நடனமும் இசையும் சங்கமித்த 'சம்நிதி' குறுந்தொகை நிகழ்ச்சி

நடனமும் இசையும் சங்கமித்த 'சம்நிதி' குறுந்தொகை நிகழ்ச்சி

2 mins read
38df0f3d-f3b6-410c-9838-9c3fc8c1a1d5
-

நட­ன­மும் இசை­யும் ஒரு­சே­ரக் கலந்து கண்­க­ளுக்­கும் செவி­களுக்­கும் விருந்­த­ளிக்­கும் வித­மாக அண்­மை­யில் நடந்­தே­றிய 'சம்­நிதி - குறுந்­தொகை காலத்­தி­லி­ருந்து - மறு­பார்வை' நிகழ்ச்சி அமைந்­தது. தமிழ்­மொழி விழா­வை­யொட்டி அண்­மை­யில் நடை­பெற்ற இந்­நி­கழ்ச்சி, தமிழ் இலக்­கி­யத்­தின் எட்­டுத்­தொகை நூல்­களில் ஒன்­றான குறுந்­தொ­கைப் பாடல்­க­ளுக்­குக் கலை­ஞர்­கள் நட­ன­மா­டு­வ­தாக அமைந்­தது.

குறுந்­தொ­கை­யின் காதல் பாடல்­க­ளின் உணர்­வி­னைத் தத்­ரூ­ப­மா­கக் கண்­முன்னே கொண்டு­வந்த இந்­நி­கழ்ச்சி, பார்­வை­யா­ளர்­களை நெகிழ்­வு­றச் செய்­தது. வய­லின், கிட்­டார், கடம் உள்­ளிட்ட இசைக்­க­ரு­வி­களு­டன் பாட­கர்­கள் தங்­க­ளின் இனிய குர­லில் பாடி­ வந்­தி­ருந்­தோரை மகிழ்­வித்­த­னர்.

இந்­நி­கழ்வு விகே கலை குழு­வி­னர் ஏற்­பாட்­டில் இம்­மா­தம் 9ஆம் தேதியன்று இரு காட்­சி­களாக ஸ்டாம்­ஃபர்ட் கலை நிலைய உள்­ள­ரங்­கில் நடை­பெற்­றது.

"தமிழ்மொழி­யின் இலக்­கி­யக் கூறு­க­ளைக் கலை வடி­வில் எளி­மை­யான முறை­யில் மக்­க­ளுக்­குப் புரி­யும் விதத்­தில் படைப்­ப­தையே நோக்­க­மா­கக் கொண்டு இந்­நி­கழ்­வி­னைப் படைத்­துள்­ளோம்," என்று கூறி­னார் விகே கலை குழு­வின் நிறு­வ­னர் ஷெரீன் ஜீவிதா ஜோசப், 36.

நிகழ்­வில் பங்­கேற்ற பல்­கலைக்­க­ழக மாணவி அம்­ரிதா பூர்­ணா­கி­ரண், 18, "இந்­நி­கழ்­வில் திரை­யி­சைப் பாடல்­க­ளை­யும் சேர்த்­தி­ருந்­த­தால் பார்­வை­யா ளர்­க­ளால் எளி­தில் தங்­க­ளோடு தொடர்­பு­ப­டுத்­திக்­கொள்ள முடிந்­தது. கலை­ஞர்­க­ளின் படைப்பு மெய்­சி­லிர்க்க வைத்­தது," என்று கூறி­னார்.

"இலக்­கி­யப் பாடல்­களை நடன வடி­வில் கண்டு ரசித்­தது மிக­வும் புது­மை­யாக இருந்­தது. தொடக்­கப் பள்ளி மாண­வி­யான என் மக­ளுக்­கும் படைப்பு புரி­யும் வகை­யில் இருந்­தது," என்று கூறி­னார் சுய உத­விக் குழு ஒன்­றில் பணி­பு­ரி­யும் சுதா பெரி­ய­சாமி, 40.

முன்­னாள் நட­னக் கலை­ஞ­ரும் குடும்­பத்­த­லை­வி­யு­மான ராணி தையல்­நா­யகி, 75, "இறுதி அங்­க­மான குழு நட­னத்­தில் அனைத்துக் கலை­ஞர்­களும் ஒரு­சே­ரப் பிழை ஏற்­ப­டாது ஆடி­யது என்­னு­டைய பழைய நடன அரங்­கேற்­றங்­களை நினை­வூட்­டி­யது," என்­றார்.

நிகழ்ச்சி தொடக்­கம் முதல் இறுதிவரை அனைத்து வய­தி­ன­ரும் கண்டு ரசிக்­கும் வித­மாக அமைந்­தது.

செய்தி: மோனலிசா