தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொற்சிலம்பம்: யுனோயா தொடக்கக் கல்லூரி அணிக்கு வெற்றி

2 mins read
24a3d62d-f936-4933-b5f8-93dbedff6c0c
-

'கொவிட்-19 சிங்­கப்­பூ­ரர்­களை பிள­வு­ப­டுத்­தி­யுள்­ளது' என்ற தலைப்­பில் திற­மை­யாக வாதம் செய்து சொற்­சி­லம்­பம் 2023ன் மாபெ­ரும் இறு­திச்­சுற்­றில் வெற்றி வாகை சூடி­னர் யுனோயா தொடக்­கக் கல்­லூரி அணி­யி­னர்.

தொடக்­கக் கல்­லூ­ரி­கள், பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­கள், மத்­தி­யக் கல்வி கழ­கங்­கள், ஐபி திட்­டக் கழ­கங்­கள் ஆகி­ய­வற்­றின் மாண­வர்­க­ளுக்­காக நடத்­தப்­பட்ட தேசிய தமிழ் மொழி விவா­தப் போட்­டி­யின் இறு­திச்­சுற்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மீடி­யா­கார்ப் வளா­கத்­தில் நடந்­தது.

நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நேர­டி­யாக நடத்­தப்­பட்ட இப்­போட்­டியை கார்த்­தி­கே­யன் சோம­சுந்­த­ரம் வழி­ந­டத்­தி­னார். ஆங்­கிலோ சீனத் தன்­னாட்­சிப் பள்­ளி­யும் யுனோயா தொடக்­கக்­கல்­லூ­ரி­யும் இறு­திச்­சுற்­றுக்­குத் தகு­தி­பெற்­றன. சிறந்த பேச்­சா­ள­ராக ஆங்­கிலோ சீனத் தன்னாட்சிப் பள்­ளி­யின் சங்­கர் ராகுல் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.

முதல் சுற்­றில் தகுந்த சான்­று­ க­ளு­டன் ஆங்­கிலோ சீனத் தன்­னாட்சிப் பள்ளி ஒட்­டிப் பேச, பல சமூக அறி­வி­யல் கருத்­து­க­ளு­டன் யுனோயா தொடக்­கக் கல்­லூரி வெட்­டிப் பேச, போட்டி சூடு­பி­டித்­தது. சிறப்­பா­கச் செயல்பட்ட இரு அணி­க­ளுக்­கும் சவால் விடுக்­கும் வகை­யில் உடனடித் தலைப்பு ஒன்று தரப்­பட்­டது.

'செயற்கை நுண்­ண­றி­வால் பல வேலை­கள் முழு­மை­யாக அழிந்­து­வி­டும்' என்ற தலைப்­பில் வெட்­டிப் பேசி­யது ஆங்­கிலோ சீனத் தன்­னாட்சிப் பள்ளி. இவர்­க­ளுக்கு எதி­ராக யுனோயா தொடக்­கக் கல்­லூரி மாண­வர்­கள் தங்­க­ளின் வாதங்­களை முன்­வைத்­த­னர்.

போட்­டி­யில் வென்ற யுனோயா தொடக்­கக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த ஆறு மாண­வர்­கள் இறு­திச் சுற்­றுக்கு வந்த தங்­க­ளின் முதல் அனு­ப­வத்­தைப் பற்றி தமிழ் முர­சு­டன் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

"எங்­க­ளின் ஒவ்­வொரு பேச்­சா­ள­ரின் தனித்­து­வத்­தை­யும் மதித்து ஒவ்­வொ­ரு­வ­ரின் பலத்­தைக் கருதி எங்­களை நாங்­களே மேம்­ப­டுத்­தும் வகை­யில் வாதங்­களைத் தயார் செய்­தோம்," என்­ற­னர் அவர்­கள்.

வெற்­றியோ தோல்­வியோ கிடைத்த அனு­ப­வத்தை நன்­றா­கப் பயன்­ப­டுத்­திக்­கொண்­ட­தாக ஆங்­கிலோ சீனத் தன்­னாட்சிப் பள்ளி அணி கூறி­யது.

"தமிழ் மொழி­யின் வளத்தை அறிந்­து­கொண்­ட­தோடு விவா­தம் செய்­யும் உத்­தி­க­ளை­யும் ஆசி­ரி­யர்­க­ளி­ட­மி­ருந்து கற்­றுக்­கொண்­டோம். நிச்­ச­யம் இது ஒரு மறக்க முடி­யாத அனு­ப­வம்," என்­ற­னர் அந்த அணி­யி­னர்.

செய்தி வாசிப்­பா­ள­ரும் தமிழ் ஆர்­வ­ல­ரு­மான இலக்­கியா செல்வ­ராஜி, முப்­ப­தாண்டு ஊட­கத் துறை திற­னா­ளர் திரு முஹம்­மது அலி, இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு ராஜ­சே­கர் ஆகி­யோர் போட்­டி­யின் நடு­வர்­க­ளா­கப் பணி­யாற்­றி­னர்.

தமிழ் மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு, வளர்­த­மிழ் இயக்­கம் ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வில் மக்­கள் கழக நற்­ப­ணிப் பேரவை, வட­மேற்கு வட்­டார இந்­தி­யர் நற்­பணிச் செயற்­கு­ழுக்­கள், வசந்­தம் தொலைக்காட்சி ஆகி­யன ஏற்­பாடு செய்­தி­ருந்­த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்­தி­ன­ரா­க செம்­ப­வாங் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விக்­ரம் நாயர் கலந்து­கொண்­டார்.