குதூகலமிக்க சித்திரைத் திருவிழா

குதூகலமிக்க சித்திரைத் திருவிழா

2 mins read
f6482178-d519-4536-bfce-e3400c934f3b
-

ஆ. விஷ்ணு வர்­தினி

சிங்கப்பூரில் வாழும் இலங்கைத் தமிழர்கள் நேற்று சித்திரைப் புத்­தாண்டை ஒன்­று­கூடி வர­வேற்­ற­னர்.

ஷங்­கி­ரிலா ஹோட்­ட­லில் நடந்­தே­றிய சித்­தி­ரைப் புத்­தாண்­டுக் கொண்­டாட்ட விழா­வில் மூன்­றாண்­டு­க­ளுக்­குப் பின்­னர், தமது 115வது நிறை­வாண்­டில் இச்­ச­மூ­கத்­தி­னரை சிங்­கப்­பூர் இலங்­கைத் தமி­ழர் சங்­கம் இணைத்­தது. ஏறத்­தாழ 600 பேர் விழா­விற்கு வருகை புரிந்­தி­ருந்­த­னர்.

சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்ட கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங், இலங்கைத் தமி­ழர்­கள் நாட்டு நிர்­மா­ணத்­தில் முக்­கிய பங்கு வகித்­த­தைக் குறிப்­பிட்­டார்.

சட்ட இரண்­டாம் அமைச்­ச­ரு­மான அவர், தேசத்­தந்­தை­களில் ஒரு­வ­ரும், நாட்டுப் பற்றுறுதியை இயற்­றி­ய­வ­ரு­மான திரு எஸ் ராஜ­ரத்­னம், நீதி­பதி ஏபி ராஜா, மூத்த அமைச்­ச­ரும் சமு­தா­யக் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு தர்­மன் சண்­மு­க­ரத்­தி­னம், தேசிய விளை­யாட்­டா­ளர் டாக்­டர் விஜ­ய­ரத்­னம் என நாட்­டுக்­குச் சேவை­யாற்­றிய இலங்கை தமி­ழர்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டார்.

பல­ச­மய நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்­டும் வகை­யில் சிங்­கப்­பூர் இலங்­கைத் தமி­ழர் சங்­கம் முன்­னெ­டுத்­துள்ள முயற்­சி­களை அமைச்­சர் பாராட்­டி­னார்.

அமைச்­சர் டோங்­கு­டன் தூதர் திரு எஸ். சந்­தி­ர­தாஸ், சிங்­கப்­பூ­ருக்­கான இலங்­கைத் தூதர் திரு­வாட்டி சசி­கலா பிரே­ம­வர்­தினி, சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தி­யத் தூதர் திரு கும­ரன் பெரி­ய­சாமி ஆகி­யோ­ரும் நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­னர்.

சமூ­கத்­துக்கு உன்­னத பங்­காற்­றிய சிங்­கப்­பூர் இலங்கை தமி­ழர்­கள் நால்­வர் நிகழ்­வில் சிறப்­பிக்­கப்­பட்­ட­னர்.

மிகச் சிறந்த பங்­க­ளிப்­புக்­கான பிரிட்­டிஷ் பேர­ர­சின் விருது பட்­டி­ய­லின் கெள­ரவ உறுப்­பி­னர் (MBE) திரு ஜெய­துரை அய்­யா­துரை, வன­வி­லங்கு ஆலோ­ச­க­ரான அம­ரர் திரு சுப்­ப­ராஜ் ராஜ­துரை ஆகி­யோ­ருக்கு வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விருது வழங்­கப்­பட்­டது. மேன்­மை­தாங்­கிய சேவை விருது அம­ரர் டாக்­டர் ஆர். தேவேந்­தி­ரன், அம­ரர் திரு சிவ­சுப்­ர­ம­ணி­யம் ஆகி­யோ­ருக்கு அளிக்கப்பட்டது.

கடந்த 25 ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர் இலங்­கைத் தமி­ழர் சங்­கத்­தில் உறுப்­பி­ன­ராக இருந்து வரும் 80 வயது திரு கணே­ச­மூர்த்தி, இலங்­கை­யில் இடம்­பெற்ற இனக் கலவரங்களும் அர­சி­யல் நிச்­ச­ய­மின்­மை­யும் கவ­லைக்­கு­ரி­ய­தாக இருக்­கி­ற­தென தெரி­வித்­தார். அதே­வே­ளை­யில், இச்­சிக்­கல்­கள் சமூ­கத்­தி­னரை சுதந்­திர மனி­தர்­க­ளாக, மன­வ­லிமை கொண்­ட­வர்­க­ளாக வார்த்­தெ­டுத்­துள்­ளது என அவர் கூறி­னார்.

நண்­பர்­க­ளு­டன் நிகழ்­வுக்கு வந்­தி­ருந்த பல்­க­லைக்­க­ழக மாணவி சிவானி பால­கி­ருஷ்­ணன், "இலங்­கை­யில் நிலைமை மேம்­பட்டு வரு­கிறது. மற்ற சிங்­கப்­பூர் இலங்­கைத் தமி­ழர்­க­ளைப் போல நாங்­களும் குடும்­ப­மாக முடிந்த நிதி உத­வி­க­ளைச் செய்து வரு­கி­றோம். இது­போன்ற ஒன்­று­கூ­டல்­கள் சமூ­கப் பிணைப்­புக்கு உத­வு­கின்­றன," என்­றார்.

அடுத்த தலை­மு­றை­யி­ன­ரான தம்மை போன்ற இளை­யர்­கள் வேர்­களை மற­வா­மல் இருக்க இவ்­விழா நினை­வூட்­டு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

புலம்­பெ­யர்ந்த இலங்­கைத் தமி­ழர்­கள் இங்கு வேரூன்­று­வ­தற்கு சிங்­கப்­பூர் இலங்­கைத் தமி­ழர் சங்­கம் கைகொ­டுத்­துள்­ள­தாக குறிப்­பிட்­டார் சங்­கத்­தின் தலை­வர் திரு ஜெய­சீ­லன் கார்த்தி கேசு. தமிழ்­மொழி, பண்­பாடு குறித்த புரி­தலை பல வழி­களில் மேம்­படுத்­த­வும் சங்­கம் தொடர்ந்து முய­லும் என்று அவர் தெரி­வித்­தார்.