தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாயும் ஆன தந்தை, தோள் கொடுக்கும் தனயன்

2 mins read
a19b3983-8691-443c-a580-85893dc9de47
-

கி. ஜனார்த்­த­னன்

மக­னுக்கு ஏழு வய­தாக இருக்­கும்­போது தன் மனைவி பிரிந்து சென்றதாகக் கூறிய திரு சசி­கு­மார், 49, இரு சிறு பிள்­ளை­களைப் பார்த்­துக்­கொள்­ளும் பொறுப்பை முழு­மை­யா­கச் சுமப்பதாகக் கூறினார்.

தாயா­ரு­டன் நல்­லு­றவு இல்­லாத கார­ணத்­தி­னால் அவ­ரது குடும்­பத்­தி­லி­ருந்­தும் ஆத­ரவு குறை­வாக இருந்­தது. விவா­க­ரத்து வழக்கு நடந்­து­கொண்­டி­ருந்த நேரத்­தில் பிள்­ளை­க­ளைத் தனியே பார்த்­துக்­கொள்ள வேண்­டி­யி­ருந்­த­தால் அவர் அதி­க­மாக விடுப்பு எடுக்க நேர்ந்­தது. அது­கு­றித்து வேலை­யிட மேற்­பார்­வை­யா­ளர் கடிந்­து­கொண்­டார்.

ஆறு ஆண்­டு­க­ளா­கத் திரு­மண உற­வில் விரி­சல்­கள் இருந்­த­போ­தும் திடீ­ரென்று குடும்­பம் உடைந்­த­தால் ஏற்­பட்ட திகைப்பு, நட்­டாற்­றில் விடப்­பட்­ட­தாக உணர்ந்த தவிப்பு எனத் தான் எதிர்கொண்ட மன அழுத்­த­மான கால­கட்­டம் அது என்று கூறி­னார் சசி­கு­மார்.

இங் டெங் ஃபோங் மருத்­து­வ­ம­னை­யில் பாது­கா­வல் அதி­கா­ரி­யா­கப் பணி­பு­ரி­யும் சசி­கு­மார், பெற்­றோர் இரு­வ­ரின் அத்­தனை பொறுப்­பு­களை­யும் தனி­ய­ராக ஏற்க வேண்டி இருந்­தது. வேலைக்­குச் செல்­கை­யில் சின்­னப் பிள்­ளை­கள் வீட்­டில் தனி­யாக இருக்­கி­றார்­களே என்ற எண்­ணம் அவ­ரைத் துன்­பு­றுத்­தும்.

பாசத்­தைப் பொழிந்து அவர்­க­ளு­டன் நெருக்­க­மாக இருப்­ப­தா­கக் கூறும் சசி­கு­மார், இள­மைப் பரு­வத்­தி­லேயே பொறுப்­பு­ணர்வை ஊட்­டி­ய­தா­கக் கூறி­னார்.

"உன் தங்­கை­யைப் பார்த்­துக்­கொள் என்று என் மக­னி­டம் அடிக்­கடி சொல்­வேன். நான் இல்­லாத நேரத்­தில் என் மகன் நான் ஏற்­கெ­னவே சமைத்த உண­வைப் பரி­மாறி என் மக­ளைக் கவ­னித்­துக் கொள்­வான். அவ­னது பொறுப்­பு­ணர்வு பல நேரங்­களில் எனக்கு நிம்­மதியைத் தந்­துள்­ளது," என்­றார் அவர்.

ஈராண்­டு­க­ளுக்­கு­முன் திரு சசி­கு­மா­ருக்கு பக்­க­வா­தம் ஏற்­பட்­டது. அந்­நே­ரத்­தில் மகன் பிர­வீன் தனக்­குத் தூணாக இருந்­த­தா­கக் குறிப்­பிட்­டார்.

தந்தை குடும்­பத்­திற்­காக அய­ராது உழைப்­பது அவர் மீதான அன்­பையும் மரி­யா­தை­யையும் அதிகரிப்பதாக அவ­ரது மகள் அஞ்­சனா கூறி­னார்.

பிர­வீ­னுக்கு இப்­போது 15 வயது. அஞ்­ச­னா­வுக்கு 12 வயது. பிள்­ளை­கள் சற்று வளர்ந்­து­விட்­ட­தால் அவர்­க­ளுக்கு மூவறை வீடு வாங்க ஆசைப்­ப­டு­வ­தா­கக் கூறி­னார் சசி­கு­மார்.