உரு­வச்­சின்ன வடி­வ­மைப்பு போட்­டி­யில் முதல் பரி­சைத் தட்டிச் சென்­ற சசி­கு­மார்

2 mins read
584a3981-3488-41bd-b9b4-d4f6533ca406
-
multi-img1 of 2

தமிழ்­மொ­ழி­யின் பயன்­பாட்டை சிங்­கப்­பூ­ரில் ஊக்­கு­விக்­கும் வகை­யில் வளர்­த­மிழ் இயக்­கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த உரு­வச்­சின்ன வடி­வ­மைப்பு போட்­டி­யில் முதல் பரி­சுத் தொகை­யாக, $2,000ஐ தட்­டிச் சென்­றார் திரு சசி­கு­மார், 30.

எதிர்­கா­லத்­தைச் சேர்ந்த சிறு­வன் ஒரு­வன், நிகழ்­கா­லத்­தில் தமிழ்­மொழிப் பயன்­பாட்­டை­யும் தமிழ்­மொழி மீதான ஆர்­வத்­தை­யும் நம் இளைய தலை­மு­றை­யி­ன­ரி­டையே ஊக்­கு­விக்­கும் வித­மாக 'அன்பு' என்று பெய­ரி­டப்­பட்ட உரு­வச்­சின்­னம் அமைந்­துள்­ளது.

வளர்­த­மிழ் இயக்­கம் தமிழ்­மொழி விழா­வுக்­காக அறி­மு­கப்­ப­டுத்த விரும்­பும் இந்த உரு­வச்­சின்­னம், உரு­வாக்­கம் பெற இரண்டு வாரங்­கள் ஆன­தாக சசி­கு­மார் குறிப்­பிட்­டார். உல­கம் மின்­னி­லக்­க­ம­யம் ஆவதை முன்­னி­லைப்­ப­டுத்­தும் வகை­யில் உள்­ளது இவ­ரு­டைய தயா­ரிப்பு.

இவ்­வாண்­டின் தமிழ்­மொழி விழா­வின் கருப்­பொ­ருள் 'அ' எழுத்­தில் தொடங்­கு­வ­தால் நண்­பர்­க­ளின் பரிந்­து­ரை­யில், இவர் அந்த உரு­வச்­சின்­னத்­திற்கு 'அன்பு' என்று பெய­ரிட்­டார்.

இக்­க­தா­பாத்­தி­ரம் 3000ஆம் ஆண்­டில் வாழ்ந்­து­கொண்­டி­ருக்க, தற்­போ­தைய ஆண்­டான 2023க்குப் பய­ணிப்­ப­தா­கக் கற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது.

இதன்­படி 2023ல் தமிழ்­மொ­ழி­யின் பயன்­பாடு, குறிப்­பாக இளை­யர்­க­ளுக்­கி­டையே அதை வலுப்­ப­டுத்­த­வும் எதிர்­கா­லத்­தில் தமிழ்­மொழி செழிப்­பாக இருக்­கும் என்ற நம்­பிக்­கையை விதைக்­க­வும் இந்த உரு­வச்­சின்­னம் மீண்­டும் 3000ஆம் ஆண்­டுக்­குப் பய­ணிப்­ப­தாக இருக்­கும்.

எதிர்­கா­லத்­தி­லும் தமிழ்­மொ­ழிப் புழக்­கம் சிறப்­பாக இருக்­கும் என்­ப­தைச் சித்திரிக்­கும் வண்­ணம் இந்த உரு­வச்­சின்­னம் அமை­யும்.

உயர்­நி­லைப் பள்ளி ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் சசி­கு­மார், வடி­வ­மைப்­புக் கலை­யைத் தமது பொழு­து­போக்­கா­கக் கொண்­டுள்­ளார்.

தமது 17வது வய­தில் வடி­வ­மைப்பு மென்­பொ­ருள்­க­ளுக்கு அறி­மு­க­மாகி பின்­னர் 19வது வய­தில் தமது முதல் வரை­கலை வடி­வ­மைப்­பைப் படைத்­தார்.

தமிழ் நாட­கங்­க­ளுக்­குச் செல்­வது, தமிழ் தயா­ரிப்­பு­க­ளுக்­குச் செல்­வது ஆகி­யவை மூலம் தம்­மைத் தமிழ்­மொ­ழி­யு­டன் தொடர்­பு­ப­டுத்­திக்­கொள்­ளும் இவர், நேரம் கிடைக்­கும்­போ­தெல்­லாம் தமிழ் புத்­த­கங்­களும் வாசித்து வரு­கி­றார்.

தமக்­குக் கிடைத்த $2,000 ரொக்­கத்தை நேப்பா­ளத்­தில் இருக்­கும் வச­தி­கு­றைந்த மாண­வர்­க­ளின் கல்­விக்கு நன்­கொ­டை­ய­ளிக்க விரும்­பு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

தமிழ்­மொழி தொடர்­பில் இப்­ப­ரிசை வென்­றுள்ள சசி­கு­மார், இதில் பெரு­மி­தம் கொள்­கி­றார்.

"என்­ன­தான் நவீ­ன­ம­ய­மா­கும் இந்­தச் சூழ­லில் நாம் வாழ்ந்­தா­லும் மொழி மீது நாம் கொண்­டுள்ள ஆர்­வ­மும் மொழி நம் மீது கொண்ட தாக்­க­மும் என்­றும் மாறா­தது," என்­றார் அவர்.

செய்தி: அனுஷா செல்­வ­மணி