சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் மாதாந்திரக் கதைக்களத்தில் கதை சொல்லி செவியின்பம் சங்கீதா, 'ஒலி ஓவியம்' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.
இன்று மாலை 4.00 மணிக்கு சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஐந்தாவது மாடியில் அமைந்துள்ள இமேஜினேஷன் அறையில் கதைக்களம் நடைபெற இருக்கிறது.
கழகத்தின் முன்னாள் தலைவர் சுப. அருணாசலத்தின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி இடம்பெறும். உள்ளூர் எழுத்தாளர் அறிமுகம் அங்கத்தில் கவிஞர், எழுத்தாளர் மாதங்கி பங்குபெறுகிறார். மேல்விவரங்களுக்கு: திருவாட்டி கிருத்திகா, செயலாளர் kiruthikavirku@gmail.com மற்றும் திருவாட்டி பிரேமா மகாலிங்கம் 91696996

