குடும்ப மகிழ்ச்சிக்கான காரணத்தை ஆராய்ந்த பட்டிமன்றம்

குடும்ப மகிழ்ச்சிக்கான காரணத்தை ஆராய்ந்த பட்டிமன்றம்

2 mins read
20a8b2ee-4f72-4ac2-967f-893289f5596c
-

அனுஷா செல்­வ­மணி

குடும்­பத்­தில் அதி­கம் மகிழ்ச்சி தரு­வது அதி­க­ரிக்­கும் உற­வு­களா, பெரு­கி­வ­ரும் வரு­மா­னமா எனும் தலைப்பை ஒட்­டி இம்மாதம் 9ஆம் தேதி கேலாங் சிராய் சமூக மன்றத்­தில் இடம்­பெற்ற சிறப்­புப் பட்டி­மன்­றத்தில் பேச்­சா­ளர்­கள் நகைச்­சு­வை­யான கருத்­து­களை முன்­வைத்து பார்­வை­யா­ளர்­களை மகிழ்­வித்­த­னர்.

தமிழ்மொழி மாதத்தை ஒட்டி, கேலாங் சிராய் இந்­தி­யர் நற்­பணிச் செயற்­குழு முதல்­மு­றை­யாக ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்­தப் பட்டிமன்றத்தில், சிங்கப்பூரின் பல்வேறு தமிழ் 'டோஸ்ட்மாஸ்டர்ஸ்' மன்றங்களைச் சேர்ந்த பேச்சாளர்களை ஒன்றிணைத்த 'விஎஸ்டிகே' பேச்சாளர் குழுவின் அனு­ப­வ­மிக்க பேச்­சா­ளர்­களான தமி­ழ­வேல், தில­க­ராணி, மணி­கண்­டன், பால­மு­ரு­கன், கலை­ய­ரசி, தியா­க­ரா­ஜன் ஆகி­யோர் கலந்­து­கொண்டு தங்­க­ளின் பேச்­சாற்­ற­லால் வந்­தி­ருந்­தோ­ரின் கை­தட்­ட­லைப் பெற்றனர்.

கிட்­டத்­தட்ட 70 பேர் திரண்ட இந்­நி­கழ்­வில் தென்­கி­ழக்கு சமூக மேம்­பாட்டு மன்­ற மேய­ரும் மரின் பரேட் குழுத்­தொ­குதி நாடாளு மன்ற உறுப்பினரும், கேலாங் சிராய் அடித்­தள அமைப்புகளின் ஆலோ­ச­க­ரு­மான திரு ஃபாமி அலி­மான் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

பல ஆண்­டு­க­ளாக கேலாங் சிராய் இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வில் உறுப்­பி­ன­ராக இருக்­கும் ஷஹே­ஜூதா பர்­வீன் ரஹ்­மான் ஷரீஃப், 38, "பட்­டி­மன்­றத்தை ஏற்பாடு செய்து நடத்தினால் வித்­தி­யா­ச­மாக இருக்­கும். பார்­வை­யா­ளர்­க­ளின் மொழி­யும் வள­ரும் என நாங்கள் நம்­பி­னோம்," என்­றார்.

தமிழ் வானொலியின் புகழ்­பெற்ற முன்னாள் படைப்­பா­ள­ரான திரு செ.ப. பன்­னீர்­செல்­வம் பட்­டி­மன்­றத்­தின் நடு­வ­ராக நிகழ்ச்­சியை வழி­ந­டத்­தி­னார்.

பிறந்த குழந்­தை­யி­லி­ருந்து பல உற­வு­க­ளோடு வளர்ந்து இன்­ப­துன்­பம் எது­வாக இருந்­தா­லும், உற­வு­கள்­தான் நம் கடைசி வரை துணை நிற்­பார்­கள் எனக் கூறி­ய­தோடு பணம் இன்று வரும் நாளை போய்­வி­டும் என்று வாதா­டி­னார் தமி­ழ­வேல்.

மாதக் கடை­சி­யில் வங்­கிக் கணக்­கில் சேரும் சம்­ப­ளம் அளிக்­கும் மகிழ்ச்­சிக்கு வேறே­தும் ஈடில்லை எனக் கூறி, வெளி­நா­டு­க­ளுக்­குச் சென்று வேலை பார்ப்­பதே வரு­மா­னத்­திற்­கா­கத்தான் எனத் தமது கருத்தை எடுத்து வைத்­தார் 'பெரு­கி­வ­ரும் வரு­மா­னம்' அணியைச் சேர்ந்த பால­மு­ரு­கன்.

'அதி­க­ரிக்­கும் உற­வு­கள்' அணி­யைச் சேர்ந்த தில­க­ராணி, வரு­மா­னமின்றி வாழ்க்­கையை ஓட்­டு­வது கடி­னம் என்­றா­லும், ஒரு­வர் பணத்தை எப்­போது வேண்­டு­மா­னா­லும் சம்­பா­தித்­துக்கொள்­ள­லாம், ஆனால் உற­வு­க­ளைச் சம்­பா­திப்­பது எளி­தல்ல என்­றார்.

இறு­தி­யா­கப் பேசிய தியா­க­ராஜன், என்­ன­தான் உற­வு­களை நாம் பெரி­தாக போற்­றி­னா­லும் அந்த உறவே ஒரு­வ­ரைப் பணம் இருந்­தால்­தான் மதிக்­கும் அள­வுக்கு நிலைமை உள்ளது என்­றார்.

நம் கைகளில் பணம் புர­ளும் வரைதான் மகிழ்ச்­சி­யும் வியப்­பும் நீடிக்­கும். அதன் பிறகு உற­வு­களைத்­தான் தேடிச் செல்ல வேண்­டும். உற­வு­க­ளால் வரும் மகிழ்ச்­சியே சிறந்­தது என்று நடு­வர் தீர்ப்பு வழங்­கி­னார்.

பட்டிமன்ற பார்­வை­யா­ளர்­களில் ஒரு­வ­ரான திருவாட்டி அன்­ப­ரசி, 60, "இக்­கா­லத்­திற்­குப் பொருத்­த­மான தலைப்­பில் பேச்­சா­ளர்­கள் பேசி­ய­தைக் கேட்க மிக சுவா­ர­சி­ய­மாக இருந்­தது," என்­றார்.