ஜப்பான் மலர் விழாவில் சிங்கப்பூர் ரங்கோலிக் கலைஞர்

ஜப்பான் மலர் விழாவில் சிங்கப்பூர் ரங்கோலிக் கலைஞர்

2 mins read
1b4c805d-ec69-4ef3-9901-f6d90add3a5e
-

சிங்­கப்­பூ­ரின் பிர­பல ரங்­கோ­லிக் கலை­ஞர் விஜ­ய­லட்­சுமி மோகன் அண்­மை­யில் ஜப்­பா­னில் நடை­பெற்ற 'தி வேர்ல்ட் ஃப்ளவர் கார்­பெட்' எனும் மலர் விழா­வில் சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­தித்து மலர்க் கோலம் வரைந்­துள்­ளார்.

ஜப்­பான் தலை­ந­கர் தோக்­கி­யோ­வின் ஹச்­சி­ஜோ­ஜிமா நகரில், இம்­மாதம் 5ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்­கள் இவ்விழா நடை­பெற்றது.

இந்­நி­கழ்­வில் சிங்­கப்­பூர், இந்­தியா, ஜப்­பான், ஸ்பெ­யின், ஜெர்­மனி உள்­ளிட்ட ஒன்­பது நாடு­க­ளைச் சார்ந்த ஏறத்­தாழ முப்­ப­துக்­கும் மேற்­பட்ட மலர்க் கலைஞர்களும் மற்ற கைவினைக் கலைஞர்களும் (Ephemeral Artists) பங்­கேற்றனர். அவர்கள் தங்­கள் திறன்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் கைத்­தி­றன்­களையும் வெளிப்­படுத்­தி­னர்.

'மலர்­க­ளுக்கு எல்­லை­கள் இல்லை' எனும் கருப்­பொ­ரு­ளில் நடை­பெற்ற இந்­நி­கழ்­வில் மலர்க் கோலக் காட்சியுடன் கருத்­த­ரங்கு, குழு கலந்­து­ரை­யா­டல் போன்ற பல அங்­கங்­கள் இடம்­பெற்­றன.

இந்­நி­கழ்­வின் மூன்­றாம் நாள், 30,000 ஃப்ரீசியா மலர்­களைக் கொண்டு கலை­ஞர்­கள் மலர் கம்­ப­ளத்தை வடி­வ­மைத்­த­னர். இந்த மலர்­களை கலை­ஞர்­களே முதல் இரண்டு நாள்களும் சேக­ரித்­த­னர்.

சிங்கா ரங்­கோலி பிரை­வேட் லிமிடட் நிறு­வ­னத்­தின் இயக்கு­நரான திரு­வாட்டி விஜ­ய­லட்­சுமி மோகன், 63, "அனைத்­து­லக அள­வில் சிங்­கப்­பூ­ரின் கலை­களை நிலை­நி­றுத்­து­வ­தற்­கான வாய்ப்­பாகவே இப்­பங்­க­ளிப்பைக் கரு­து­கிறேன். இந்­நி­கழ்வு பல்­வேறு நாடு­க­ளு­டன் கலைத்­துறை பிணைப்பை வலுப்­ப­டுத்­தும் வாய்ப்­பா­க­வும் அமைந்­தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்­கிறது," என்­றார்.

நிகழ்­வின் இறு­தி­நா­ளில் திரு­வாட்டி விஜ­ய­லட்­சுமி 'சிங்கா ரங்­கோலி' பயி­ல­ரங்கை நடத்­தினார்.

இப்­ப­யி­ல­ரங்­கில் ரங்­கோலி கோலங்­கள் இடும் பல்­வேறு முறை­க­ளை­யும் உத்­தி­களை­யும் இவர் கற்­றுத்­தந்­தார்.

ஆகப்­பெ­ரிய ரங்­கோலி வடி­வ­மைப்பை உரு­வாக்­கி­ய­தற்­காக 'கின்­னஸ் சாதனை புத்­த­கத்­தில்' இடம்­பெற்­றி­ருக்­கும் திரு­வாட்டி விஜ­ய­லட்­சுமி, 44 முறை 'சிங்­கப்­பூர் புக் ஆஃப் ரெக்­கார்­டஸ்' சாதனை புத்­த­கத்­தி­லும் இடம்­பெற்­றி­ருக்­கி­றார்.

மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ப்ரூ­செல்ஸ் நாட்­டில் ஏறத்­தாழ ஒரு மில்­லி­யன் மலர்­க­ளைக் கொண்டு 19,000 சது­ர­ அடி­யில் உரு­வாக்­கப்­பட்ட மலர் கம்­ப­ளம் நிகழ்­வி­லும் திருவாட்டி விஜ­ய­லட்­சுமி மோகன் பங்­கு­கொண்­டுள்ளார்.

செய்தி: மோனலிசா