தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பட்டுக்கோட்டையார் பாடல்களைப் போற்றிய நிகழ்ச்சி

2 mins read
e599adde-f904-447a-b95d-840726aca066
-

ஒன்­றி­ணைந்த சமூ­கத்­தின் வளர்ச்­சி­யில் உழைப்­பா­ளர் பங்­கி­னைப் பறை­சாற்­றும் வண்­ணம் தொழி­லா­ளர் தினத்­தை­யொட்டி மக்­கள் கவி­ஞர் பட்டுக்­கோட்டை கல்­யா­ண­சுந்த­ரம் கலை இலக்­கிய விழா அண்­மை­யில் நடை­பெற்­றது.

"எந்­தக் காலத்­திற்­கும் ஏற்­பு­டைய வண்­ணம் பாடல்­களை எழு­தி­யுள்ள மக்­கள் கவி­ஞர், தமது சொற்ப வாழ்­நா­ளில் தலை­மு­றை­கள் தாண்டி நிலைத்து நிற்­கும் பல சீரிய புரட்­சிக் கருத்­து­களை விதைத்துச் சென்­றுள்­ளார்," என்று கூறி­னார் நிகழ்­வில் சிறப்­பு­ரை­யாற்­றிய தமிழகத்தைச் சேர்ந்த கவி­ஞர் முல்லை நட­வ­ரசு.

பாட்­டாளி மக்­க­ளின் குர­லா­க­வும் முர­சொ­லி­யா­க­வும் விளங்­கும் பட்­டுக்­கோட்­டை­யாரின் பாடல் வரி­களில் உள்ள எளி­மையே அவரை பாம­ர­னி­டத்­தி­லும் கொண்டு சேர்த்­தது என்று புக­ழா­ரம் சூட்டிய இவர், அவ­ரு­டைய பாடல்­கள் சில­வற்­றைப் பாடி­யும் பார்­வை­யா­ளர்­களை மகிழ்­வித்­தார்.

'பட்­டுக்­கோட்­டை­யா­ரின் சமு­தா­யப் பார்வை' எனும் தலைப்­பில் சிறப்­பு­ரை­யாற்­றிய கவி­ஞர் முல்லை நட­வ­ரசு, சமூக வளர்ச்­சி­யில் ஒவ்­வோர் உழைப்­பா­ளிக்­கும் இருக்­கும் பங்­கி­னை­யும் உரி­மை­க­ளை­யும் பட்­டுக்­கோட்­டை­யார் தம் பாடல்­க­ளின் வழி கோடிட்­டுக் காட்­டி­யுள்­ள­தைச் சுட்­டி­னார்.

மேலும், இளை­யர்­க­ளி­டத்­தில் பட்­டுக்­கோட்­டை­யார் பாடல்­களை எடுத்­துச்­செல்­வது அவர்­க­ளின் சிந்­த­னை­யை­யும் ஆற்­ற­லை­யும் ஆக்­க­பூர்­வ­மான பாதை­யில் வழி­ந­டத்­திச் செல்­லும் என்­பதை வலி­யு­றுத்­திய இவர், மக்­கள் கவி­ஞ­ரின் வாழ்க்கை வர­லாற்­றின் பல சுவா­ர­சிய சம்­ப­வங்­க­ளைப் பற்­றி­யும் பகிர்ந்­து­கொண்­டார்.

நி­கழ்­வில் மக்­கள் கவி­ஞர் மன்­றம் ஆண்­டு­தோ­றும் வழங்­கும் உழைப்­பா­ளர் விருது, இவ்வாண்டு சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் நோயா­ளி­களைப் பரா­ம­ரிக்­கும் உத­வி­யா­ள­ராக பணி­பு­ரி­யும் திரு­மதி பொன்­னையா மிடல் லெட்­சு­மிக்கு வழங்­கப்­பட்­டது. அவ­ரு­டைய தன்­ன­லம் கரு­தாத 20 ஆண்­டு­க­ளுக்­கும் மேலான சேவை­யைச் சிறப்­பித்து விருது அளிக்­கப்­பட்­டது.

"சிறு பிள்ளை முதல் பெரி­யவர்வரை அனை­வ­ருக்­கும் ஏற்ற வகை­யில் எளிய தமி­ழில் வாழ்­வி­யல் கருத்­து­களை எடுத்­துக்­கூறும் மக்­கள் கவி­ஞ­ரின் பாடல்­களை அடிக்­கடி நாம் கேட்­பது நம்­மைப் பல வழி­களில் நன்­னெ­றிப்­ப­டுத்­தும்," என்று கூறி­னார் இந்­நி­கழ்­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இரா.தின­க­ரன்.

மே தினத்­தன்று மக்­கள் கவிஞர் மன்­றத்­தின் ஏற்­பாட்­டில், உமறுப்­பு­ல­வர் தமிழ்­மொழி நிலைய உள்­ள­ரங்­கில் நிகழ்ச்சி நடை­பெற்­றது. 19 ஆண்­டு­க­ளாக நடத்­தப்­பட்டு வரும் இந்த நிகழ்ச்சியின் ஓர் அங்­க­மாக புரட்சித் தலை­வர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்­ப­டப் பாடல்­க­ளுக்கு எம்.ஜி.ஆர் வேட­ம­ணிந்து நட­ன­மாடி மகிழ்­வித்­தார் சிங்­கப்­பூர் கலைஞர் எம்.ஜி.ஆர் சந்­தி­ர­போஸ்.

முன்­ன­தாக, பல்­வேறு பிரி­வு­களில் நடை­பெற்ற பட்­டுக்­கோட்­டை­யா­ரின் பாட்­டுப் போட்­டி­களில் வெற்­றி­பெற்­றோ­ருக்­குப் பரி­சு­களும் வழங்­கப்­பட்­டன. ஒவ்­வொரு பிரி­வி­லும் முதல் பரி­சினை வென்ற மாண­வர்­கள் பின்­னணி இசை­யு­டன் அப்­பா­டல்­களைப் பாடிய அங்­கம் பார்­வை­யா­ளர்­க­ளின் வர­வேற்­பைப் பெற்­றது.

நிகழ்ச்சியில் பங்­கேற்ற தனி­யார் நிறு­வன மேலா­ளர் சித்ரா செல்­வ­ரா­ஜன், 42, "பட்­டுக்­கோட்­டை­யா­ரின் வாழ்க்கை வர­லாற்­றை­யும் சமூ­கப் பார்­வை­யை­யும் விளக்­கிய கவி­ஞர் முல்லை நட­வ­ர­சு­வின் சிறப்­புரை சுவா­ர­சி­ய­மாக இருந்­தது. அவர் குறிப்­பிட்­ட­து­போல என் பிள்­ளை­க­ளுக்கு பட்­டுக்­கோட்­டை­யா­ரின் பாடல்­களைச் சொல்லித்தர திட்­ட­மிட்­டு உள்­ளேன்," என்று கூறி­னார்.

செய்தி: மோன­லிசா