இக்கால இளையரும் தமிழ்மொழிப் புழக்கமும்

இக்கால இளையரும் தமிழ்மொழிப் புழக்கமும்

2 mins read
8c81a3c3-f786-4d92-84cf-0771266cc4eb
-

அனுஷா செல்­வ­மணி

காலஞ்­சென்ற தமி­ழ­வேள் கோ. சாரங்­க­பா­ணி­யின் 120வது பிறந்­த­நாளை முன்­னிட்டு வளர்­தமிழ் இயக்­கத்­தின் ஆத­ர­வில் தமி­ழ­வேள் நற்­பணி மன்­றம் 'உல­க­மும் நாமும்' எனும் விழா­வுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

கடந்த 23ஆம் தேதி­யன்று 'ஸூம்' வழி­யாக நடை­பெற்ற இந்­நி­கழ்­வில், இக்­கால இளை­யர்­கள் எவ்­வாறு தங்­க­ளின் தமிழ்மொழிப் புழக்­கத்தை மேம்­ப­டுத்திக் கொள்ளலாம் என்­றும் அது வீட்­டி­லேயே தொடங்க வேண்­டும் என்­பதை வலி­யு­றுத்­தும் வகை­யி­லும் அமைந்­தது.

பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே. மயூரி, பேச்சாளர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றி னார்.

முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் துணைத் தலை­வ­ரு­மான முனை­வர் திரு ஆர். தின­க­ரன் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

திரு. தின­க­ரன், தமி­ழ­வேள் கோ.சாரங்­க­பா­ணி­யின் அருந்­தொண்­டினை நினை­வு­கூர்ந்து பேசி­னார். அவ­ரு­டன் அமெ­ரிக்கா, இந்­தியா, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த சிறப்­புப் பேச்­சா­ளர்­களும் இணைந்­து­கொண்­ட­னர்.

வெளி­நாட்­டுக்­குக் குடி­பெயர்ந்­தி­ருந்­தா­லும் நம் மொழியை விட்­டுக்கொடுக்­கா­மல் அதைத் தொடர்ந்து அன்­றா­ட வாழ்­வில் பயன்­ப­டுத்த வேண்­டு­மென ஆழ­மாக தனது கருத்தை எடுத்து வைத்­தார், வாஷிங்­டன் தமிழ்ச் சங்­கத்­தின் முன்னாள் தலை­வ­ரும் வட ­அமெ­ரிக்க தமிழ்ச் சங்கப் பேர­வை­யின் முன்னாள் செய­லா­ள­ரு­மான வாஷிங்­டன் சிவா.

ஆஸ்­தி­ரே­லி­யா­வைச் சேர்ந்த சக்தி நஞ்­சுண்­டன் தமது சூழல் குறித்து நிகழ்­வின்­போது பகிர்ந்து­கொண்­டார். மனைவி மலே­சியா நாட்­டில் பிறந்து வளர்ந்து தமிழ் மொழியை நன்கு கற்­றுத்­தேர்ந்து பேசி­னா­லும் வீட்­டில் தங்­க­ளின் பிள்­ளை­கள் தமிழ்மொழி­யில் பேசு­வது குறைவு என்று கூறி வருந்­தி­னார்.

நிகழ்­வில் கலந்­து­கொண்ட இல்­லத்­த­ர­சி­யான தேவி, 39, "இது­போன்ற நிகழ்ச்­சி­களில் குடும்­பங்­கள் கலந்­து­கொள்­வ­தன் மூலம் பெற்­றோர் வலி­யு­றுத்­து­வதைப் பிள்­ளை­க­ளால் எளி­தில் அறிந்­து­கொள்ள முடி­யும். தமிழ் மொழி மீதான ஆர்­வம் அதி­க­ரிப்­ப­தோடு அதைச் சர­ள­மா­கப் பேசு­வ­தற்­கும் பிள்­ளை­க­ளுக்கு நாட்­டம் ஏற்­படும்," என்­றார்.

தமிழ்மொழி­யில் சர­ள­மா­கப் பேச இய­லா­விட்­டா­லும் வீட்­டி­லாவது ஓர­ளவு பேச்­சுத் தமி­ழில் பேசுவது சிறந்­தது என நிகழ்­வில் கலந்­து­கொண்ட பல­ரும் ஒரு­மித்த கருத்­தைத் தெரி­வித்­த­னர்.

நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட கவி­ஞர் க.து.மு.இக்­பால், சிங்­கப்­பூர் இந்­தியக் கலை­ஞர் சங்­கத்­தின் முன்­னாள் தலை­வர் திரு.ச.வர­தன், திரு.எம்.இலி­யாஸ் மூவ­ரும் தமி­ழ­வே­ளோடு தங்­க­ளுக்கு இருந்த தொடர்பை நினை­வு­கூர்ந்­த­னர்.