கடற்படையில் கோலோச்சும் காரிகையர்

கடற்படையில் கோலோச்சும் காரிகையர்

3 mins read
bdc5ab25-7dbe-49d4-ac6c-7f705cf676ea
நாட்­டிற்கு சேவை­யாற்­றும் ஆவ­லில் 16 வய­தில் கடற்­ப­டை­யில் இணைந்­தார் தீபா. படம்: தீபா -
multi-img1 of 2

ஆ. விஷ்ணு வர்­தினி

கடு­மை­யான உழைப்பு, அர்ப்­பணிப்பு உணர்வு ஆகிய பண்­பு­களால் சிங்­கப்­பூர் குடியரசு கடற்படையில் திறம்­ப­டப் பணி­புரிந்து வரு­கின்­ற­னர் தீபா­வும் ஜெயந்­தி­யும். பல சவால்­க­ளைச் சமா­ளித்து தங்­களை நிலை­நி­றுத்­தி­ய­து­டன் தொடர்ந்து ஏற்­றம்­கண்டு வந்­துள்­ள­னர் இவ்­வி­ரு­வ­ரும்.

'ராணுவ நிபு­ணர் 2' ஆக அண்­மை­யில் பதவி உயர்வு பெற்­றுள்ள 26 வயது எலை­ஸர் தீபா ஜீவன் ராஜ், பத்­தாண்டு கால­மாய் கடற்­ப­டை­யில் பெற்­றுள்ள அனு­பவங்­கள் பல. இப்­ப­தவி உயர்வு கிட்­டும்­போது கரு­வுற்­றிந்த அவர், பணி­யில் மேன்­மே­லும் உயர, மேற்­பார்­வை­யா­ளர் படிப்பை மேற்­கொண்டு தேர்ச்சி அடை­ய­வும் செய்­தார்.

நாட்­டிற்கு சேவை­யாற்­றும் ஆவ­லில் 16 வய­தில் கடற்­ப­டை­யில் இணைந்­தார் தீபா. தற்­போது கடற்­படை தள­வாட தள­பத்­தி­யத்­தில் மூத்த இணைப் பொறியாளராகப் பணி­பு­ரி­கி­றார்.

பதின்ம வய­தில் மிக­வும் அமை­தி­யாக இருந்த அவர் துணிந்து பேச­வும் மாட்­டார். தீபா­வின் சிறிய உடற்­கட்­டைக் குறிப்­பிட்டு கடற்­ப­டை­யில் தாக்­குப்­பி­டிக்க முடி­யாது என்­ற­னர் சிலர். அவரோ, ஆண்­க­ளின் பங்­க­ளிப்­புக்கு நிக­ராக பெண்­களும் சேவை­யாற்ற முடி­யும் என்­பதை நிரூ­பிக்­கும் முனைப்­பில் தொடர்ந்து உழைத்­தார்.

இளம் வய­தில் 'விண்ட் சர்­ஃபிங்' முத­லிய கடல்­சார் விளை­யாட்­டு­களில் ஈடு­படும் வேளை­யில் தொலை­வில் இருந்து அவர் போர்க்­கப்­பல்­க­ளைப் பார்த்­த­துண்டு. ஒரு­நாள் கடற்­படை வீர­ராக அத்­த­கைய கப்­ப­லில் பணி­யாற்­று­வோம் என்று அப்­போது அவர் நினைத்­துக்­கூ­டப் பார்த்­த­தில்லை.

இரட்­ச­ணி­யர் சேனை­யின் சிறு­வர் இல்­லத்­தில் வளர்ந்த தீபா, தற்­போது ஓர் அழ­கான குடும்­பத்­தின் தலைவி. கண­வர் ஜீவன் ராஜும் கடற்­ப­டை­யில் பணி­பு­ரி­கி­றார்.

இவர்­க­ளுக்கு ஒரு வய­தில் மகளும் கைக்­கு­ழந்­தை­யான மக­னும் உள்­ள­னர். கண­வ­னும் மனை­வி­யும் சில நேரங்­களில் மாதக்­க­ணக்­கில் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் காணமுடி­யா­மல் போவது, குழந்­தை­க­ளு­டன் ஒரு நாளில் சில மணி நேரமே செல­விட முடி­வது என, இக்­கட்­டான சூழல்­களை ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தோள்­கொ­டுத்து கடந்து வந்­துள்­ள­னர்.

