தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழோடு உறவாடிய மாணவர்கள்

2 mins read
a929b08a-5b47-4a0c-a4a4-81ad3e811ce8
-

இவ்­வாண்­டுத் தமிழ்­மொழி விழா­வின் 'அழகு' எனும் கருப்­பொ­ரு­ளுக்கு ஏற்ப சிற்­பி­கள் மன்­றம் 'தமி­ழோடு உற­வாடு 2023 சொல் அழகு' என்ற போட்­டியை இம்­மா­தம் 15ஆம் தேதி நடத்­தி­யது. வளர்­த­மிழ் இயக்­கம், தமிழ்­மொ­ழிக் கற்­றல், வளர்ச்­சிக் குழு ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வில் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இப்­போட்­டி­யில் தொடக்­க­நிலை 5, 6 மாண­வர்­களும் உயர்­நிலை 1, 2 மாண­வர்­களும் கலந்­து­கொண்­ட­னர்.

'ஸூம்' வழி­யாக நடை­பெற்ற போட்­டி­யில், 50 மாண­வர்­கள் பங்­கேற்­ற­னர்.

"தமி­ழில் மாண­வர்­க­ளின் சொல்­வ­ளம் அதி­க­ரிக்க வேண்­டும். அதே­வேளை தமிழ்ச் சொற்­க­ளின் அழகை அவர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும் என்­பதே இப்­போட்­டி­யின் நோக்­கம்," என்று ஏற்­பாட்­டா­ளர்­கள் கூறி­னர்.

"போட்­டி­யில் கற்­றுக்­கொண்ட புதிய தமிழ்ச் சொற்­களை மாண­வர்­கள் கவி­தை­கள், கட்­டு­ரை­கள், கதை­கள் முத­லி­ய­வற்­றில் பயன்­ப­டுத்த முயல்­வர்.

"தலை­மு­றைக்­குத் தலை­முறை தமிழ்ச் சொற்­க­ளின் பயன்­பாடு குறை­கிறது. இளை­யர்­கள் பல தமிழ்ச் சொற்­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டும். புழக்­கத்­தில் இருந்­தால்­தான் மொழி வள­ரும். இல்­லை­யேல் எதிர்­கா­லத்­தில் பல சொற்­கள் வழக்­கி­ழந்து போக­லாம்," என்று சிற்­பி­கள் மன்­றத்­தி­னர் குறிப்­பிட்­ட­னர்.

பரிசு வென்­ற­வர்­களில் ஒரு­வ­ரான தொடக்­க­நிலை ஐந்­தாம் வகுப்பு மாணவி ஸ்ரீநிதா சீனி­வா­சன், "இந்­தப் போட்டி புது­மை­யான அனு­ப­வ­மாக அமைந்­தது. பல புதிய சொற்­க­ளைக் கற்­றுக்­கொண்­டேன்," என்­றார்.

அவ­ரது தாயார் கீதா சீனி­வா­சன், "தமிழ்­மொ­ழிப் புழக்­கத்தை அதி­க­ரித்து அதை வாழும் மொழி­யா­கக் காக்க இது­போன்ற முயற்­சி­கள் நிச்­ச­யம் உத­வும்," என்று கூறி­னார்.

பரிசு வென்ற மற்­றொரு மாண­வர் தொடக்­க­நிலை ஐந்­தாம் வகுப்­பில் பயி­லும் கார்த்­திக் சரண் கண­பதி.

"இதில் கற்­றுக்­கொண்ட புதிய சொற்­கள் பள்­ளி­யி­லும் அன்­றாட வாழ்க்­கை­யி­லும் பேரு­த­வி­யாக இருக்­கும். தமிழ்க் கவி­தை­களில் இடம்­பெறும் சொற்­க­ளின் பொருளை இனி எளி­தில் புரிந்­து­கொள்ள முடி­யும்," என்று நம்­பிக்கை தெரி­வித்­தார்.

செய்தி: சபிதா ஜெய­கு­மார்

படம்: ஏற்­பாட்­டா­ளர்­கள்