உற்சாகத்துடன் தொடங்கிய ரமலான் நோன்பு

உற்சாகத்துடன் தொடங்கிய ரமலான் நோன்பு

4 mins read
d0c4a210-2a74-4247-bc5b-60f45ebdda79
-
multi-img1 of 2

மோன­லிசா

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட நிலை­யில் ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு இவ்­வாண்­டின் புனித ரம­லான் மாத நோன்­பு நடவடிக்கைகள் கோலா­க­ல­மா­கத் தொடங்­கி­யுள்ளன.

சென்ற வியா­ழக்­கி­ழமை இரவு 7.16 மணிக்கு முதல் நாள் நோன்பு துறக்­கப்­பட்­டது. சிங்­கப்­பூர் பள்ளி­வா­சல்­களில் முஸ்­லிம்­கள் உற்­சா­கத்­து­டன் தொழு­கை­யில் கலந்து­கொண்­ட­னர்.

ஈராண்­டு­க­ளுக்­கு­முன் தொழு­கைக்­கான அழைப்­பில் 'வீட்­டி­லேயே தொழு­தி­டுங்­கள்' என்று குறிப்­பிட வேண்­டிய கட்­டா­யம் இருந்ததை நினை­வு­கூர்ந்­தார் டன்­லப் ஸ்தி­ரீட்­டில் உள்ள அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­ச­லின் மூத்த இமாம் அஸீ­ஸுல்­லாஹ் ஹசானி.

"பின்­னர் கொவிட்-19 தொற்­றின் வீரி­யம் குறைந்­த­போ­தி­லும் வழி­பாட்டு நடை­மு­றை­க­ளைக் குறு­கிய காலத்­தி­லேயே முடிக்க வேண்­டிய சூழல் நில­வி­யது. 'பயான்' சொற்­பொ­ழிவை விரை­வாக முடிப்­பது, குறை­வான எண்­ணிக்­கை­யில் தொழுகை, தொழு­வ­தற்­கான விரிப்பை அவரவரே கொண்­டு­வ­ரு­வது போன்ற கட்­டுப்­பா­டு­கள் பல­ருக்­கும் முழு­மை­யான திருப்­தியை அளிக்­க­வில்லை," என்­றார் அவர்.

"இவ்­வாண்டு மக்­கள் இஃப்தார் செய்­வ­தற்­கான அனு­மதி முழு­மை­யா­கக் கிடைத்­துள்­ளது. நோன்­புக் கஞ்சி உள்­பட, இஃப்தா­ருக்­குத் தேவை­யான வச­தி­க­ளை­யும் நிறை­வான முறை­யில் வழங்­கி­வ­ரு­கி­றோம், " என்று அவர் கூறி­னார்.

ஒரே நேரத்­தில் 500க்கு மேற்­பட்­டோர் நோன்பு துறப்­ப­தற்­கான ஏற்­பாடு குறித்­தும் திருக்­குர்-ஆனை முழு­மை­யாக ஓதித் தொழும் வழக்­கம் மீண்­டும் தொடங்­கி­யுள்­ளது குறித்­தும் அவர் கூறி­னார்.

இப்­பள்­ளி­வா­ச­லில் அன்­றா­டம் இரவு 8.45 மணிக்கு இஷா தொழுகை, இரவு 9 மணிக்கு தரா­வீஹ் சிறப்­புத் தொழுகை ஆகி­யவை நடை­பெ­றும்.

பென்­கூ­லன் பள்­ளி­வா­சல் நிர்­வா­கக் குழுத் தலை­வர் முக­மது ரஃபீக், "இவ்­வாண்டு முகக்­க­வ­சம் அணி­யா­ம­லும் முன்­ப­திவு இல்­லா­ம­லும் பள்­ளி­வா­ச­லுக்கு வரு­வ­தில் மக்­க­ளி­டையே உற்­சா­கத்­தைக் காண முடி­கிறது. கடந்த சில ஆண்­டு­க­ளை­விட ஒவ்­வொரு தொழு­கைக்­கும் 30 விழுக்­காட்­டிற்கு மேற்­பட்­டோர் கலந்­து­கொள்­வது வழக்­க­நிலை வாழ்க்­கைக்கு நாம் திரும்­பி­யுள்­ளதை உணர்த்­து­கிறது," என்று கூறி­னார்.

இப்­பள்­ளி­வா­ச­லில் ரம­லான் மாதத்­தில் ஒவ்­வொரு நாளும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை 400க்கு மேற்­பட்ட நோன்­புக் கஞ்­சிப் பொட்­ட­லங்­கள் விநி­யோ­கிக்­கப்­படும். ஒவ்­வொரு நாளும் இறு­தித் தொழு­கைக்­குப் பிறகு இரவு 10.15 மணி முதல் இமா­மின் சிறப்பு 'பயான்' சொற்­பொ­ழிவு இடம்­பெ­றும்.

அதி­க­மா­னோர் கூடு­வதை முன்­னிட்டு தொண்­டூ­ழி­யர்­கள் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார் சவுத் பிரிட்ஜ் சாலை­யில் அமைந்­துள்ள ஜாமிஆ சூலியா பள்­ளி­வா­சல் நிர்­வா­கக் குழுத் தலை­வர் ரஷீத் ஸமான்.