"தீபா எப்­போ­தும் நம்­பிக்­கை­யு­ட­னும் மீள்­தி­ற­னு­ட­னும் செயல்­படு­ப­வர். கடற்­ப­டை­யில் பெற்ற அனு­ப­வங்­க­ளு­டன் நல்ல தலை­வ­ரா­க­வும் அவர் உரு­வெ­டுத்­துள்­ள­தில் பெருமைகொள்­கி­றேன்," என்­றார் 'ரா­ணுவ நிபுணர் 2' ஆகப் பணியாற்றும் ஜீவன் ராஜ்.

பணி­யில் மேலும் முன்னேறவும் தனது மக­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக விளங்­க­வும் உறு­தி­யெ­டுத்­துள்­ளார் தீபா.

தீபா­வைப் போலவே, தனது இள­மைக் காலத்­தில் கடற்­ப­டை­யின் விளம்­பர அறிக்­கை­யைக் கண்டு வேலையில் சேர்ந்தவர் ஜெயந்தி ஆறு­மு­கம்.

வழக்­க­நி­லைத் தேர்வை எழு­திய பின்­னர், கூட்டு பல­து­றைத் தொழிற்­கல்­லூரி பட்­ட­யக்­கல்­வித் திட்­டத்­தின்­கீழ் தாதி­யர் படிப்பு மேற்­கொண்­டார் அவர்.

படிப்பை முடித்­த­வு­டன் நீரடி போர் மருத்­துவ வீர­ராக சிங்­கப்­பூர் கடற்­ப­டை­யில் இணைந்­தார். அப்­போது இந்­தப் பத­வியை வகித்த ஒரே பெண்­ணாக விளங்­கி­னார் ஜெயந்தி.

பணி­யி­டத்­தில் சுற்றி ஆண்­களே இருந்த நிலை­யால் அவர் அவ்­வப்­போது மன­உ­ளைச்­ச­லுக்கு ஆளா­னார்.

போர்ப் பயிற்­சி­களில் அதிக எடை­யுள்ள பைகளை சுமந்­த­படி நீண்­ட­தூ­ரம் நடக்­க­வேண்­டும். வலி­யைப் பொறுத்­துக்­கொண்டு பயிற்­சி­களை முழு­மை­யாக முடிக்­க­வேண்­டும்.

ஆனால், சக ஆண் வீரர்­கள் தன்னைச் சமமாக நடத்­தி­யது இவருக்கு நம்­பிக்கை ஊட்­டி­யது.

சவால்­கள் இருந்­த­போ­தும் மன­துக்­குப் பிடித்த இப்­ப­ணிக்­கா­கத் தொடர்ந்து போரா­டி­னார். தற்­போது 43 வய­தா­கும் ஜெயந்தி தலைமை மருத்­து­வப் பயிற்­று­விப்­பா­ள­ரா­கப் பணி­பு­ரி­கி­றார்.

இரு பிள்­ளை­க­ளின் தாயான ஜெயந்­திக்கு, பிள்­ளை­க­ளின் வாழ்­வில் உள்ள சில மைல்­கற்­களை அருகில் இருந்து கொண்­டாட முடி­யா­தது உள்­ளிட்ட சில வருத்­தங்­களும் உண்டு.

எடுத்­துக்­காட்­டாக, மூத்த மகன் குழந்­தை­யாக இருந்­த­போது முத­லில் அடி எடுத்­து­வைத்­ததை அவர் காண முடி­ய­வில்லை. இருப்­பி­னும், கண­வர் தின­க­ரன் குடும்­பத்­தைப் பரா­ம­ரிப்­ப­தில் பெரி­தும் கைகொ­டுப்­ப­தா­கக் கூறி­னார் ஜெயந்தி.

20 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் கிழக்­கு திமோ­ரில் செல­விட்ட ஐந்து மாதங்­கள் ஜெயந்­திக்கு மறக்க முடி­யா­தவை. அங்­குள்ள வச­தி­கு­றைந்த மக்­க­ளுக்கு தன் குழு­வு­டன் இணைந்து மருத்­துவ உதவி வழங்­கி­னார் அவர்.

கடற்­ப­டை­யில் இணை­யும் இளம்­பெண்­க­ளுக்கு மதி­யு­ரை­ஞ­ராக வழி­காட்­டும் ஜெயந்தி, சிறு­பான்­மை­யி­ன­ராக இருப்­ப­தில் அவர்­க­ளுக்­குள்ள கவ­லை­க­ளைப் போக்கி நம்­பிக்கை ஊட்­டு­கி­றார்.

"நாட்­டிற்கு சேவை­யாற்­று­வ­தில் பேதம் ஏது­மில்லை. பெண்ணோ ஆணோ, ராணுவ அனு­ப­வம் ஒரு­வ­ரின் முழு­மை­யான ஆற்­றலை உணர வைக்க வல்­லது," என்­கி­றார் ஜெயந்தி.