தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'உதிரத்துடன் கலந்த உணர்வுசாதனமே தமிழ்மொழி'

2 mins read
0219ec55-9e51-40bb-a543-190dff6d0932
நி­கழ்­வி­னை­யொட்டி மாண­வர்­க­ளுக்­கும் பொது­மக்­க­ளுக்­கும் பல்­வேறு பிரி­வு­களில் நடத்­தப்­பட்ட கவிதை சொல்­லும் போட்டி, கவிதை பயி­ல­ரங்­கு­டன் கூடிய போட்டி, கவிதை மொழி­பெ­யர்ப்பு பயி­ல­ரங்­கத்­து­டன் கூடிய போட்டி­க­ளுக்­கான பரி­ச­ளிப்­பு­களும் இந்த நி­கழ்­வில் இடம்­பெற்­றன. படங்கள்: கவிமாலை -
multi-img1 of 5

மோன­லிசா

தமிழ்­மொழி கற்­றுக்­கொள்­வ­தற்­கும் பயன்­ப­டுத்­து­வ­தற்­கும் கடி­னம் என்ற மிகைப்­ப­டுத்­தப்­பட்ட மனப்­போக்கு பெரும்­பான்மையான தமிழர்­களி­டம் நில­வு­வ­தைச் சுட்டிக்காட்­டி­னார் கவி­ஞர் மகுடேசு­வரன்.

இவ்­வாண்­டின் தமிழ்­மொழி மாதத்­தின் இறு­தி­நா­ளின் நிறைவு நிகழ்­வான 'சுடர் தந்த தேன்' நிகழ்­வில் 'இலக்­க­ணத்­தின் பேர­ழகு' எனும் தலைப்­பில் சிறப்­பு­ரை­யாற்­றிய அவர், "மொழி­யின் இயல்­பு­க­ளைச் சுட்­டு­வதே இலக்­கணம். நாம் பேசிப் புழக்­கத்­தில் இருக்­கும் வட்­டார வழக்­குச் சொற்­களும் கொச்சை சொற்­களும்­கூட நம்மை அறி­யா­ம­லேயே இலக்­கண விதி­க­ளுக்கு உட்­பட்டே அமை­கின்­றன," என்று கூறிப் பார்­வை­யா­ளர்­களை ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்­தி­னார்.

அதற்­கான பல சான்­று­க­ளை­யும் முன்­வைத்த அவர், தமிழ்­மொ­ழி­யின் எளிய அடிப்­ப­டையே தமிழ் என்­பதை 'கவி­மாலை - சிங்­கப்­பூர் தமிழ்க் கவி­ஞர் இயக்கம்' ஏற்­பாட்­டில் நடை­பெற்ற அந்­நி­கழ்­வில் விளக்­கி­னார்.

மேலும் உல­க­ள­வில் தமிழ் இன்­ற­ள­வும் தழைத்­தோங்க அய­ல­கத் தமி­ழர்­க­ளின் பங்கு இன்­றி­ய­மை­யா­தது. அதி­லும் சிங்­கப்­பூர் மக்­க­ளின் தமிழ்­மொழி ஈடு­பாடு மெச்­சத்­த­குந்த ஒன்று என்று சிங்­கப்­பூர்த் தமி­ழர்­க­ளின் தமி­ழார்­வத்­திற்­குப் புக­ழா­ரம் சூட்­டி­னார் அவர்.

தமிழ்­மொ­ழி­யில் ஓரெ­ழுத்து வினைச்­சொற்­கள் 45 என்­றும் இரண்டு, மூன்­றெ­ழுத்­து­களில் சில ஆயி­ர­மும் நான்­கெ­ழுத்­து­களில் சில நூறும் ஐந்­தெ­ழுத்­து­களில் மிகக் குறைந்த சொற்­களுமே உள்­ளன என்­பதை விளக்­கிக்­கூ­றிய அவர், இவற்றை எல்­லாம் இன்­றைய இளை­யர்­களுக்கு எளி­ய­மு­றை­யில் புரி­ய­வைத்­தாலே அவர்­கள் அதீத ஆர்­வத்­து­டன் மொழி­யி­னைக் கற்­றுக்­கொள்ள முன்­வ­ரு­வர் என்­ப­தை­யும் குறிப்­பிட்­டார்.

பெற்­றோர் தங்­க­ளு­டைய உடை­மை­க­ளை­யும் சொத்­து­களை­யும் அடுத்த தலை­முறையினரிடம் சேர்ப்­ப­து­போல மொழி­யி­னைக் கொண்டு சேர்க்க வேண்­டும். இது ஒவ்­வொரு தமிழ்ப் பெற்­றோ­ரின் ஆக உயர்ந்த கடமை என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

கடந்த மாதம் 30ஆம் தேதி உம­றுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலைய உள்­ள­ரங்­கில் மாலை 6 மணிக்­குத் தொடங்­கிய இந்­நி­கழ்­வில் கவி­மாலை இயக்­கத்­தின் இவ்­வாண்­டின் 'இளங்­க­வி­ஞ­ருக்­கான தங்க முத்­திரை விருது' கவி­ஞர் இராம.நாச்­சி­யப்­பன், 'தமிழ்ச்­சான்­றோ­ருக்­கான கணை­யாழி விருது' எழுத்­தா­ளர் திருமதி நூர்­ஜ­ஹான் சுலை­மான் ஆகி­யோருக்கு வழங்­கப்­பட்­டன.

இந்­நி­கழ்­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட தேசிய பல்­க­லைக்­க­ழக இணைப் பேரா­சி­ரி­யர் முனை­வர் சித்ரா சங்­க­ரன், "யுனெஸ்கோ ஆராய்ச்சித் தக­வல்­க­ளின்­படி உல­க­ள­வில் பல மொழி­கள் தினந்­தோறும் அழிந்­து ­வ­ரு­கின்­றன.

"தமிழ்­மொழி அப்­பட்­டி­ய­லில் இணை­யா­மல் இருப்­ப­தற்கு நம் மொழி­யினை வாழும் மொழி­யாகக் கொண்­டாடி அன்­றாட வாழ்­வில் நாம் தொடர்ந்து பயன்­படுத்த வேண்­டும்," என்று கூறி­னார்.

நி­கழ்­வி­னை­யொட்டி மாண­வர்­க­ளுக்­கும் பொது­மக்­க­ளுக்­கும் பல்­வேறு பிரி­வு­களில் நடத்­தப்­பட்ட கவிதை சொல்­லும் போட்டி, கவிதை பயி­ல­ரங்­கு­டன் கூடிய போட்டி, கவிதை மொழி­பெ­யர்ப்பு பயி­ல­ரங்­கத்­து­டன் கூடிய போட்டி­க­ளுக்­கான பரி­ச­ளிப்­பு­களும் இந்த நி­கழ்­வில் இடம்­பெற்­றன.

மேலும், நி­கழ்­வில் மாண­வர்­களின் இசைச் கச்­சேரி, பாடல்­களு­டன் அமைந்த நாட­கம் எனப் பல்­வேறு சிறப்பு அங்­கங்­களும் இடம்பெற்றிருந்தன.