"பொது­வாக ஒவ்­வொரு தொழு­கைக்­கும் 1,000 முதல் 1,200 பேர் கூடும் இப்­பள்­ளி­வா­ச­லில், தற்­போது மறு­சீ­ர­மைப்­புப் பணி நடை­பெற்­று­வ­ரு­வ­தால் தொழுகை செய்­யும் இடத்­தின் ஒரு பகுதி மூடப்­பட்­டுள்­ளது. இத­னால் இவ்­வாண்டு ஒரு தொழு­கைக்கு 200 முதல் 300 பேருக்கு மட்­டுமே அனு­மதி. மறு­சீ­ர­மைப்­புப் பணி­க­ளால் பெண்­கள் தொழுகை செய்­யும் இடம் மூடப்­பட்­டுள்­ளது. காலை உணவு 100 பேருக்கு மட்­டுமே வழங்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது," என்­றார் அவர்.

அங்­கு­லியா பள்­ளி­வா­ச­லின் செய­லா­ள­ரும் நாடா­ளு­மன்ற முன்­னாள் நிய­மன உறுப்­பி­ன­ரு­மான முக­மது இர்­ஷாத், "முதல் நாள் தொழு­கை­யின்­போது ஏறத்­தாழ 3,000 பேர் கலந்­து­கொண்­ட­னர். ரம­லான் மாதம் முழு­வ­தும் வார நாள்­களில் 500 நோன்­புக் கஞ்­சிப் பொட்­ட­லங்­களும் வார இறுதி யில் 800 முதல் 1,000 பொட்­ட­லங்­களும் விநி­யோ­கிக்­கப்­படும்," என்று கூறி­னார்.

"கூட்ட நெரி­ச­லைச் சமா­ளிக்க தொண்­டூ­ழி­யர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். பல இன, பல சமய நல்­லி­ணக்­கத்தை வலி­யு­றுத்­தும் வித­மாக 'இண்­டர்­ஃபெ­யித் கம்­யூ­னிட்டி சர்­வி­சஸ்' அமைப்­பின் மூலம் மற்ற சம­யங்­க­ளைச் சார்ந்­த­வர்­கள் இஸ்­லாம் பற்றி தெரிந்­து­கொள்­வ­தற்­கான அங்­க­மும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது," என்­றார் அவர்.

"சிங்­கப்­பூ­ரில் வாழும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் அதி­க­மா­னோர் நோன்பு துறக்க பள்­ளி­வா­சலை நாடு­வார்­கள். கடந்த ஆண்­டு­களில் அவர்­கள் மிகுந்த சிர­மத்­திற்­குள்­ளா­யி­னர். தற்­போது கட்­டுப்­பா­டு­கள் நீங்கி, அவர்­கள் மகிழ்­வு­டன் ரம­லான் மாத நோன்­பில் கலந்­து­கொள்­வது மன­நிறைவை அளிக்­கிறது," என்று கூறி­னார் இந்­திய முஸ்­லிம் பேர­வைத் தலை­வர் ஹாஜி அ. முக­மது பிலால்.

பேர­வை­யின் இளை­யர் பிரிவு அடுத்த மாதம் 9ஆம் தேதி பெஞ்­சுரு பொழு­து­போக்கு மையத்­தில் 1,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் ஒன்­றி­ணைந்து நோன்பு துறக்­கும் நிகழ்­சிக்கு ஏற்­பாடு செய்­துள்­ள­தாக அவர் கூறி­னார்.

"வீட்­டி­லேயே தொழுகை செய்ய முடிந்­தா­லும் பள்­ளி­வா­ச­லுக்கு வரு­வது நிறை­வான அனு­ப­வம். ரம­லான் மாதத்­தின் முதல் நாளில், நோன்பு துறக்க, பள்­ளி­வா­ச­லில் பல­ரு­ட­னும் கூடித் தொழுகை செய்­தது மிகுந்த நம்­பிக்­கை­யை­யும் உற்­சா­கத்­தை­யும் அளிக்­கிறது," என்று கூறி­னார் பல்­க­லைக்­க­ழக மாண­வி­யான 23 வயது அஸ்­மினா பானு.

தனி­யார் நிறு­வ­னத்­தில் மேலா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் 29 வயது ஷம்­ஷீர் அக­மது, பள்­ளி­வா­சல்­களில் மிகச்­சி­றந்த முறை­யில் ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்­த­தா­கக் கூறி­னார். அனை­வ­ரை­யும் ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு தயக்­கமோ பயமோ இன்றி கட்­டித்­த­ழுவி வாழ்த்து தெரி­வித்­தது மிக­வும் நெகிழ்ச்­சி­யாக இருந்­தது என்­றும் ரம­லான் மாதத்­தின் ஒவ்­வொரு நாளும் பள்­ளி­வா­ச­லுக்­குச் செல்­லும் ஆர்­வத்­தைத் தூண்­டி­யுள்­ளது என்­றும் அவர் கூறி­னார்.