45 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ப்புத் தாய்

ஆ. விஷ்ணு வர்­தினி

திரு­வாட்டி காளி­முத்து சார­தா­விற்கு மொத்­தம் 16 பிள்­ளை­கள். இவர்­களில் நால்­வர் மட்­டுமே அவ­ரது சொந்­தப் பிள்­ளை­கள்; மற்ற 12 பேரும் அவ­ரால் குழந்தை பரு­வத்­தி­லி­ருந்தோ, பதின்ம வய­தி­லி­ருந்தோ வளர்க்­கப்­பட்­டோர்.

45 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக குழந்­தை­க­ளைப் பார்த்துக் கொண்ட 83 வயது திரு­வாட்டி சார­தா­விற்கு நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் தொண்­டூ­ழி­யர்­கள், பங்­கா­ளி­களுக்­கான விருது வழங்­கும் விழா­வில் தலை­சி­றந்த வாழ்­நாள் தொண்­டூ­ழி­யர் விருது வழங்­கப்­பட்­டது.

சார­தா­வின் சொந்த மகள் விஜ­ய­லட்­சு­மியே இந்த நீண்ட, நிறை­வான பய­ணத்­துக்கு வித்­திட்­ட­வர். 1969ஆம் ஆண்­டில் முதல் முறை­யாக குறை­மா­தக் குழந்தை ஒன்­றைப் பார்த்­துக்­கொள்ள வாய்ப்பு அமைந்­தது. அவ­ரு­டன் அக்­கு­ழந்­தை­யைப் பார்க்க கே.கே. மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றி­ருந்த விஜ­ய­லட்­சுமி கட்­டா­யம் அவளை வளர்த்­தாக வேண்­டும் என்று அடம்­பி­டித்­தி­ருந்­தார்.

“விஜ­யா­வுக்கு குழந்­தை­கள் என்­றால் கொள்ளை ஆசை. அப்­போது கைய­ளவே இருந்த விம­லாவை (உண்மை பெய­ரல்ல) வீட்­டிற்­குக் கொண்டு வந்து என்­னோடு சேர்ந்து என் மகளும் வளர்த்­தாள்,” என்­றார் சாரதா.

துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, ரயில் விபத்­தொன்­றில் சிக்கி விஜ­ய­லட்சுமி 1976ல் மறைந்­தார். அந்த இழப்பை இன்று வரை ஏற்­றுக்­கொள்ள முடி­யாத திரு­வாட்டி சாரதா, அவ­ரின் நினை­வி­லேயே அடுத்த 11 குழந்­தை­க­ளை­யும் வளர்க்க தொடங்­கி­ய­தா­க­வும், அவர்­க­ளுக்­கா­கவே வாழத் தொடங்­கி­ய­தா­க­வும் கூறி நெகிழ்ந்­தார்.

மலே­சி­யா­வில் பிறந்த சாரதா, ஆறு சகோ­த­ரர்­க­ளு­டன் மொத்­தம் 12 குடும்ப உறுப்­பி­னர்­க­ளு­டன் கூட்­டுக் குடும்­பத்­தில் வளர்ந்­த­வர். தனது நான்கு பிள்­ளை­களும் பிறந்த பின்­னர், ‘அல்­மோ­னர்’ எனப்­படும் அக்­கால மருத்­துவ சமூக சேவை­யா­ள­ராக இயங்­கிய உற­வி­னர் ஒரு­வ­ரின் அனு­ப­வத்­தைக் கண்டு குழந்தை வளர்ப்­பில் இறங்­கி­னார்.

ஒரு காலத்­தில் ஒரு கைக்­குழந்தை உட்­பட ஆறு பிள்­ளை­கள் வரை சார­தா­வின் வீட்­டில் ஒன்­றாக வாழ்ந்­த­னர். “குழந்­தை­களை வளர்க்­கும்­போது எனக்கு சோர்வே ஏற்­ப­டாது. காலை நான்கு மணிக்­கெல்­லாம் எழுந்து நள்­ளி­ரவு வரை வேலை பார்ப்­பேன். என் கண­வ­ரும் எங்­க­ளது வளர்ப்பு பிள்­ளை­கள்­மீது அதிக பாசம் வைத்­தி­ருந்­தார்,” என்­றார் சாரதா.

