சாகசம் வழி திருக்குறள் விளக்கிய தாமஸ் புரூக்ஸ்மா

3 mins read
6fca1fc1-30c7-4b09-9392-8cebaf468f55
-

மோன­லிசா

ஆன்­மா­வைத் தொட­வல்ல தமிழ் மொழி­யின் ஒவ்­வொரு பரி­மாணத்­தி­லும் உள்­ளார்ந்த வாழ்­வி­யல் கருத்­துகள் பொதிந்­துள்­ள­தா­கக் கூறி­னார் தமிழ்­மொழியில் புல­மையுடைய அமெ­ரிக்­க­ரான தாமஸ் ஹிட்­டோஷி புரூக்ஸ்மா.

வித்­தி­யா­ச­மான முறை­யில், 'மேஜிக்' சாக­சங்­கள் நிகழ்த்தி மொழி­சார்ந்த கருத்­து­களை சுவைபட படைத்­தது முத்­தாய்ப்­பாக அமைந்­தது.

உல­கப் பொது­ம­றை­யாகப் போற்­றப்­படும் திருக்­கு­ற­ளின் சித்­தாந்­தங்­க­ளை­யும் தமிழ்­மொ­ழி­யு­டன் இணைந்த தன்­னு­டைய வாழ்க்கை பய­ணத்­தை­யும் 'செவிச்­செல்­வம்: திருக்­கு­ற­ளின் இன்­சொல்­வழி பய­ணம்' என்ற தலைப்பில் தமிழ்­மொழி விழா­வை­யொட்­டிய நிகழ்­வில் பகிர்ந்­து­கொண்­டார் திரு தாமஸ்.

வளர்­த­மிழ் இயக்­கத்­தின் ஏற்­பாட்­டில் நேற்று காலை 10 மணிக்கு தேசிய நூலக வாரி­யக் கட்­ட­டத்­தில் நடை­பெற்ற இந்­த­ நி­கழ்­ச்சியில் 70க்கும் மேற்­பட்­ட பார்வையாளர்கள் கலந்­து­கொண்­ட­னர்.

அமெ­ரிக்­க­ரான திரு தாமஸ், தூய தமி­ழில் சர­ள­மாக திருக்­கு­றள் பற்றி உரை­யாற்­றி­ய­தும் அதை­யொட்­டிய மேஜிக் சாக­சங்­கள் நிகழ்த்­தி­ய­தும் பார்­வை­யாளர்­களை ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்­தி­ன. பொருள்­பொ­திந்த அவ்­வங்­கத்தை ஆர­வா­ரத்­தோடு பார்­வை­யா­ளர்­கள் வர­வேற்­ற­னர்.

எழுத்­தா­ளர், மொழி­பெ­யர்ப்­ பாளர், ஆசி­ரி­யர், அறி­ஞர், 'மேஜிக்' கலை­ஞர் என பன்­மு­கம் கொண்ட திரு தாமஸ், கடந்த ஆண்டு 'தி குறள்' - திரு­வள்­ளு­வ­ரின் திருக்­கு­றள் (The Kural - Tiruvalluvar's Tirukkural) எனும் திருக்­கு­றள் மொழி­பெ­யர்ப்பு நூலை வெளி­யிட்­டார். ஆங்­கில ஆசி­ரி­ய­ரான இவர், 20 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தமிழ் கற்க அமெ­ரிக்­கா­வி­லி­ருந்­தது தமிழ்­நாட்­டின் மது­ரைக்கு வந்­தார்.

தமிழ்­மொழி மீதும் கிரா­மிய வாழ்க்கை மீதும் ஏற்­பட்ட நாட்­டத்­தி­னால் பேச்சு, எழுத்து, இலக் கணம், இலக்­கி­யம், கவிதை, செய்­யுள் என மொழி­யின் பல்­வேறு பரி­மா­ணங்­க­ளை­யும் மது­ரை­ய­ருகே உள்ள கிரா­மத்­தி­லேயே தங்­கி­யி­ருந்து ஈராண்­டு­களில் கற்­றுத்­தேர்ந்­தார்.

தன்­னு­டைய தமி­ழா­சி­ரி­ய­ரின் உந்­து­த­லால் திருக்­கு­றள் மொழி­பெ­யர்ப்பு நூலை வெளி­யிட்­டுள்ள திரு தாமஸ், 'லைவ்: போயம்ஸ் ஆஃப் ஔ­வை­யார்' உள்­பட பல்­வேறு நூல்­களையும் வெளி­யிட்­டுள்­ளார்.

மொழி­யு­டன் தமிழ்ப் பண் பாட்டையும் கண்டு வியந்த இவர், விருந்­தோம்­பல், நன்றி, அன்பு உள்­ளிட்ட பல தமி­ழர்­களின் பாரம்­ப­ரிய மரபுக் கூறு­கள் தன்னை வியக்க வைத்­த­தா­க­வும் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

நிகழ்­வின் கேள்வி-பதில் அங்­கத்­தை­யும் சுவா­ர­சி­ய­மாக வழி­நடத்­திய இவர், ஒள­வை­யா­ரின் 'ஊக்­க­மது கைவி­டேல்' என்­ப­தற்­கேற்ப ஒவ்­வோர் இளை­ய­ரும் கன­வினை நோக்­கிய பய­ணத்­தில் ஊக்­கத்தை கைவிட்­டு­வி­டக் கூடாது என்­பதை வலி­யு­றுத்­தி­னார்.

"தமிழ்­மொழி மாத நிகழ்­வு­களை ஒருங்­கி­ணைத்து வரும் வளர்­த­மிழ் இயக்­கம் முதல்­மு­றை­யாக தனித்து ஒரு நிகழ்­வினை ஏற்­பாடு செய்­துள்­ளது. உல­க­ள­வில் திருக்­கு­றள் கொண்­டி­ருக்­கும் சிறப்பை எடுத்­துக்­காட்­டும் நோக்­கில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்­நி­கழ்ச்சி பெற்­றி­ருக்­கும் வர­வேற்பு மகிழ்ச்­சி­ய­ளிக்­கிறது," என்று கூறி­னார் வளர்­த­மிழ் இயக்­கத்­தின் தலை­வர் சு. மனோ­க­ரன்.

நிகழ்­ச்சியில் பங்­கு­கொண்ட தொடக்­கக்­கல்­லூரி மாணவி சாதனா சத்­யா­வா­கீஷ்­வ­ரன், 16, "அமெ­ரிக்­க­ரான திரு தாமஸ் தமிழ்மொழி­யில் சர­ள­மாக உரை­யா­டி­ய­தும் திருக்­கு­ற­ளின் தனித்­தன்­மையை எடுத்­து­ரைத்­த­தும் வியக்க வைத்­தது. மொழி மீது அவ­ருக்கு இருக்­கும் ஆர்­வ­மும் துடிப்­பும் எனக்­கும் இருக்க வேண்­டும் என்ற உணர்வு என்னுள் மேலோங்­கு­கிறது," என்று கூறி­னார்.

"ஆசி­ரி­யர் ஒருவர் தன்­னு­டைய மாண­வரின் வாழ்­வில் எத்­த­கைய ஆக்­க­க­ர­மான தாக்­கத்தை ஏற்­படுத்த முடி­யும் என்­ப­தற்கு திரு தாமஸ் ஒரு சிறந்த எடுத்­துக்­காட்டு. ஓர் ஆசி­ரி­ய­ரான எனக்கு இது மிகுந்த ஊக்­க­ம் அளிக்­கிறது," என்று கூறி­னார் தமி­ழா­சி­ரி­ய­ரான திலகா ராஜேந்­திரா, 58.