தமி­ழில் மரபு சார்ந்த ஓர் இனிய சுற்­றுலா

தமி­ழில் மரபு சார்ந்த ஓர் இனிய சுற்­றுலா

2 mins read
b120efcb-7d8a-4259-a647-02d41a9036a5
-

சிங்­கப்­பூர் இந்­தி­யர்­க­ளின் வர­லாறு, கலா­சா­ரம், மர­பு­டைமை போன்­ற­வற்றை மக்­க­ளுக்கு தமிழ் மொழி­யில் எடுத்­துக்­கூ­றும் வித­மாக இந்­திய மர­பு­டைமை நிலை­யம் இம்மாதம் 8ஆம் தேதியன்று சுற்­றுலா ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

சுற்­று­லா­வில் குடும்­பங்­கள், மாண­வர்­கள் உள்­பட தமிழ்மொழி மீதான பற்­றால் மொழி­யைக் கற்றுக்­கொண்ட சீன ஆட­வர் ஒரு­வ­ரும் தமிழ்மொழி மாதத்தை சிங்­கப்­பூ­ரில் அனு­ச­ரிக்க விரும்பி மலே­சி­யா­வி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்த இரு­வ­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக சுற்­று­லாக்­க­ளுக்கு விளக்­க­வு­ரை­களை ஆற்­றி­வ­ரும் வழி­காட்டி ரோஷினி ஷாமளா இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தில் உள்ள கண்­காட்­சி­க­ளை­யும் சிறப்­பு­க­ளை­யும் அதன் வர­லாற்றுக் கூறு­களை­யும் பற்றி தமி­ழில் விளக்­கிக் கூறி­னார்.

"சிங்­கப்­பூர் இந்­தி­யர்­க­ளின் அனு­ப­வங்­க­ளை­யும் பழக்கவழக்­கங்­க­ளை­யும் மற்­ற­வர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்ள இது­போன்ற சுற்­று­லாக்­கள் பல மொழி­களில் இடம்­பெற வேண்­டும்," என்று 68 வய­தான ரோஷினி, தமிழ் முர­சி­டம் கூறி­னார்.

"தின­மும் தமி­ழில் செய்­தியை வாசிக்­கும்­போது, மொழி­யின் நுணுக்­கங்­களை என்­னால் உணர முடி­கிறது. சிறு­பான்­மை­யி­ன­ரின் மொழி என்று கரு­தா­மல் தமிழ் மொழியை வளர்க்க என் பங்கை ஆற்றி வரு­கி­றேன்," என்று மொழி­யி­யல் ஆய்வுத் துறை­ஆராய்ச்­சி­யா­ள­ரான 31 வயது நீமோ எனும் சீன இனத்­த­வ­ர் கூறி­னார்.

எளி­மை­யாக, நகைச்­சு­வை­யாக பங்­கேற்­பா­ளர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி கேள்வி-பதில் அங்­கத்தை, முதல் முறை தொண்­டூ­ழி­யர்­க­ளாக கலந்துகொண்ட சந்­தோஷ் குமார், 17, சுப்­ர­ம­ணி­யம் கீதா­லயா ஸ்ரீஜெய், 19 வழி­ந­டத்தி­னார்கள்.

"சிங்­கப்­பூர் இந்­தி­யர்­க­ளின் வர­லாறு, அவர்­க­ளுக்­குள் இருந்த உறவு போன்­றவை பற்றி அறிந்து­கொண்­டேன்," என்­றார் ஸ்ரீஜெய்.

"மலே­சி­யா­வி­லி­ருந்து வந்­த­வர்­க­ளு­டன் சிங்­கப்­பூர் இந்­தி­யர்­களின் அனு­ப­வங்­களை ஒப்­பிட்டுப் பார்க்­கும் வாய்ப்­பும் எனக்கு கிடைத்­தது," என்­றார் தொழில்­நுட்­பக் கல்­விக் கழக மாண­வர் சந்­தோஷ் குமார்.

"பல நாடு­க­ளி­லி­ருந்து வர­வழைக்­கப்­பட்ட இந்துக் கட­வுள்­களின் சிலை­க­ளின் வித்­தி­யா­ச­மான அம்­சங்­களை நான் கண் டேன்," என்­றார் 14 வயது ஜெய­தீர்த்தா பாலாஜி.

இந்­திய மர­பு­டைமை, கலா­சா­ரம் பற்றி மேலும் அறிந்­திட இந்திய மர­பு­டைமை நிலை­யத்­திற்கு மக்­கள் வரவேண்டும் என்று நிலை­யத்­தின் கல்வி மேலா­ளர் விஜ­யலட்சுமி பால­கிருஷ்­ணன் தெரிவித்தார்.

செய்தி: ரச்சனா வேலாயுதம்