கலாசாரம் போற்றிய 'லிஷா'வின் இரு விழாக்கள்

கலாசாரம் போற்றிய 'லிஷா'வின் இரு விழாக்கள்

3 mins read
a076c68e-4278-439c-9283-7af132f6267b
-
multi-img1 of 2

'லிஷா' எனப்­படும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­புடை­மைச் சங்­கத்­தின் ஏற்­பாட்­டில் சிங்­கப்­பூரில் உள்ள 20 இந்­திய சமூக அமைப்­பு­கள் இணைந்து கொண்­டா­டும் இந்­திய கலா­சார விழா இம்­மா­தம் 8ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடை­பெ­று­கிறது.

இதன் ஓர் அங்­க­மாக இம்­மா­தம் 15ஆம் தேதி பெர்ச் ரோட்­டில் உள்ள திறந்­த­வெ­ளி­யில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை கலை நிகழ்ச்சி இடம்­பெற்­றது. நிகழ்ச்­சி­யில் இந்­தி­யா­வின் வெவ்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த சமூ­கத்­தி­னர் ஆடல், பாடல் அங்­கங்­களைப் படைத்­த­னர்.

இதில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட கலா­சார, சமூக, இளை­யர்­துறை துணை அமைச்­சர் ஆல்­வின் டான், "புனித ஈஸ்­டர், சித்­தி­ரைப் புத்­தாண்டு, சிங்­மிங், நோன்­புப் பெரு­நாள் எனப் பல இன, பல சமய பண்­டி­கை­கள் இம்­மா­தத்­தில் நிகழ்­வ­தால் ஒட்­டு­மொத்த சிங்­கப்­பூ­ரும் இம்­மா­தம் முழுக்க விழாக் கோலம் பூண்டு உள்­ளது," என்­றார்.

"இத்­த­கைய நிகழ்ச்­சி­கள் வெவ்­வேறு இந்­திய கலா­சா­ரங்­க­ளின் உணவு, உடை உள்­ளிட்ட பல தக­வல்­களை மக்­கள் தெரிந்து­கொள்ள உத­வு­கின்­றன," என்று ஏற்­பாட்­டுக்­கு­ழுத் தலை­வ­ரும் லிஷா பெண்­கள் பிரி­வின் தலை­வ­ரு­மான ராஜ­லக்‌ஷ்மி கண்­ணப்­பன் கூறி­னார்.

கலை நிகழ்ச்­சி­யில் பங்­கு­பெற்ற நாட­கக் கலை­ஞர் பானு சுரேஷ், "நடன நிகழ்­சி­கள் அரு­மை­யாக இருந்­தன. குறிப்­பாக நிகழ்­வின் ஆரம்­பத்­தில் நடை­பெற்ற பறை­யிசை சிறப்­பாக இருந்­தது," என்­றார்.

"என் தோழி­கள் ஆடிய நட­னம் அரு­மை­யாக இருந்­தது. இந்­தி­யா­வின் பல்­வேறு மாநி­லங்­களைப் பற்­றி­யும் கற்­றுக்­கொண்­டேன்," என்று கூறி­னார் தொடக்­கப்­பள்ளி மாணவி மெள­லியா கிஷோர், 12. இந்­நி­கழ்­வின் ஓர் அங்­க­மாக சிங்­கப்­பூ­ரில் இந்­திய சமூக அமைப்­பு­க­ளின் வர­லாறு கூறும் சாவ­டி­கள் அமைக்­கப்­பட்டுள்­ளன.

ஔவை மூதாட்­டி­யைச் சிறப்­பித்த சித்­தி­ரைக் கலை விழா

சித்­திரை மாதத்தை வர­வேற்­க­வும் ஒள­வை­யா­ரின் அறி­வு­ரை­கள் கலந்த திரைப்­ப­டப் பாடல்­களை மக்­க­ளி­டம் எடுத்­துச் செல்­ல­வும் இம்­மா­தம் 16ஆம் தேதி சித்­தி­ரைக் கலை விழா எனும் நிகழ்ச்­சிக்கு லிஷா ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

பெர்ச் சாலை திறந்த வெளி­யில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் உள்­துறை, சட்ட அமைச்­சர் கா.சண்­மு­கம் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார். சிங்­கப்­பூ­ரி­லுள்ள இந்­திய தூத­ர­கத்­தின் உயர் அதி­காரி டி. பிர­பா­க­ரும் இதில் கலந்­து­கொண்­டார்.

இந்­தியா, சிங்­கப்­பூர், மலே­சியா ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த பாட­கர்­கள் பர­சு­ராம், குண­சே­க­ரன், செந்­தில் தாஸ், ரம்யா துரை­சாமி, சுஜாதா வெங்­கட்­ரா­மன் உள்­ளிட்­டோர் திரை­யி­சைப் பாடல்­க­ளைப் பாடி­னர். பட்­டி­மன்­றப் பேச்­சா­ளர் புதுக்­கோட்டை பாரதி, அப்­பா­டல்­களில் ஔவை­யார் தொடர்­பான இலக்­கி­யக் கூறு­களை விளக்­கி­னார்.

"80களி­லி­ருந்து இன்று வரை­யி­லான திரைப்­ப­டப் பாடல்­க­ளைக் கேட்டு ரசித்­த­தோடு அவற்­றின் பொரு­ளை­யும் அறிந்­து­கொண்­டோம்," என்­றார் முத்­துக்­கு­மார்.

'சிஃபாஸ்' நட­னக்­கு­ழு­வின் படைப்பு கண்­க­ளுக்கு விருந்­த­ளித்­தது.

"கலாசாரம், மரபு, தமிழ் மொழி மூன்றையும் அடுத்த தலைமுறைக்கு வித்தியாசமான முறையில் எடுத்துச் செல்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்," என்றார் ஏற்பாட்டாளர் ஓம் பிரகாஷ்.

"பாடல்களுக்கான பாரதியின் விளக்கம் என்னை ஈர்த்தது," என்றார் அருகில் பொருள் வாங்க வந்த 55 வயது செந்தமிழ்.

"சவால்­களை எதிர்­கொண்டு புத்­தாண்டை நம்­பிக்­கை­யோடு வர­வேற்­பது முக்­கி­யம். சிங்­கப்­பூ­ரின் பல்­லின சமு­தா­யத்­தைப் பிர­தி­ப­லிக்­கும் வித­மாக தாய்­மொழி விழாக்­கள் கலா­சா­ரத்­தை­யும் மர­பு­க­ளை­யும் எடுத்­துக்­காட்ட உத­வி­யுள்­ளன," என்று அமைச்­சர் சண்­மு­கம் தமது உரை­யில் கூறி­னார்.

செய்தி: மோன­லிசா, ரச்­சனா வேலா­யு­தம்