மகள் விஜ­ய­லட்­சுமி மறைந்த நிலை­யில் வளர்ப்பு மக­ளான விம­லா­வு­டன் அவ­ரின் மறைவு வரை சாரதா நெருக்­க­மான தொடர்­பில் இருந்­தார். அவ­ரின் குடும்­பத்­தா­ரு­டன் விம­லா­வும் அவ­ரின் தாயா­ரும் தீபா­வ­ளிப் பண்­டி­கை­களை ஒன்­றா­கக் கொண்­டா­டி­யதை சாரதா நினை­வு­கூர்ந்­தார்.

1993ல் தனது கண­வ­ரின் மறை­வுக்­குப் பிறகு தனி­யாக வாழ்ந்­து­கொண்­டி­ருந்த சாரதா, அடுத்த சில ஆண்­டு­களில் தனது கடைசி வளர்ப்பு மகன் டேனி­யலை (உண்­மைப் பெயர் அல்ல) பார்த்­துக்­கொள்ள தொடங்­கி­னார். அச்­ச­ம­யத்­தில், அவ­ரது மூன்று பிள்­ளை­களும் திரு­ம­ண­மாகி தனிக்­கு­டித்­த­னம் சென்­றி­ருந்­த­னர். அவ­ருக்கு அப்­போது கிட்­டத்­தட்ட 60 வயது.

கடந்த 25 ஆண்­டு­க­ளாக சாரதா­வின் பரா­ம­ரிப்­பில் உள்ள டேனி­யல், சிறப்­புத் தேவை உள்­ள­வர். அவரை ஆறாண்­டு­க­ளுக்கு முன் சட்­ட­பூர்­வ­மாக தத்­தெ­டுத்­துக் கொண்­டார் சாரதா.

சார­தா­வின் பய­ணம் அவ­ரது மூத்த மகன் பால­சுப்­பி­ர­ம­ணி­யத்­தை­யும் ஊக்­கு­வித்­தது. ஏறத்­தாழ பதி­னான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் அம்­மா­வின் வழி­யி­லேயே அவ­ரும் அவ­ரது மனை­வி­யும் குழந்தை வளர்ப்­பில் ஈடு­ப­டத் தொடங்­கி­னர்.

“என் பள்­ளிப் பரு­வத்­தி­லி­ருந்தே அம்மா குழந்­தை­க­ளைப் பரா­ம­ரித்து வரு­கி­றார். அதன் தாக்­கத்­தா­லேயே குழந்தை வளர்ப்­பில் நானும் இறங்­கி­னேன்,” என்­றார், தற்­போது இரு நடுத்­தர வயது பிள்­ளை­க­ளுக்­கும் ஒரு வளர்ப்­புப் பிள்­ளைக்­கும் தந்தையான 65 வயது பால­சுப்­பி­ர­மணி­யம்.

சார­தா­வுக்கு ஆறாண்­டு­க­ளுக்கு முன்­னர் இத­யம் தொடர்­பி­லான சிக்­கல் ஏற்­பட்டு இத­ய­மு­டுக்கி (பேஸ்­மேக்­கர்) சாத­னத்­தைப் பொருத்­த­வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது. அது குறித்து பேசு­கை­யில், “எனது சொந்த பிள்­ளை­கள் கரை­யே­றி­விட்­ட­னர். டேனி­ய­லுக்­கா­கவே உயி­ரைக் கையில் பிடித்­துக் கொண்­டி­ருக்­கி­றேன்,” என்­றார்.

சன்­டெக் கண்­காட்சி, மாநாட்டு மையத்­தில் இடம்­பெற்ற விழா­வில் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்­லி­யி­ட­மி­ருந்து விரு­தைப் பெற்­றுக்­கொண்டார் திரு­வாட்டி சாரதா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!