மோனலிசா
உடற்குறையுள்ள மாணவர்
களுக்கான சிறப்பு கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் ‘தி கில்ட்’ எனும்
சிறப்புப் பள்ளி, தங்ளின் சாலையில் உள்ள ஃபினிக்ஸ் பார்க்கில் இயங்கி வருகிறது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிகாரபூர்வமாகத் தொடங்கிய இப்பள்ளியில் 12 வயது முதல் 25 வயது வரையிலான சிறப்புத் தேவை மாணவர்கள் பயிலலாம்.
தற்சமயம் சிங்கப்பூர் உட்பட பல்வேறு வெளிநாட்டு மாணவர்களும் இப்பள்ளியில் பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு
களாக ஆசிரியராகப் பணிபுரிந்த திருவாட்டி ஜெய்ன் நடராஜு, உடற்குறையுள்ள மாணவர்
களுக்கென அனைத்து வசதி
களுடன் கூடிய ஒரு பள்ளியைத் திறக்க வேண்டும் என்ற தன்னுடைய நீண்டநாள் கனவைத் தன்னுடைய கணவர் திரு கணேஷ்
கணபதியின் துணையுடன்
நனவாக்கியுள்ளார்.
இங்கு பயிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் சமூக ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் தனித்திறமை மற்றும் கல்விசார் ரீதியாகவும் வாழ்வில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளத் தயார்ப்படுத்தப்படுகின்றனர்.
இம்மாணவர்களுக்கு உணவு, பானத்துறை, கலைத்துறை, சில்லறை வர்த்தகத் துறை, நிர்வாக வேலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கால்பதிக்க பயிற்சியளிக்கப்
படுகிறது. மாணவர்களுக்கு அவர்களுடைய தனித்திறமை சார்ந்த முழுமையான கல்வி அனுபவம் வழங்க இப்பள்ளி வளாகத்தில் கலை மற்றும் வடிவமைப்பு அறை, தச்சு வேலை அறை, பன்னோக்கு மண்டபம், புகைப்பட அறை, இசை அறை, உடற்பயிற்சிக் கூடம், வாழ்க்கைத்திறன்கள் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
“ஒவ்வொரு மாணவரும் எவ்விதப் பேதமுமின்றி சிறந்த கல்வி பெற வேண்டும். சமூகத்தில் உடற்குறையுள்ளோருக்கும் சரிசமமான பங்கு உண்டு. அவ்வகையில் அனைவர் போலவும் தனித்து வாழ அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டியது அவசியம். எங்கள் பள்ளி மூலமாக அதனைச் செயல்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்,” என்று 53 வயது திருவாட்டி ஜெய்ன் நடராஜு தெரிவித்தார்.
உடற்குறையுள்ள மாணவர்களுக்காகப் பல்வேறு ஒருநாள் நிகழ்வுகளையும் பயிலரங்கு
களையும் இப்பள்ளி நடத்துகிறது. தி கில்ட் பள்ளி குறித்து கூடுதல் தகவல்களைப் பெற https://www.theguild.edu.sg/ இணையத்தளத்தை நாடலாம்.