படம்பிடிக்கக் கற்றுக்கொடுத்த 'தமிழும் திரைக்கலையும்'

படம்பிடிக்கக் கற்றுக்கொடுத்த 'தமிழும் திரைக்கலையும்'

2 mins read
e25dcf06-1ee2-4fc8-a538-ab1b5b78bed5
-

மாதங்கி இளங்­கோ­வன்

இளை­யர்­கள் உள்­ளூர் இலக்­கியத்­தைப் பயன்­ப­டுத்தி புது­மை­யான குறும்­ப­டங்­களை அல்­லது முழு­நீ­ளத் திரைப்­ப­டங்­களை உரு­வாக்­கும் நோக்­கத்­து­டன் நடத்­தப்­பட்­டது 'தமி­ழும் திரைக்­கலை­யும்' என்ற படப்­பி­டிப்­புப் பயி­ல­ரங்கு.

உயர்­நி­லைப் பள்ளி மாண­வர்­க­ளுக்­கான இந்த ஒரு­நாள் பயி­ல­ரங்கு 'சிட்ஃபி' குழு­வின் ஏற்­பாட்­டில் இம்­மா­தம் 6ஆம் தேதி­யன்று உம­றுப்­பு­ல­வர் தமிழ் மொழி நிலை­யத்­தில்­ இ­டம்­பெற்­றது.

பயி­ல­ரங்­கில் மாண­வர்­கள் வெவ்­வேறு படப்­பி­டிப்பு உத்­தி­களைக் கற்­றுக்­கொண்­ட­து­டன் 'சிட்ஃபி' தயா­ரிப்­பில் எடுக்­கப்­பட்ட `நூல் கதை­கள்', `நச்­சுக்­கோப்பை' என்ற படங்­க­ளைப் பார்க்­கும் வாய்ப்­பை­யும் பெற்­ற­னர். அப்­ப­டங்­களில் நடித்த நடி­கர்­களில் சிலர் மாண­வர்­க­ளுக்­குப் பயிற்­று­விப்­பா­ளர்­க­ளாக இருந்­த­னர். அவர்­கள் தங்­க­ளின் அனு­ப­வங்­க­ளை­யும் திரைப்­பட, நாட­கத் துறை­யில் எதிர்­கொள்­ளும் சவால்­க­ளை­யும் பற்றி மாண­வர்­க­ளு­டன் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

"மாண­வர்­கள் குறு­கிய காலத்­தி­லேயே நாங்­கள் கற்­றுத்­தந்­த­வற்றை உள்­வாங்­கிக்­கொண்டு படப்­பி­டிப்பு முயற்­சி­களில் ஆர்­வத்­தோடு கள­மி­றங்­கி­யதைக் காண உற்­சா­க­மாக இருந்­தது," என்­றார் பயிற்று­நராக இருந்த திரு செம்­பி­யன் சோம­சுந்­த­ரம். படப்­பி­டிப்­பின் ஒவ்­வொரு கட்­டத்­தைப் பற்­றி­யும் ஒளிப்­ப­திவு பற்­றி­யும் கற்­றுக்­கொடுத்­த­போது தாம் முன்பு கற்­றுக்­கொண்ட அம்­சங்­களை மீண்­டும் நினை­வு­கூர வாய்ப்பு கிடைத்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

இரு படங்­க­ளை­யும் பார்த்த பின்­னர், மாண­வர்­கள் ஏறத்­தாழ இரண்டு நிமி­டங்­க­ளுக்கு இந்­தி­யர்­க­ளின் கலா­சா­ரம் அல்­லது சிங்­கப்­பூர் வர­லாற்றை எடுத்­துக்­காட்­டும் காட்­சி­யொன்­றைத் தங்­க­ளு­டைய குழு­வி­ன­ரு­டன் சேர்ந்து பட­மாக எடுத்­த­னர்.

"முக­பா­வங்­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை இந்­தப் பயி­ல­ரங்கு வலி­யு­றுத்­தி­யது. அது­மட்­டு­மல்­லாது ஒவ்­வொரு சிறு காட்­சி­யும் சிறப்­பாக அமைய 15 முறை­கூட படம்­பி­டிக்க வேண்­டிய நிலை ஏற்­ப­ட­லாம் என்­பதை அறிந்­து­கொண்­டேன்," என்­றார் பயி­ல­ரங்­கில் கலந்­து­கொண்ட மாண­வர் முரு­கன் தயா­நிதி, 14.

'சிட்ஃபி' பயி­ல­ரங்கு புது­மை­யா­ன­தோர் அனு­ப­வம் என்­றார் தேவ­ரத்­னா­கீர்த்தி, 13, என்ற மாணவி. திறன்­பே­சி­யைப் பயன்­ப­டுத்தி எவ்­வாறு படம்­பிடிப்­பது, படம்­பி­டித்த காட்­சி­களை ஒரு கோவை­யாக ஒளிப்­ப­திவு செய்­வது போன்­ற­வற்­றைக் கற்­றுக்­கொண்­ட­தாக அவர் சொன்னார்.