மொழித்திறன் வளர்க்கும் பேச்சரங்கம்

மொழித்திறன் வளர்க்கும் பேச்சரங்கம்

2 mins read
dcbcc589-e176-417b-a690-27b82a9b27b6
-

மோன­லிசா

பேச்­சாற்­ற­லை­யும் மொழித்­தி­ற­னை­யும் தலை­மைத்­து­வப் பண்பு­களை­யும் வளர்க்­கும் நோக்­கில் தமிழ்­மொழி விழா­வை­யொட்டி அண்­மை­யில் பேச்­சா­ளர் மன்­றத்­தின் பேச்­சுப் போட்­டி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டன.

பேச்­சுத்­தி­றனை வளர்க்­கும் விதமாக ஆண்­டு­தோ­றும் நடத்­தப்பட்டு வரும் இந்­நி­கழ்வு, தமிழ்­மொழி விழா­வின் இறுதி நாளான ஏப்­ரல் 30ஆம் தேதி­யன்று தேசிய நூலக வாரி­யக் கட்­ட­டத்­தில் காலை 9 மணி முதல் நண்­ப­கல் 12.30 மணி­வரை நடை­பெற்­றது.

தமிழ்­மொ­ழிப் பண்­பாட்­டுக் கழ­கத்­தின் ஏற்­பாட்­டில் இடம்­பெற்ற இந்­நி­கழ்­வில் 'அரங்­கப் பேச்­சுப்­போட்டி' அங்­கத்­தில் எட்­டுப் பேச்­சா­ளர்­கள் எந்த முன்­தயா­ரிப்­பு­மின்றி தலைப்பு கொடுக்­கப்­பட்­ட­வு­டன் பேசத் தொடங்­கியது பார்­வை­யா­ளர்­களை வியப்­பில் ஆழ்த்­தி­யது.

அனைத்­துப் போட்­டி­யா­ளர்­களும் 'தென்­றல் என்­னைத் தீண்­டி­ய­தில்லை; ஆனால் தீயை நான் தாண்டி இருக்­கி­றேன்' என்ற ஒரே தலைப்­பில் இரண்டு நிமி­டங்­க­ளுக்கு மிகா­மல் நகைச்­சுவை­யா­க­வும் உணர்­வு­பூர்­வ­மா­க­வும் தங்­க­ளின் கருத்­து­களை முன்­வைத்­த­னர்.

நிகழ்­வின் பிற்­பா­தி­யில் 'தயா­ரிக்­கப்­பட்ட உரைப் போட்டி' அங்­கத்­தில் எட்­டுப் போட்­டி­யா­ளர்­கள் கள­மி­றங்­கி­னர். 'எதிர்­பா­ரா­ததை எதிர்­பா­ருங்­கள்', 'சும்­மா­தானே', 'ஆண் பாவம்', 'கதை எனும் விதை' போன்ற பல தலைப்­பு­களில் பேச்­சா­ளர்­கள் ஏழு நிமி­டங்­க­ளுக்கு மிகா­மல் உற்­சா­கத்­து­டன் பேசி­னர்.

சில பேச்­சா­ளர்­கள் தங்­க­ளது தலைப்­பிற்­குத் தகுந்த உடை அணிந்­தும் 'பறை' போன்ற பொருள்­க­ளைக் கொண்­டும் பேசி­யது கூடு­தல் சிறப்­பாக அமைந்­தது.

இந்­நி­கழ்­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட பேரா­சி­ரி­யர் அ. வீர­மணி, "தமிழ்­மொழிப் புழக்­கம் தமி­ழர்­கள் அனை­வ­ரது வீடு­க­ளி­லி­ருந்­தும் தொடங்­க­வேண்­டும். தமிழ்­மொழிப் பயன்­பாடு இல்­லங்­களில் தேயத் தொடங்­கி­னால் வருங்­கா­லத் தலை­மு­றை­களை அது பாதிக்­கும். எத்­த­னையோ முன்­னோ­டித் தமிழ் ஆர்­வ­லர்­களின் தலை­முறை­க­ளைத் தமிழ் சார்ந்த பணிகளில் இப்போது காண முடி­யா­ததே இதற்­குச் சான்று," என்று கூறி­னார்.

"பேச்­சா­ளர் மன்­றங்­களில் பயிற்­சி­பெ­றும் பேச்­சா­ளர்­கள் குறித்த நேரத்­திற்­குள் தாம் சொல்ல வந்த கருத்தை அனை­வ­ருக்­கும் எளி­தில் புரி­யும்­ப­டி­யும் மனத்­தில் பதி­யும் வண்­ண­மும் உரை­யாற்­றும் திற­மையை இதன்­மூ­லம் மேம்­ப­டுத்­திக்­கொள்­கி­றார்­கள்," என்று தமிழ்­மொ­ழிப் பண்­பாட்­டுக் கழ­கத்­தின் தலை­வர் ஹரி­கி­ருஷ்­ணன் முத்­துச்­சாமி குறிப்பிட்டார்.

இந்­நி­கழ்­வில் பங்­கேற்ற குடும்­பத்­த­லை­வி­யான திரு­வாட்டி இந்­திரா கவி­ய­ர­சன், 39, "பேச்­சா­ளர்­கள் நகைச்­சு­வை­ உணர்­வு­ட­னும் சிந்­த­னை­யைத் தூண்­டும் வித­மா­க­வும் பேசி­யது அரு­மை. இது­போன்ற நிகழ்­வு­கள் தமி­ழு­ணர்­வை­யும் ஆர்­வத்­தை­யும் தூண்­டு­கின்­றன," என்று கூறி­னார்.

தயா­ரிக்­கப்­பட்ட பேச்­சுப் போட்­டிப் பிரி­வில் பேச்­சா­ளர் பாலா வெங்­கட்­டும், தயா­ரிப்­பின்றி அரங்­கப் பேச்­சுப் போட்­டி­யில் பேச்­சா­ளர் பிரி­யங்கா நேரு­வும் வாகை சூடி­னர்.

போட்­டி­யில் வெற்­றி­ பெற்­றோ­ருக்­குப் பரி­சுக்கோப்­பை­களும் கலந்­து­கொண்­ட­வர்­க­ளுக்­குப் பங்­கேற்­புச் சான்­றி­தழ்­களும் வழங்­கப்­பட்­டன.