக தமிழ்த் திருச்­ச­பை­யின் பாட­கர் குழு கிறிஸ்­து­மஸ் கீதங்­க­ளைப் பாடி­னார்­கள். நிகழ்ச்­சி­யின் இறு­தி­யில் அதிர்ஷ்ட குலுக்கு இடம்­பெற்­றது.

அங் மோ கியோ வட்­டா­ர­வா­சி­யான திரு­மதி தெய்­வானை நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு ஏழ்­மை­யான குடும்­பத்­தில் பிறந்த இயே­சு­வைக் குறித்து பாடப்­பட்ட கீதத்­தைத் கேட்டு தாம் மகிழ்ந்­த­தா­கப் பகிர்ந்­து­கொண்­டார்.

கடந்த 18ஆம் தேதி­யன்று, அங் மோ கியோ தமிழ் மெத­டிஸ்ட் திருச்­சபை வெவ்­வேறு இடங்­களில் மூன்று கிறிஸ்­து­மஸ் நிகழ்ச்­சி­களை நிகழ்த்­தி­யது.

சிங்­கப்­பூ­ரில் வசிக்­கும் வெளி­நாட்டு பெண் ஊழி­யர்­களும் அங் மோ கியோ வட்­டா­ரத்­தின் பெண்­களும், பெண்­க­ளுக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்ட கொண்­டாட்­டத்­தில், ஒன்­றி­ணைந்­த­னர்.

இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வேலை செய்ய வரும் பணிப்­பெண்­கள், தாதி­யர், வேலை அனு­மதி அட்டை வைத்­தி­ருக்­கும் பெண்­கள் என பல­தரப்பு வெளிநாட்டு ஊழியர்களையும் உள்­ள­டக்க வேண்­டும் என்­ப­தைக் கருத்­தில்கொண்டு ஆடல், பாடல், விளை­யாட்டு­கள் ஆகி­ய­வற்­றுக்கு அங் மோ கியோ தமிழ் மெத­டிஸ்ட் திருச்­சபை பெண்­கள் குழு­வி­னர் ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர்.

சுமார் 14 ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் இல்­லப் பணிப்­பெண்­ணாக வேலை செய்­யும் 44 வயது திரு­மதி புக­ழேந்­தி­ரன் மேரி, "என்­னைப் போன்ற பெண்­க­ளுக்கு இந்த கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டம் மிகுந்த மகிழ்ச்­சியை அளித்­தது. இந்­நி­கழ்ச்­சி­யில் பொழுதை மகிழ்ச்சியாகக் களித்­த­தோடு மற்ற பெண்­க­ளோடு நட்­பு­ற­வை­யும் வளர்த்­துக்­கொண்­டேன்," என்­றார்.

மாலை­யில், வெளி­நாட்டு ஊழி­யர்­களுக்கு கிறிஸ்­து­மஸ் உணர்­வைக் கொண்டு சேர்க்­கும் வகை­யில், அங் மோ கியோ தமிழ், சீன மெத­டிஸ்ட் திருச்­சபை குழு­வி­னர் பல நட­வடிக்­கை­களை ஏற்­பாடு செய்­தி­ருந்­த­னர்.

கிறிஸ்­து­மஸ் கீதங்­கள் பாடி அவர்­களை மகி­ழ­வைத்­த­தோடு, அவர்களுக்கு இரவுணவும் வழங்கினர்.

கிறிஸ்­து­மஸ் கொண்­டாட்­டத்­தில் கலந்து­கொண்ட, கட்­டு­மா­னத் துறை ஊழி­ ய­ரான 40 வயது திரு மரு­து­முத்து நட­ரா­ஜன், "சீன நண்­பர்­க­ளோடு இணைந்து இந்­தக் கொண்­டாட்­டத்­தில் ஈடு­பட்­டது எங்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யாக இருந்­தது. எப்­பொ­ழு­தும் வேலை செய்து­­கொண்­டி­ருக்­கும் எங்­க­ளுக்கு இது ஒரு புது அனு­ப­வமா­க­வும் அமைந்­தது," என்­றார்.

செங்­காங் வட்­டா­ர­வா­சி­க­ளுக்­கும் அங் மோ கியோ தமிழ் மெத­டிஸ்ட் திருச்­சபை கிறிஸ்­து­மஸ் உணர்வை கொண்டு சேர்த்­துள்­ளது. செங்­காங் தமிழ் திருச்­சபை தொண்டூழியர்களும் செங்­காங் மெத­டிஸ்ட் திருச்­சபை தொண்டூழியர்களும் இணைந்து ஏற்­பாடு செய்த இந்­தக் கொண்­டாட்­டம், சிறு­வர்­க­ளை­யும் பெரி­ய­வர்­க­ளை­யும் ஈர்த்­தது.

மாயா­ஜால நிகழ்ச்சி, பலூன் பொம்மைக் கூடம், விளை­யாட்­டு­கள், கலை, கைவி­னைக் கூடம், கிறிஸ்­து­மஸ் கீதங்­கள் ஆகி­யவை சிறப்பு அம்­சங்­க­ளாக நிகழ்ச்­சி­யில் இடம்­பெற்­றன.

கிறிஸ்­து­மஸ் தாத்­தா­ அனைத்து தரப்­பி­ன­ரை­யும் கவ­ர்ந்தார். சிறு­வர்­கள் அவரு டன் புகைப்­ப­டங்­கள் எடுத்­துக்­கொண்­ட­னர்.

"விழாக் காலத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் நோக்கத் தில், இவ்­வாண்டு நோய்த்­தொற்­றுக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட சூழ்­நி­லை­யில் நாங்­கள் பல நிகழ்ச்­சி­களை ஏற்­பாடு செய்­தோம்.

"அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் வித­மாக இந்த நிகழ்ச்­சி­கள் அமைந்திருந்தன என நம்­பு­கி­றோம்," என்­றார் அங் மோ கியோ தமிழ் மெத­டிஸ்ட் திருச்­சபை குழு­வின் தலை­வரான 46 வயதாகும் திரு ஆசிர் ஜெய­ராஜ்.